Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சமண தீர்த்தங்கரர் சிற்பம்: ... மயூரநாதர் கோவிலில் காது குத்தி வெளிநாட்டு பக்தர்கள் வழிபாடு மயூரநாதர் கோவிலில் காது குத்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மது குடிப்பதை மறக்க கயிறு கட்டி வழிபாடு
எழுத்தின் அளவு:
மது குடிப்பதை மறக்க கயிறு கட்டி வழிபாடு

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2017
12:07

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட் டம், கீரனுார் அருகே, மது பழக்கத்தை மறக்க, கோவிலில் கயிறு கட்டப்படுகிறது. புதுக்கோட்டை மாவட் டம், கீரனுார் அருகே, கிள்ளுக்கோட்டை பகுதியில், 1,000 ஆண்டுகளுக்கு முந்தைய, பழமையான வனதுர்க்கை அம்மன் கோவில் உள்ளது. இங்கு, வாரம்தோறும் செவ்வாய் கிழமை, காலை, 6:00  முதல், மாலை, 5:00 மணி வரை, பிரார்த்தனை மற்றும் பரிகார பூஜை நடத்தப்படுகிறது.

குறிப்பாக, மதுவுக்கு அடிமையானவர்களை மீட்க, சிறப்பு கயிறு கட்டப்படுகிறது. இக்கோவிலில், 40 ரூபாய்க்கு, தேங்காய், வாழைப்பழம், எலுமிச்சம் பழம் ஆகியவற்றுடன், 2 முழம் சிகப்பு கயிறும் தருகின்றனர். கோவில் அர்ச்சகர் ராஜா சிவாச்சாரியார், கொடி மரத்தின் முன், போதை ஆசாமியை நிற்க வைத்து, பலி பீடத்தில் சூடம் ஏற்றி, ‘மது அருந்த மாட்டேன்’ என, சத்திய பிரமாணம் எடுக்க வைக்கிறார். தொடர்ந்து, மூலிகை தண்ணீரை போதை ஆசாமி மீது, மூன்று முறை தெளித்து, கையில், சிவப்பு கயிறை கட்டி அனுப்புகிறார். அம்மன் முன், சத்தியம் செய்து கயிறு கட்டிய பின், மது அருந்தினால் அம்மனின் கோபத்துக்கு ஆளாகி, தெய்வ குத்தம் ஏற்பட்டு விடும் என பயந்து, பலர் குடியை விட்டு விடுகின்றனர். இந்த கோவிலுக்கு திண்டுக்கல், மதுரை, தஞ்சாவூர், திருச்சி மாவட்டங்களில் இருந்து, ஏராளமானோர் வந்து கயிறு கட்டிச் செல்கின்றனர். ராஜா சிவாச்சாரியார் கூறுகையில், ‘‘இந்த கோவிலுக்கு வந்து கயிறு கட்டிக் கொண்டவர்கள், உறுதியாக இருந்து, மது குடிப்பதை நிறுத்தி விடுகின்றனர். போதை பழக்கத்தை தடுக்க, என்னால் முடிந்ததை செய்து வருகிறேன்,’’ என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கோவிலூர்; மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் திருவண்ணாமலை, அபிதகுஜாம்பாள் சமேத அண்ணாமலையாருக்கு ... மேலும்
 
temple news
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த தை அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி; கன்னட இசையின் முன்னோடியான புரந்தர தாசரின் மூன்று நாள் ஆராதனைப் பெருவிழா, திருமலை திருப்பதி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழாவிற்கான ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவிளையாட்டம் அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் மாணிக்கவாசகர்  உலோக சிலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar