பதிவு செய்த நாள்
11
ஜன
2017
02:01
மனதிடம் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே!
உங்கள் நட்புக்கிரகமான புதன் ஜன. 30 வரை சாதகமான நிலையில் இருந்து நற்பலனை கொடுப்பார். அதன்பின் அவர் தரும் பலன் குறையும். சுக்கிரன் ஜன.27ல் சாதகமான இடத்துக்கு வந்து நற்பலன் தருவார். செவ்வாய் ஜன.16ல் இருந்து நன்மை தருவார். சூரியன் 9ம் இடத்தில் இருப்பதால் சிலரது பொல்லாப்பை சந்திக்க நேரிடலாம். வீண் விவாதங்களை குறைத்து அனைவரிடமும் அனுசரித்து போவது நல்லது. குரு ஜன.16ல், 6ம் இடத்திற்கு அடியெடுத்து வைக்கிறார். இது சாதகமான நிலை என்று சொல்ல முடியாது. உடல்நலம் பாதிக்கலாம். மனதில் தளர்ச்சி வரலாம். இருப்பினும் பொதுவான கிரகநிலை அடிப்படையில், குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்களால் பலன் கிடைக்கும். பொருளாதார வளம் கூடும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புத்தாடை, நகை வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்க யோகம் கூடி வரும். சகோதரிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். அவர்கள் வகையில் பணம் கிடைக்கும். பிப்.1,2ல் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் ஜன.15,16 பிப்.11,12ல் அவர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும்.
தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். விரிவாக்கப்பணிகளை விரைந்து செய்வீர்கள். போட்டியாளர் வகையில் தொல்லை இருக்காது. ஜன.27க்கு பிறகு வீண் செலவு ஏற்பட வாய்ப்பு உண்டு. சற்று கவனம் தேவை. சிலர் தீயோர் சேர்க்கைக்கு ஆளாகலாம். எனவே யாரிடமும் எச்சரிக்கையுடன் பழகவும். பிப்.3,4,7,8ல் முயற்சிகளில் தடைகள் வரலாம். பண விரயம் ஆகலாம். இந்நாட்களில் கல்லாப்பெட்டியை நீங்களே கவனிக்கவும்.
பணியாளர்களுக்கு முன்னேற்றம் உண்டு. அதிகாரிகளின் ஆதரவும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். ஜன.30க்கு பிறகு வேலைப்பளு அதிகரிக்கும். சிலருக்கு இடமாற்றம் வரலாம். சக பணியாளர் விஷயத்தில் பொறுமையுடன் விட்டுக் கொடுத்து போகவும். வேலையில் கவனமாக இருக்கவும். ஜன.16க்கு பிறகு பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றம் காணலாம். கோரிக்கை நிறைவேறும். புதிய பதவி தேடி வரும். ஜன.30,31ல் கூடுதல் பலன்களைக் காணலாம். எதிலும் வெற்றி காணலாம். உங்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்கும்.
கலைஞர்களுக்கு மாத துவக்கத்தில் எதிரிகள் தொல்லை, போட்டி அதிகம் இருக்கும். அவப்பெயர் வரலாம். ஜன.27க்கு பிறகு நிலைமை சீராகி புகழ் பாராட்டு கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களும் வந்து சேரும்.
அரசியல்வாதிகள் ஜன.16க்கு பிறகு முன்னேற்றம் காண்பர். எதிர்பார்த்த பதவி கிடைக்கும். ஜன.17,18,19ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.
மாணவர்கள் முன்னேற்றப் பாதையில் செல்வர். ஆசிரியர்களிடம் நற்பெயர் கிடைக்கும். ஜன.30க்கு பிறகு புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியிருக்கும். சிலர் கெட்ட சகவாசத்திற்கு வழிவகுக்கலாம். கவனம் தேவை.
விவசாயிகளுக்கு வளம் கொழிக்கும் மாதம். விளைச்சல் சிறப்பாக இருக்கும். வருமானம் அதிகரித்து புதிய சொத்துக்கள் வாங்கும் நிலை உருவாகலாம். தொய்வு நிலை மாறும். நல்ல மகசூல் கிடைக்கும். கால்நடை வகையிலும் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். வழக்கு
விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். பக்கத்து நிலக்காரர்கள் வகையில் இருந்து வந்த தொல்லை மறையும்.
பெண்கள் வளர்ச்சி அடைவர். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். ஜன.27க்கு பிறகு பணவரவு அதிகம் இருக்கும். சொந்தபந்தங்கள் வருகை உண்டு. ஜன.22,23,24 மகிழ்ச்சியாக அமையும். குடும்ப சுகம் மேம்படும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். ஜன.14, பிப்.9,10ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப்பெறலாம். பயணத்தின் போது கவனம் தேவை. சிலருக்கு உஷ்ணம், தோல் தொடர்பான நோய் இருந்தால் பூரண குணமடையும்.
நல்ல நாள்: ஜன.14,20,21,22,23,24,30,31 பிப்.1,2,5,6,9,10
கவன நாள்: ஜன. 25,26 சந்திராஷ்டமம். இந்த நாட்களில் முக்கிய முடிவுகளை தவிர்ப்பது நன்மை தரும்.
அதிர்ஷ்ட எண்: 3,5 நிறம்: வெள்ளை, சிவப்பு
பரிகாரம்: வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வாருங்கள். ராகு, கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கை வழிபாடு உங்கள் நல்வாழ்வுக்கு துணை நிற்கும். வெள்ளிக்கிழமை சுக்கிரனுக்கு அர்ச்சனை செய்யுங்கள். சனிக்கிழமை பெருமாளை வழிபடுங்கள்.