நயம் என்பதற்கு அன்பு, அருள், அறம், ஆன்மிகம், நீதி, நேர்மை, பக்தி, இனிமை, நன்மை, விருப்பம், மகிழ்ச்சி, நற்பயன், நுட்பம், மிகுதி, மேம்பாடு என்று பல அர்த்தங்கள் உண்டு. நமக்கு வேண்டியவர் (உற்றவர்) நமக்கு விஷத்தைக் கொடுத்தாலும், அவர் மனம் கோணாமல் இருக்கும் பொருட்டு நாம் அதை மகிழ்ச்சியுடன் பருக வேண்டும். என்று ( குறள் -580) திருவள்ளுவர் நயத்தக்க நாகரிகம் என்பதற்கு விளக்கம் கூறியுள்ளார். இதற்கு உதாரணம் சாக்ரடீஸ். சுருக்கமாகச் சொன்னால், பிறர் மனம் புண்படாமல் பேசுவதும் பழகுவதும் நயத்தக்க நாகரிகமாகும்.