Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் சிருங்கேரி மடத்தில் ... மருதாநதியில் பக்தர்களின் வெள்ளத்தில் இறங்கினார் அழகர் மருதாநதியில் பக்தர்களின் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடியில் ‘பச்சை’ பட்டு உடுத்தி ‘கள்ளழகர்’ வைகை ஆற்றில் இறங்கினார்
எழுத்தின் அளவு:
பரமக்குடியில் ‘பச்சை’ பட்டு உடுத்தி ‘கள்ளழகர்’ வைகை ஆற்றில் இறங்கினார்

பதிவு செய்த நாள்

11 மே
2017
12:05

பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள்(அழகர்) கோயில் சித்திரைத் திருவிழாவில், பக்தர்களின் ‘கோவிந்தா’ கோஷம் விண்ணை முட்ட ‘கள்ளழகர்’ பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார்.

பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் மே 5 ம் தேதி சித்திரைத் திருவிழா காப்பு கட்டுடன் துவங்கியது. மே 9 ல் காலை 8:30 மணிக்கு பெருமாள், கருப்பணசாமிக்கு கும்பதிருமஞ்சனம் நடந்தது. பின்னர் அதிகாலை 2.00 மணிக்கு சுந்தரராஜப் பெருமாள் பூப்பல்லக்கில் ‘கள்ளழகர்’ திருக்கோலத்தில் அருள்பாலித்தார். கோயில் வெளியில் வந்த அழகர் காவல் தெய்வம் கருப்பண்ணசாமியிடம், விடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து தீவட்டிகள் வெளிச்சத்தில், வாண வேடிக்கைகள், மேள, தாளம் முழங்க பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ‘கோவிந்தா’ கோஷம் முழங்க 3:18 மணிக்கு வைகை ஆற்றில் இறங்கினார். ‘அழகர்’ பச்சை பட்டு உடுத்தி வந்தார்.

இதனால் நல்ல மழை பெய்து வளம் பெருகும் என அர்ச்சகர்கள் தெரிவித்தனர்.  காட்டுப்பரமக்குடி, மஞ்சள்பட்டினம் வழியாக, ஆற்றுப்பாலம் அருகில் ஆயிரம் பொன் சப்பரத்தில் மதியம் 2:30 மணிக்கு அருள்பாலித்தார். மேலும் பெரியபஜார், பெருமாள் கோயில் தெரு, எமனேஸ்வரம் வழியாக, இரவு 11 மணிக்கு காக்காதோப்பு பெருமாள் கோயிலை அடைந்தார். வழிநெடுகிலும் நுாற்றுக்கணக்கான மண்டகப்படிகளில் அழகரை வரவேற்றனர். விழா ஏற்பாடுகளை சுந்தரராஜப் பெருமாள் தேவஸ்தான மேனேஜிங் டிரஸ்டி அகஸ்தியன், டிரஸ்டிகள் மாதவன், நாகநாதன், கெங்காதரன், கண்ணன் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில், ந.வைரவன்பட்டி வளரொளிநாதர் கோயில்களில் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தில் இன்று மோகினி ... மேலும்
 
temple news
திருப்பதி;  ஜனாதிபதி திரௌபதி முர்மு திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி இன்று தரிசனம் ... மேலும்
 
temple news
டில்லி; டில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ ... மேலும்
 
temple news
கோவை;  கார்த்திகை மாதம் அனுஷம் நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை வடவள்ளி கஸ்தூரி நாயக்கன்பாளையம் கே. எஸ். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar