தெய்வீக அருள்பெற்ற மகான்களே சித்தர்கள். அவர்கள் தன்னலம் கருதாமல் உயிர்கள் மீது கருணை காட்டியவர்கள். அஷ்டமாசித்திகளால் அற்புதங்களை நிகழ்த்தியவர்கள். அதனால், சித்தர்கள் வாழ்ந்த மலைகளிலும், காடுகளிலும் உள்ள கோயில்களுக்கு பக்தர் கூட்டம் அலை மோதுகிறது. பிரபஞ்சத்தை இயக்கும் அருட்சக்தி கடவுள். அவருடைய அருளால் தான் சித்தர்களுக்கு மகிமை உண்டானது.