குரு ஜன.16ல் உங்கள் ராசிக்கு 5ம் இடத்துக்கு செல்கிறார். இது மிகவும் சிறப்பான நிலை. குடும்பத்தில் மகிழ்ச்சியைத் தருவார். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார். பெண்களால் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். சுக்கிரன் ஜன.27ல் இடம்மாறி சாதகமற்ற இடத்திற்கு சென்றாலும் கவலை வேண்டாம், காரணம் ஜன.30ல் புதன் சாதகமான நிலைக்கு வந்து நற்பலனை கொடுப்பார். இதனால் உங்கள் முயற்சிகளில் வெற்றி கிட்டும். புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். பெண்கள் மிகவும் உறுதுணையாக இருப்பர். திட்டங்கள் வெற்றி அடையும். மேலும் சனி,ராகு மாதம் முழுவதும் நன்மை தருவார்கள். வசதிகள் பெருகும். மனஉளச்சலும், உறவினர் வகையில் இருந்த பகையும் மறையும். மாத மத்தி வரை கணவன், மனைவி இடையே பிணக்குகள் வரலாம். ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும். அதன் பிறகு கணவன், மனைவி இடையே அன்னியோன்ய சூழ்நிலை இருக்கும். ஜன. 25,26, பிப்.7,8ல் விருந்து விழா என சென்று வருவீர்கள். பொருளாதார வளம் மேம்படும். சகோதரிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். அவர்களால் சுகம் ஏற்படும். செவ்வாயால் ஜன.16க்கு பிறகு அண்டை வீட்டார்களின் தொல்லை ஏற்படும். சிலரது வீட்டில் பொருட்கள் களவு போக வாய்ப்புண்டு. கவனம். ஒரு சிலருக்கு கடந்த மாதம் செவ்வாயால் பொருள் நஷ்டம் ஏற்பட்டிருக்கலாம். அதை ஈடுகட்டும் வகையில் இந்த மாதம் பொருள் வரவு அமையும்.
தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு ராகு தொழில் விருத்தியையும் தந்து கொண்டு இருக்கிறார். உங்கள் ஆற்றல் மேம்படும். பெண்களைப் பங்குதாரராகக் கொண்ட தொழில் மிக வளர்ச்சி அடையும். சூரியன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் அரசு வகையில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பது சிரமம். வரவுசெலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும் ஜன.16,17 பிப்.12ல் போட்டியாளர்கள் வகையில் நெருக்கடி ஏற்படும். ஜன.22,23,24ல் எதிர்பாராத வருமானம் கிடைக்கும். ஜன.14 பிப்.5,6,9,10ல் சிறு தடைகள் வரலாம்.
பணியாளர்களுக்கு சில பிரச்னைகள் வந்தாலும், குருவால் இருக்கும் இடம் தெரியாமல் போகும். பிப்.1,2ல் உன்னதமான பலன்கள் நடக்கும். எதிலும் வெற்றி காணலாம். அதிகாரம் கொடி கட்டி பறக்கும். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு வேலையில் மாத மத்தி வரை பொறுமையும் நிதானமும் தேவை. ஜன.30க்கு பிறகு சிறப்பான முன்னேற்றத்தை காணலாம். பெண்ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.
கலைஞர்களுக்கு எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். வசதிகள் பெருகும். பெண்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். ஜன.27க்கு பிறகு எதிரிகளால் தொல்லை வரலாம். போட்டிகள் அதிகம் இருக்கும். அவப்பெயர் உருவாகலாம்.
அரசியல்வாதிகள் பலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியது இருக்கும். ஜன.20,21ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.
மாணவர்களுக்கு சேர்க்கை சகவாசத்தால் ஏற்பட்ட பிரச்னை மறையும். குரு பக்கபலமாக இருப்பதால் நல்ல வளர்ச்சியை காணலாம். சிறந்த மதிப்பெண்ணும், மதிப்பும் கிடைக்கும். போட்டிகளில் வெற்றி காணலாம்.
விவசாயிகள் அதிகமாக உழைக்க வேண்டும். பயறு வகைகள், பழ வகைகள் மூலம் நல்ல வருவாய் காணலாம். புதிய சொத்து வாங்க எண்ணத்தை தள்ளி வைக்கவும். வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.
பெண்களுக்கு கணவன் மற்றும் குடும்பத்தாரிடம் நற்பெயர் கிடைக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு புதிய பதவி தேடி வரும். சுயதொழில் செய்து வரும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். புத்தாடை, நகை வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரும். உடல்நலம் சுமாராக இருக்கும். பயணத்தின் போது சற்று கவனம் தேவை.
நல்ல நாள்: ஜன.15,16,22, 23,24,25,26, பிப்.1,2,3,4,7,8, 11,12
கவன நாள்: ஜன. 27,28,29 சந்திராஷ்டமம். இந்த நாட்களில் முக்கிய முடிவுகளைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட எண்: 3,5,7 நிறம்: கருப்பு , மஞ்சள்
பரிகாரம்: சூரியனை வணங்குங்கள். கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். முருகனை வணங்குங்கள். துர்க்கை வழிபாடு உங்கள் சிரமத்தைப் போக்கி மன தைரியத்தை வரவழைக்கும். வெள்ளிக்கிழமை சுக்கிரனுக்கு வெண்பட்டு சாத்தி வழிபடுங்கள்.
மேலும்
சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »