ஸ்ரீராமஜெயம் - இதை முதலில் எழுதியது யார் தெரியுமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஏப் 2016 04:04
போரில் ராவணனை வீழ்த்திய ஸ்ரீ ராமர் இந்த நல்ல செய்தியை யார் ஜானகியிடம் சென்று சொல்வது என்று யோசிக்கும்பொழுது நான் நீ என்று பலர் முன்வருகிறார்கள். ஆனால் ஸ்ரீ ராமரோ சொல்லின் செல்வர் ஆஞ்சநேயர்தான் இதற்கு சரியான ஆள் என்று அனுமனிடம் அந்த பொறுப்பை ஒப்படைக்கிறார். ஸ்ரீ ராமரின் ஆணையை சிரமேற்கொண்டு சீதையின் இருப்பிடத்திற்கு வந்த ஆஞ்சநேயருக்கு சந்தோஷ மிகுதியால் பேச முடியவில்லை. கண்களில் ஆனந்த கண்ணீர் பெருகுகிறது. இதைக்கண்ட சீதைக்கோ ஏன் அனுமனின் கண்களில் கண்ணீர் என்ற கவலை. இதை சட்டென்று புரிந்துகொண்ட அனுமன் சந்தோஷத்தில் வாய் பேச முடியவில்லை என்றால் என்ன ஸ்ரீ ராமர் வெற்றி பெற்ற நற்செய்தியை எழுதி காண்பிக்கலாமே என்று ‘ஸ்ரீ ராமஜெயம் ‘ என்று எழுத அதைப்படித்த சீதாப்பிராட்டியாரும் செய்தியறிந்து சந்தோஷமடைந்தாராம்.