துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) பதவி உயர்வு தேடி வருது! இடமாற்றம் உறுதியாகுது!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13பிப் 2017 12:02
எதிலும் நடுநிலையை விரும்பும் துலாம் ராசி அன்பர்களே!
இந்த மாதம் செவ்வாய் பிப்.26- வரையும், புதன் பிப்.16 வரையும்- மற்றும் மார்ச் 5-க்கு பிறகும் நற்பலனைத் தருவார்கள். ராகு மாதம் முழுவதும் நற்பலனைக் கொடுப்பார். இதனால் பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். பெண்கள் மிக உறுதுணையாக இருப்பர். தற்போது துலாம் ராசியில் இருக்கும் குரு மார்ச் 10-ல் வக்கிரம் அடைந்து துலாம் ராசிக்கு மாறுகிறார். அவரால் ஏற்பட்ட கலகம், விரோதம், மந்தநிலை முதலியன மறையும். ஆனால் அதன்பிறகு அவரால் பொருள் நாசம் ஏற்படும். மனதில் வருத்தம் உருவாகும். வீண் அலைச்சல் ஏற்படும். செவ்வாயால் பொருளாதார வளம் இருக்கும். அபார ஆற்றல் பிறக்கும். நகை-, ஆபரணங்கள் வாங்கலாம். பிப்.26-க்கு பிறகு அலைச்சல் ஏற்படும். மனவேதனை ஏற்படலாம். மனைவி வகையில் தொல்லை வரலாம். குடும்பச்செலவுக்கு மாதத் தொடக்கத்தில் போதுமான பணம் சேரும். மகிழ்ச்சி இருக்கும். பிப்.16,17,18ல் பெண்கள் மூலம் உதவி கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். முயற்சிகளில் வெற்றி ஏற்படும். பிப்.13, மார்ச் 11,12-ல் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். பிப்.16-க்கு பிறகு தொழில் ரீதியாக குடும்பத்தை விட்டு பிரிந்து செல்லும் நிலை உருவாகலாம். மார்ச் 5-க்கு பிறகு எடுத்த காரியம் வெற்றி அடையும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.
பணியாளர்கள் நல்ல வளர்ச்சி காண்பர். விரும்பிய இடத்திற்கு மாற்றம் பெறலாம். போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர். தனியார் துறை பணியாளர்கள் தங்கள் கோரிக்கைகளை பிப்.26-க்குள் கேட்டு பெற்று கொள்ளவும். பிப்.16ல் வேலை காரணமாக குடும்பத்தை பிரிந்து செல்பவர்கள், மார்ச் 5-க்கு பிறகு மீண்டும் ஒன்று சேருவர். அதன்பின் பதவி உயர்வு கிடைக்கும். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். மார்ச் 9,10-ல் எதிர்பாராத பணவரவு இருக்கும். தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு திட்ட முயற்சிகளில் அவ்வப்போது தடை வரலாம். ஆனாலும் உங்களின் விடாமுயற்சியால் எதையும் அனுகூலமாக்கி விடுவீர்கள். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். செல்வாக்கு, கவுரவம் சிறப்பாக இருக்கும். பிப்.16-க்கு பிறகு அலைச்சல் அதிகரிக்கும். வெளியூர் பயணம் ஏற்படலாம். மார்ச் 6,7,8-ல் சந்திரனால் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். பிப்.14,15, 19,20, மார்ச் 13-ல் கல்லாப்பெட்டியை உங்கள் பார்வையில் வைத்துக் கொள்ளுங்கள். இந்நாட்களில் போட்டி அதிகமாகும். சமயோசிதமாக செயல்பட்டால் இந்நாட்களிலும் விற்பனையைப் பெருக்கலாம்.
கலைஞர்களுக்கு முயற்சிகளில் தடையும், மனதில் சோர்வும் ஏற்படும்.
அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி பெறலாம்.
மாணவர்கள் மிகவும் சிறப்பான நிலையை அடைவர். பிப்.16- முதல் மார்ச் 5- வரை அதிக சிரத்தை எடுத்து படிப்பதன் மூலம் நல்ல மதிப்பெண் பெறலாம். மார்ச் 5க்கு பிறகுள்ள கிரகநிலையால் படிப்பில் நல்ல நிலையில் இருக்கலாம். பாடத்தில் மட்டும் அல்லாமல் விளையாட்டு, கலை உள்ளிட்ட பிற போட்டிகளிலும் வெற்றி காணலாம். புதன் சாதகமான இடத்தில் இருப்பதால் கூடுதல் பலனை எதிர்பார்க்கலாம்.
விவசாயிகளுக்கு நெல், உளுந்து, காய்கறி வகைகளில் நல்ல மகசூல் கிடைக்கும். கால்நடை செல்வம் பெருகும். புதிய சொத்து வாங்க நினைப்பவர்கள் பிப்.26-க்குள் பத்திரம் முடித்துக் கொள்ளவும். வழக்கு விவகாரங்களில் உங்களுக்கு சாதகமான நிலை ஏற்படும். இதைப் பயன்படுத்தி சமாதானமாக செல்ல முயற்சியுங்கள்.
பெண்கள் மாத தொடக்கத்தில் கணவன் மற்றும் குடும்பத்தாரிடம் விட்டு கொடுத்து போகவும். பிற்பகுதியில் இந்நிலை மாறி மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். பிப். 21,22,23-ல் புத்தாடை, நகை வாங்கலாம். பிப்.26-க்கு பிறகு தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். மார்ச் 2,3-ல் விருந்து, விழா என சென்று வருவீர்கள். சகோதரிகளால் வருமானம் கிடைக்கும். உடல்நிலை சுமாராக இருக்கும்.
நல்ல நாள்: பிப். 13,16,17,18,21,22,23, 28 மார்ச் 1,2,3,9,10,11,12
கவன நாள்: மார்ச் 4,5- சந்திராஷ்டமம். இந்த நாட்களில் வீண் விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும். பண விஷயத்திலும் கவனம் தேவை.
அதிர்ஷ்ட எண்: 4,8 நிறம்: நீலம், சிவப்பு
பரிகாரம்: சனிக்கிழமை சனீஸ்வரரை வழிபடுங்கள். மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு கல்வி உதவி செய்யுங்கள். பெருமாள், காயத்ரி தேவியை வணங்கி வரவும். வியாழக்கிழமை தட்சணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்து தானம் செய்யலாம். தினமும் சூரிய தரிசனம் செய்யவும்.
மேலும்
சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »