கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) பிரிந்த குடும்பம் சேரும் பிரச்னைக்கு தீர்வு வரும்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13பிப் 2017 12:02
கடமை உணர்வு மிக்க கன்னி ராசி நேயர்களே!
இந்த மாதம் மார்ச் 10- வரை குரு நன்மைகளைத் தருவார். புதன் பிப்.16-ல் இருந்து மார்ச் 5-வரை நன்மை தருவார். சூரியன், சனி, கேது மாதம் முழுவதும் காரிய அனுகூலத்தையும் பொருளாதார வளத்தையும், தொழில் விருத்தியையும் தருவார்கள். குடும்பத்திலும், வெளியிடத்திலும் மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். பொருளாதார வளம் அதிகரிக்கும். அக்கம் பக்கத்தினர் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும். கேதுவால் உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். நகை, -ஆபரணங்கள் வாங்கலாம். குடும்பத்தில் கடந்த மாதம் எண்ணற்ற பிரச்னைகள் நிகழ்ந்திருக்கலாம். கணவன், மனைவி இடையே சண்டை சச்சரவும் பிரிவும் ஏற்பட்டு இருக்கக் கூடும். இதற்கு காரணம் புதன் 5-ம் இடத்தில் இருப்பதே. இந்த இடர்பாடுகள் இந்த மாதம் மறையும். பிப்.16ல்- புதன் இடம் மாறுவதால் குடும்பத்தில் முழு அமைதி ஏற்படும். கணவன் மனைவி ஒன்றுபடுவர். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். வீட்டுக்கு தேவையான சகல வசதிகளும் பெறுவர். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பிப்.21,22,23-ல் உறவினர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும். ஆனால் மார்ச் 9,10-ல் உறவினர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். மார்ச் 5-க்கு பிறகு புதனால் குடும்பத்தில் மீண்டும் சிறு குழப்பம் வரும். சிற்சில விஷயங்களில் பொறுமையாகவும், விட்டு கொடுத்து போகவும்.
பணியாளர்களுக்கு உயர்பதவி கிடைக்கும். பிப்.16-க்கு பிறகு அலுவலகத்தில் மதிப்பு மேலும் அதிகரிக்கும். உங்கள் வருமானம் உயரும். பெண் ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். கோரிக்கைகள் நிறைவேறும். மார்ச் 5-க்கு பிறகு வேலைப்பளு உயரும். எனினும் யாரையும் நம்பி பணத்தையோ, முக்கிய பொறுப்பையோ ஒப்படைக்க வேண்டாம். அதிக சிரத்தை எடுத்து பணியாற்ற வேண்டியது இருக்கும். மார்ச் 6,7,8-ல் பணவரவுக்கு வழியிருக்கிறது.
தொழில், வியாபாரத்தில் நல்ல வருமானத்தைக் காணலாம். போட்டியாளர்களால் இருந்து வந்த முட்டுக்கட்டை விலகும். பொருளாதார வளம் கூடும். பிப்.13,16,17,18 மார்ச் 11,12ல் சந்திரனால் சிறுசிறு தடைகள் வரலாம். பண விரயம், உங்கள் முயற்சிகளில் தடைகள் வரலாம். இந்நாட்களில் நிறுவனத்தின் வரவு செலவை நீங்களே நேரடியாகக் கண்காணிப்பதன் மூலம் விரயத்தை தவிர்க்கலாம். பிப்.26,27-ல் எதிர்பாராத லாபம் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும். மார்ச்10-ந் தேதிக்கு பிறகு சற்று மந்த நிலை ஏற்படும்.
கலைஞர்கள், சிரத்தை எடுத்தால் தான் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்கள் வகையில் தொல்லை வரலாம்.
அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவியை பெற முடியாது. பிப்.24,25-ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.
மாணவர்கள் சிறப்பான பலனை காணலாம். ஆசிரியர்களிடம் மதிப்பு கூடும். பெற்றோரின் பாராட்டு, பரிசு பெறும் வகையில் படிப்பு, போட்டிகளில் வெற்றி கிடைக்கும். மார்ச் 5க்கு பிறகு கஷ்டப்பட்டு படிக்க வேண்டியதிருக்கும். எனினும், குரு பார்வை பக்க பலமாக இருப்பதால் உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்கும்.
விவசாயிகள் உழைப்புக்கு ஏற்ற வருமானத்தைக் காணலாம். புதிய சொத்து வாங்கும் திட்டம் தள்ளிப் போகும். வழக்கு, விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம். புதிய வழக்குகளில் சிக்கி விடாதீர்கள்.
பெண்களுக்கு பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். பிப்.16-க்கு பிறகு எடுத்த காரியம் வெற்றி அடையும். தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். பணியாற்றும் பெண்களின் கோரிக்கை நிறைவேறும். சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். வேலையின்றி இருக்கும் படித்தவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு. பிப்.19,20-ல் புத்தாடை, நகை வாங்கலாம். பிப்.28, மார்ச் 1-ல் விருந்து, விழா என சென்று வருவீர்கள். மார்ச் 5-க்கு பிறகு கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. உடல்நிலை நன்றாக இருக்கும்.
நல்ல நாள்: பிப்.14,15,19,20,26,27,28, மார்ச் 1,6,7,8,9,10.
கவன நாள்: மார்ச் 2,3 சந்திராஷ்டமம். இந்த நாட்களில் அடுத்தவர் விஷயத்தில் தலையிட வேண்டாம்.
அதிர்ஷ்ட எண்: 1,9 நிறம்: கருப்பு, சிவப்பு
பரிகாரம்: முருகன் கோவிலுக்கு செல்லத் தவறாதீர்கள். ஏழைகளுக்கு இயன்ற உதவிகளைச் செய்யுங்கள். துர்க்கை வழிபாடு நடத்துங்கள். வெள்ளிக்கிழமை சுக்கிரனுக்கு வெண்பட்டு சாத்தி வழிபடுங்கள்.
மேலும்
சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »