திருச்சியிலிருந்து சேலம் நெடுஞ்சாலையில் 46. கி.மீ. தொலைவில் உள்ள தொட்டியத்தில் மதுரை காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆடிப்பூரம் விசேஷம், நவராத்திரி உற்சவம், அம்பு போடுதல், கார்த்திகை தீபம், சுடலை விழா, சிவராத்திரி பங்குனி பெருந்திருவிழா போன்ற விழாக்கள் நடைபெறும். சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் தொட்டியத்தை சேர்ந்த சின்னான் என்ற பறை அடிப்பவர் தனது உறவினரை சந்திக்க மதுரை செல்ல நேரிட்டது. அப்போது மதுரையில் அருள்பாலித்து வந்த காளியம்மன் திருவிழா சென்று காளியை தரிசித்தார். அவ்விழா தொட்டியம் சின்னான் பறை கொட்டு மேளத்தை, ஸ்ரீ காளியம்மன் இன்புறுமாறு வாசித்து மதுரை காளியை அதிரவைத்தது. பின்னர் ஊர் திரும்பலாயினர். திரும்பும் வழியில் தன்னை யாரோ பின் தொடர்வதாக உணர்ந்தார். தன் பின்னல் வந்த வயதான மூதாட்டியை யார் என்று வினவியபோது தான் மதுரையில் காளி என்றும், சின்னானின் தப்பு கொட்டு மேளத்தின் இசையில் மயங்கி தொட்டியம் வர இருப்பதாகவும் கூறி மறைந்தார். பின் அந்த மூதாட்டி தொட்டியம் (கொளத்ரச நல்லூர்) வந்தபின், காவிரி வாய்க்கால் பகுதியில் உள்ள வன்னிமரத்தடியில் அமர்ந்தார். அதன்பின் ஊர்மக்கள் அனைவரும் அம்மனுக்கு கோயில் கட்டி மதுரை காளியம்மன் என்ற திருநாமம் சூட்டி வழிபட ஆரம்பித்தனர். இங்கு நடைபெறும் திருவிழாவின்போது எருமைகடா பலிகொடுத்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.