Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஹரே ராமா கோஷம் முழங்க ... பூவரசங்குப்பத்தில் நரசிம்மர் ஜெயந்தி விழா பூவரசங்குப்பத்தில் நரசிம்மர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆலங்குடி சுவாமிகள் ஆராதனை மகோற்சவம்
எழுத்தின் அளவு:
ஆலங்குடி சுவாமிகள் ஆராதனை மகோற்சவம்

பதிவு செய்த நாள்

21 மே
2016
10:05

திருவாரூர் : திருவாரூர் அருகே, முடிகொண்டானில், ஸ்ரீஆலங்குடி சுவாமிகளின் ஆராதனை மகோற்சவம் நேற்று நடந்தது. திருவாரூர் அருகே, முடிகொண்டான் கிராமத்தில்,ஸ்ரீ ஆலங்குடி சுவாமிகள் முக்தி அடைந்தார். இங்கு ஆண்டுதோறும், சுவாமிகளின் ஆராதனை மகோற்சவம் நடந்து வருகிறது.கடந்த, 13ம் தேதி, 81ம் ஆண்டு மகோற்சவம் துவங்கியது. அன்று இரவு, 7:00 மணிக்கு, ஸ்ரீமத் பாகவத மூல பாராயணம் நடந்தது. மறுநாள், 14ம் தேதி முதல், 19ம் தேதி வரை, காலை, 6:30 மணி முதல், 11:30 மணி வரை, அதிஷ்டானத்தில் ஸ்ரீமத் பாகவத மூல பாராயணம், சதுர்வேத பாராயணம், அதிஷ்டான பூஜையும், மண்டபத்தில், காலை, 8:00 முதல், 11:30 மணி வரை, அஷ்டபதி ஸம்ப்ரதாய பஜனையும், பகல், 12:00 மணிக்கு, பூஜோபசாரம், ஸமாராதனையும் நடந்தது. தினமும் பிற்பகல், 2:00 மணி முதல், 4:00 மணி வரை, ஸ்ரீ பிரேமிகசதகம் சங்கீர்த்தனம், மாலை, 4:00 மணி முதல், 6:00 மணி வரையும், இரவு, 7:30 மணி முதல், 9:30 மணி வரை, ஸ்ரீமத் பாகவத உபன்யாசமும், இரவு, 10:00 மணிக்கு, டோலோத்சவமும் நடந்தது. நேற்று காலை, 6:30 மணி முதல், 9:30 மணி வரை, அதிஷ்டானத்தில் ஸ்ரீமத்பாகவத மூல பாராயணம் பூர்த்தி, சதுர்வேத பாராயணம், அதிஷ்டான பூஜை நடந்தது. காலை, 10:00 மணிக்கு, மண்டபத்தில் ஆராதனைதுவங்கியது. மாலை, 4:00 மணிக்கு, ருக்மணி கல்யாணம்,பிரவசனம்; மாலை, 6:00 மணிக்கு, சுவாமிகள் வீதி உலா, இரவு, 7:00 மணிக்கு, மங்கள ஹாரத்தியுடன் மகோற்சவம் நிறைவுபெற்றது. விழா ஏற்பாடுகளை,ஸ்ரீ ஆலங்குடி சுவாமிகள் ஆராதனா சபா டிரஸ்ட் தலைவர் சுந்தரம்,நிர்வாக அறங்காவலர் தண்டபாணி, செயலர் சங்கரநாராயணன், பொருளாளர் சாமிநாதன் ஆகியோர்செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,–கும்பகோணத்தில் மாசிமகத்தையொட்டி, மகாமக குளத்தில் 12 சிவாலய தீர்த்தவாரி  நடந்தது. ... மேலும்
 
temple news
சிவகங்கை, நாட்டரசன்கோட்டையில் சிவகாமி சமேத கரிகாலசோழீஸ்வரர் கோயில் மாசி திருவிழா தேரோட்டம் ... மேலும்
 
temple news
கோவை காரமடை அருள்மிகு அரங்கநாத சுவாமி கோவில் மாசி மக தேரோட்டம் 02.03.2026 அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் தேவனாம்பட்டினம் கடற்கரையில் நடந்த மாசி மக தீர்த்தவாரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை ; மாசி மகத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை அடுத்த பள்ளிகொண்டாப்பட்டு பகுதியில் உள்ள கௌதம நதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar