சித்திரை மாதம் நடக்கும் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தில் முக்கியமானது தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் சடங்காகும். இதன் தாத்பர்யம் என்ன தெரியுமா? பெருமாள் கோவிலுக்குப் போனால் நமக்கு தீர்த்தம் தருவார்கள். அழகர் வேடமணிந்தவர்களும் தண்ணீரை பீய்ச்சியபடியே தெருக்களில் வருவார்கள். அவர்களை அழகராகவே எண்ணும் பக்தர்கள் அவர்கள் பீய்ச்சும் தண்ணீரை தீர்த்தமாகவே கருதுகிறார்கள். அழகர் தீர்த்தம் நம்மை பரமபத வாசலுக்கு அழைத்துச் செல்லும் தன்மை உடையது.