Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) அபார ... துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) எதிர்பாராத வருமானம் துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) ...
முதல் பக்கம் » பங்குனி ராசி பலன் (14.3.2024 முதல் 13.4.2024 வரை)
கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) பணப்புழக்கம் அதிகரிக்கும்
எழுத்தின் அளவு:
கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) பணப்புழக்கம் அதிகரிக்கும்

பதிவு செய்த நாள்

16 ஏப்
2018
12:04

மற்றவர் கருத்துக்கு மதிப்பு அளிக்கும் கன்னி ராசி அன்பர்களே!

இந்த மாதம் சுக்கிரன் ஏப்.21ல் இடம் மாறினாலும் மாதம் முழுவதும் நன்மை தருவார். புதன் மே 4ல் சாதகமான இடத்திற்கு வருகிறார். 2-ம் இடத்தில் உள்ள குரு, 11-ம் இடத்தில் உள்ள ராகுவாலும் தொடர்ந்து நற்பலன் உண்டாகும்.   ராகுவால் பொருளாதார வளம் அதிகரிக்கும். பொன், பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். பெண்கள் உறுதுணை யாக  செயல்படுவர். குரு சிறப்பாக உள்ளதால் கையில் பெரும் பணம் புழங்கும்.  வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க லாம்.குடும்பத்தில் ஆடம்பர வசதிகள் பெருகும்.  சகோதரிகள் ஆதரவுடன் இருப்பர். மே 3க்கு பிறகு கணவன், மனைவி இடையே இருந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். அதன் பின் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். முயற்சியில் வெற்றி உண்டாகும். ஆடை, அணிகலன்கள் வாங்கலாம்.

பிள்ளைகள் நற்செயலில் ஈடுபட்டு பெருமை சேர்ப்பர். ஏப். 27,28ல் விருந்து, விழா என சென்று வருவீர்கள். ஏப்.23,24ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும்.அதே நேரம் மே 4,5ல் உறவினர்கள் வகையில் மனக்கசப்பு வர வாய்ப்புண்டு. எனவே அப்போது அவர்கள் வகையில் நெருக்கம் வேண்டாம். தொழில், வியாபாரத்தில் வருமானம் தாராளமாக கிடைக்கும்.  ஆனால் எதிரிகளின் இடையூறு வரலாம். எனவே பகைவர்கள் வகையில் ஒருகண் எப்போதும் இருப்பது நல்லது.

அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்பட வில்லை. எனவே வரவு செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். தொழில் விஷயமாக வெளியூர் பயணம் ஏற்படும். ஏப். 25,26,29,30ல் சந்திரனால் சிறு தடைகள் வரலாம். மே 9,10ல் எதிர்பாராத வகையில் பணவரவு காணலாம். மே 3க்கு பிறகு முயற்சியில் இருந்த தடை மறையும். புதிய தொழில் முயற்சி வெற்றி பெறும். பணியாளர்கள் குறிப்பாக  தனியார் துறையில் வேலைபார்ப்பவர்கள் மே 3 வரை அதிக பளுவை சுமக்க வேண்டியது இருக்கும். வீண் அலைச்சல் இருக்கும். அதன்பிறகு புதனால் நல்ல முன்னேற்றம் காணலாம்.

அதிகாரிகள் அனுசரணையாக இருப்பர். சிலர் பதவி உயர்வு கிடைக்கப் பெறுவர். பணி நிமித்தமாக மனைவியை பிரிந்தவர்கள் ஒன்று சேர வாய்ப்புண்டு. ஆனால் அரசு வேலையில் இருப்பவர்கள் வேலையில் கூடுதல் அக்கறையுடன் இருக்கவும். அதிக சிரத்தை எடுத்தால் மட்டுமே கோரிக்கை நிறைவேறும்.  ஏப்.21,22 ல் பணியிடத்தில் அதிகாரம் கொடி கட்டி பறக்கும். கலைஞர்கள் பிற்போக்கான நிலையில் இருந்து விடுபடுவர். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். பாராட்டு, புகழ் தானாக வரும். சக பெண் கலைஞர்கள் ஆதரவுடன் செயல்படுவர்.  அரசியல்வாதிகளுக்கு பணப்புழக்கத்திற்கு குறைவிருக்காது. தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்கியவர்கள் அவர்கள் பிடியில் இருந்து மே 1 க்கு பிறகு விடுபடுவர். மே 6,7,8 ஆகிய நாட்களில் மனக்குழப்பம் ஏற்பட்டு மறையும்.  

பிற்போக்கான நிலையில் இருக்கும் மாணவர்கள்  மே 3க்கு பிறகு சிறப்பான நிலை காண்பர். குருவால்  நல்ல மதிப்பெண்கள், போட்டிகளில் வெற்றி போன்றவை கிடைக்கும். மேற்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். ஆசிரியர்களின் அறிவுரை நன்மைக்கு வழிவகுக்கும்.  விவசாயிகள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். கால்நடை வகையில் எதிர்பார்த்த பலன்கள் இருக்காது. புதிய சொத்து வாங்கும் எண்ணம்  தள்ளிப்போகும்.  வழக்கு விவகாரத்தில் மெத்தனம் வேண்டாம்.

பெண்களுக்கு ஏப்.14,15, மே 11,12,13 ஆகிய நாட்கள் சிறப்பான தாக  அமையும். சகோதரிகளின் உதவி கிடைக்கும். மே 3க்கு பிறகு  உங்களை புரியாதவர்கள் உங்களின் மேன்மை அறிந்து சரணடையும் நிலை வரலாம். சுபநிகழ்ச்சிகள் திட்டமிட்டபடி கைகூடும். குழந்தைகளால் பெருமை கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான வளர்ச்சி பெறுவர். மே1,2,3-ல் புத்தாடை-அணிகலன்கள் வாங்கலாம். பயணத்தின் போது சற்று கவனம் தேவை.   

* நல்ல நாள்: ஏப்.14,15,21,22,23,24,27,28,
* மே 1,2,3,9,10,11,12,13
* கவன நாள்:  ஏப்.16,17, மே 14 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 4,8 நிறம்:வெள்ளை, மஞ்சள்

* பரிகாரம்:
* திங்கட்கிழமை மாலை சிவாலய தரிசனம்
* செவ்வாயன்று முருகனுக்கு அபிஷேகம்
* சதுர்த்தியன்று விநாயகருக்கு  அர்ச்சனை

 
மேலும் பங்குனி ராசி பலன் (14.3.2024 முதல் 13.4.2024 வரை) »
temple news
அசுவினி; குரு சந்திரன் இணைவுடன் பிறக்கும் இந்த மாதத்தில் உங்கள் முயற்சிகள் யாவும் வெற்றியாகும். ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்; ஆற்றல் காரகனையும் கலைக்காரகனையும் தம்முள் கொண்டிருக்கும் உங்களுக்கு இந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3,4 ம் பாதம்: வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேற்றத்தை அடைந்து வரும் உங்களுக்கு இந்த மாதம் ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4ம் பாதம்; மனக்காரகனான சந்திரன், ஞானக்காரகனான குருவின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு இந்த ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு இந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar