Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அமர்நாத் புனித யாத்திரை: 600 பேருக்கு ... தருமபுரம் ஆதீனத்தில் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி தருமபுரம் ஆதீனத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மழை வேண்டி திருத்தணி முருகன் கோவிலில் சிறப்பு யாகம்
எழுத்தின் அளவு:
மழை வேண்டி திருத்தணி முருகன் கோவிலில் சிறப்பு யாகம்

பதிவு செய்த நாள்

19 மே
2017
12:05

திருத்தணி: மழை பெய்ய வேண்டி, திருத்தணி முருகன் கோவிலில், வருண பகவானுக்கு வேள்வி யாகம் நேற்று முன்தினம் இரண்டாவது முறையாக நடந்தது. திருத்தணி முருகன் மலைக்கோவில் வளாகத்தில், இந்து சமய அறநிலைய துறை ஆணையர் உத்தரவின் பேரில், மழை பெய்ய வேண்டும் என, வருண பகவானுக்கு சிறப்பு வேள்வி பூஜை, 30ம் தேதி நடந்தது. இந்நிலையில், இரண்டாவது முறையாக வருண பகவானுக்கு வேள்வி பூஜை, நேற்று முன்தினம், நடந்தது. இதற்காக கோவில் வளாகத்தில், ஒரு யாகசாலை, ஒன்பது கலசங்கள் வைத்து வருண வேள்வி, வருண காயத்ரி ஜபம், வருண சூக்க பாராயணம் போன்றவை நடந்தது. காலை, 7:00 மணிக்கு, யாகம் துவங்கி, காலை, 10:00 மணி வரை நடந்தது. அந்த நேரத்தில், மேகவர்ஷினி, அமிர்தவர்ஷினி, ரூபா கல்யாணி, ஆனந்த பைரவி ஆகிய ராகங்களில் நாதஸ்வர குழுவினர் வாசித்தனர். பின், ஓதுவா மூர்த்திகள் மழை வேண்டல் தேவார பதிகம் பாடினர். முன்னதாக, நந்தி பகவான் சன்னிதியில் தற்காலிக சுவர் எழுப்பி, நீர் நிரப்பி அதன்பின், கலசங்கள் வைத்து, 108 விசேஷ மூலிகைகளை கொண்டு ஆண்டு வேள்வி நடத்தப்பட்டது.பின், மூலவர் மற்றும் கோவில் வளாகத்தில் உள்ள ஆபத்சகாய விநாயகர், சண்முகர், வள்ளி, தெய்வானை, துர்க்கையம்மன் மற்றும் உற்சவர் ஆகிய சன்னிதிகளில் சிறப்பு பூஜை மற்றும்தீபாராதனை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் சிவாஜி, மற்றும் ஊழியர்கள் செய்து இருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; கோவையில் காவல் தெய்வம் கோனியம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரின் நடுவே ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை பட்டத்தரசி ராம் நகர் நாகநாதர் கோயிலில் நடைபெற்ற மண்டலாபிஷேக விழாவில் திரளான ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையத்தில் வைத்தியநாதர் தையல் நாயகி தாயார் மற்றும் 63 நாயன்மார்கள் சிலைகள் பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு, மீனம்பாக்கத்தில் 1,200 பெண்கள் ஒரே இடத்தில் ... மேலும்
 
temple news
 ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் மாசி மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar