அரசமரம் மும்மூர்த்தியின் அம்சமாகத் திகழ்கிறது. ஸ்லோகம் ஒன்றில், மரங்களின் அரசனான அரசமரத்தின் வேர் பிரம்மாவின் அம்சமாகவும், நடுபாகம் விஷ்ணுவுக்கு உரியதாகவும், மேல் பாகம் சிவனுக்கு உரியதாகவும் விளங்குகிறது.இத்தகைய விருட்சங்களின் ராஜாவான அரசமரத்திற்கு நமஸ்காரம் என்று சிறப்பிக்கப்படுகிறது. பல ஞானிகள் இதன் அடியில் தியானம் செய்து அஷ்டமாசித்திகளைப் பெற்றனர். சித்தார்த்தர் அரசமரத்தின் அடியில் தவம் செய்தே புத்தராக மாறினார். அதனால் இதற்குபோதிமரம் என்று சிறப்பு பெயர் உண்டானது.கர்ப்பப்பை பலவீனமாக இருக்கும் பெண்கள் அதிகாலையில் அரசமரத்தைச் சுற்றி வந்தால் குறை நீங்கி விரைவில் குழந்தைப் பேறு அடைவர். இதன் அடியில் நாகர், விநாயகர் சிலைகளைப் பிரதிஷ்டை செய்யும் வழக்கம் தமிழகத்தில்மட்டும் உள்ள வழிபாட்டு முறையாகும். கார்த்திகை அமாவாசை மற்றும் சோமவாரத்தில் (திங்கள்கிழமை) அரசமரத்தைச் சுற்றி வந்தால் கிரகதோஷம் நீங்கி நல்வாழ்வு உண்டாகும் என்பது ஐதீகம். இந்த ஆண்டு கார்த்திகை அமாவாசை டிச. 11ல் வருகிறது.