தீப தரிசனம் பாவ விமோசனம் என்று சொல்வார்கள். வீட்டிலும், கோவிலிலும் சுவாமிக்கு விளக்கேற்றுவது அவசியம். பளிச்சென ஏற்றி இருக்கும் விளக்கையும், அழகான பெண்ணையும் ஒப்பிடுவார்கள். ஒரு குடும்பத்துக்கு மருமகளாக வரும் பெண்ணை விளக்கேற்ற வந்தவள் என்று பெரியவர்கள் சொல்வார்கள். ஏனென்றால் பெண்களால் தான் வீடும், நாடும் விளங்கிக் கொண்டிருக்கிறது. காலை, மாலையில் வீட்டில் விளக்கேற்றும் உரிமையும், கடமையும் பெண்களுக்கே உரியது. விளக்கை தரையில் ஏற்றி வைப்பது கூடாது. அதற்கென தனி பலகை இருக்க வேண்டும். அந்த பலகை எவ்வளவு உயரமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு வாழ்வும் உயரும் என்பது ஐதீகம். திருவண்ணாமலை, திருப்பரங்குன்றம் போன்ற உயரமான மலை மீது தீபமேற்றுகிறார்கள். இந்த தீபத்தை தரிசிப்பவர்களும் வாழ்வில் உயர வேண்டும் என்ற நோக்கமே இது.