நாகை மாவட்டம் மயிலாடுதுறை-மணல்மேடு செல்லும் வழியில் உள்ளது பட்டவர்த்தி. இங்கிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள வடவஞ்சாரில் அருள்பாலிக்கிறார் வெங்கடாசலபதி. சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதி மக்கள் அடிக்கடி திருமலையில் உள்ள திருப்பதி வெங்கடாசலபதியை தரிசித்து வருவதை வழக்கமாக கொண்டிருந்தனர். அவர்களுக்கு தங்களது இஷ்ட தெய்வமான வெங்கடாசலபதிக்கு தங்கள் ஊரிலேயே ஒரு கோயில் கட்டி வழிபாடு செய்ய விருப்பம் ஏற்பட்டது. அதன் அடிப்படையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடாசலபதியை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகின்றனர். திருப்பதி சென்று வெங்கடாசலபதியை தரிசிக்க இயலாதவர்கள் இங்குள்ள வந்து மூலவரை தரிசித்து விட்டுச் செல்கின்றனர்.