Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அமர்நாத் புனித யாத்திரை: 600 பேருக்கு ... தருமபுரம் ஆதீனத்தில் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி தருமபுரம் ஆதீனத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மழை வேண்டி திருத்தணி முருகன் கோவிலில் சிறப்பு யாகம்
எழுத்தின் அளவு:
மழை வேண்டி திருத்தணி முருகன் கோவிலில் சிறப்பு யாகம்

பதிவு செய்த நாள்

19 மே
2017
12:05

திருத்தணி: மழை பெய்ய வேண்டி, திருத்தணி முருகன் கோவிலில், வருண பகவானுக்கு வேள்வி யாகம் நேற்று முன்தினம் இரண்டாவது முறையாக நடந்தது. திருத்தணி முருகன் மலைக்கோவில் வளாகத்தில், இந்து சமய அறநிலைய துறை ஆணையர் உத்தரவின் பேரில், மழை பெய்ய வேண்டும் என, வருண பகவானுக்கு சிறப்பு வேள்வி பூஜை, 30ம் தேதி நடந்தது. இந்நிலையில், இரண்டாவது முறையாக வருண பகவானுக்கு வேள்வி பூஜை, நேற்று முன்தினம், நடந்தது. இதற்காக கோவில் வளாகத்தில், ஒரு யாகசாலை, ஒன்பது கலசங்கள் வைத்து வருண வேள்வி, வருண காயத்ரி ஜபம், வருண சூக்க பாராயணம் போன்றவை நடந்தது. காலை, 7:00 மணிக்கு, யாகம் துவங்கி, காலை, 10:00 மணி வரை நடந்தது. அந்த நேரத்தில், மேகவர்ஷினி, அமிர்தவர்ஷினி, ரூபா கல்யாணி, ஆனந்த பைரவி ஆகிய ராகங்களில் நாதஸ்வர குழுவினர் வாசித்தனர். பின், ஓதுவா மூர்த்திகள் மழை வேண்டல் தேவார பதிகம் பாடினர். முன்னதாக, நந்தி பகவான் சன்னிதியில் தற்காலிக சுவர் எழுப்பி, நீர் நிரப்பி அதன்பின், கலசங்கள் வைத்து, 108 விசேஷ மூலிகைகளை கொண்டு ஆண்டு வேள்வி நடத்தப்பட்டது.பின், மூலவர் மற்றும் கோவில் வளாகத்தில் உள்ள ஆபத்சகாய விநாயகர், சண்முகர், வள்ளி, தெய்வானை, துர்க்கையம்மன் மற்றும் உற்சவர் ஆகிய சன்னிதிகளில் சிறப்பு பூஜை மற்றும்தீபாராதனை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் சிவாஜி, மற்றும் ஊழியர்கள் செய்து இருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் மலையைக் காக்கும் அறப்போராட்டத்திற்காக மதுரை, பழங்காநத்தத்தில் முருக ... மேலும்
 
temple news
சென்னை; சூரியனின் வடதிசையில், தை மாதம் முதல் ஆனி மாதம் வரை பயணிக்கும் மாதங்கள், உத்திராயண புண்ணிய காலம். ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், பூபதி திருநாள் எனப்படும் தை தேர் திருவிழா, கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை ஸ்ரீவாரி கோவிலில் இன்று (பிப்.,4) ரதசப்தமி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
கோவை; சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் கோவிலில் தை மாதம் நான்காவது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar