பதிவு செய்த நாள்
11
ஜூலை
2018
04:07
குணத்தில் குன்றாக உயர்ந்த கும்ப ராசி அன்பர்களே!
இந்த மாதம் சூரியன், புதன், குரு, சனி, ராகு மாதம் முழுவதும் நன்மை தருவர். மேலும் சுக்கிரன் ஆக.2 க்கு பிறகு சாதக பலன் கொடுப்பார். சூரியனால் பகைவரை வெற்றி கொள்வீர்கள். பொருளாதார வளம் கூடும். சமூக கவுரவம் உயரும். புதனால் எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். தற்போது குருபகவான் 9-ம் இடத்தில் இருந்து நன்மை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார். அவரால் மனமகிழ்ச்சி அதிகரிக்கும்.
மனதில் உற்சாகம் பிறக்கும். எதிர்பார்ப்பு எளிதில் நிறைவேறும். சேமிக்கும் விதத்தில் பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் ஒவ்வொன்றாக பூர்த்தியாகும். தம்பதியர் இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். பொன், பொருள் சேரும். பெண்கள் உறுதுணையாக செயல்படுவர். குடும்ப வாழ்வு சிறக்கும். திருமணம் போன்ற சுபவிஷய பேச்சில் நல்ல முடிவு கிடைக்கும். கணவன், மனைவி இடையே அன்பு மேலோங்கும். ஆக.2 க்கு பிறகு வசதி வாய்ப்பு பெருகும். விருந்து விழா என சென்று வர வாய்ப்புண்டு. ஜூலை 30,31-ந் தேதிகளில் சகோதர வழியில் உதவி கிடைக்கும். ஜூலை 25,26ல் உறவினர் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் ஆக. 6,7ல் அவர்கள் வகையில் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்புண்டு. சற்று ஒதுங்கி இருக்கவும்.
பணியாளர்கள் புதன் பலத்தால் நல்ல வளர்ச்சி காணலாம். மேலதிகாரிகளின் ஆதரவால் கோரிக்கைகள் நிறைவேறும். பதவி உயர்வு தானாக வந்து சேரும். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். சக பெண் ஊழியர்கள் உதவிகரமாக செயல்படுவர். ஜூலை 22,23,24ல் சிறப்பான பலனை எதிர்நோக்கலாம். பணியிடத்தில் உங்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்கும். தொழில், வியாபாரத்தில் பொருளாதார வளம் சிறக்கும். தொழிலில் ஏற்பட்ட முட்டுக்கட்டைகள் விலகும். புதிய தொழில்அனுகூலத்தை தரும். ராகுவால் பகைவர் சதியை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். உங்களின் ஆற்றல் மேம்படும். ஆக.2 க்கு பிறகு பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகம் அதிக லாபத்தை கொடுக்கும். ஜூலை 27,28,29, ஆக.1,2 ல் சந்திரனால் சிறு தடைகள் குறுக்கிடலாம். ஆக.10,11 ல் திடீர் பணவரவுக்கு வாய்ப்புண்டு.
கலைஞர்களுக்கு பெண்கள் வகையில் இருந்த இடர்பாடுகள் ஆக.2 க்கு பிறகு மறையும். அதன் பின் அதே பெண்கள் தவறை உணர்ந்து உங்களுக்கு உதவிகரமாக செயல்படுவர்.ரசிகர்களின் மத்தியில் நற்பெயரும் புகழும் கிடைக்கும். புதிய ஒப்பந்தம் கையெழுத்துஆகும். அரசு வகையில் எதிர்பார்த்த பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்களுக்கு புதிய பதவி தேடி வரும். தொண்டர்கள் வழியில் பணம் செலவழிக்க நேரிடும். ஆக. 8,9 ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.
மாணவர்களுக்கு ஆசிரியர்கள், சான்றோர்களின் வழிகாட்டுதல் கிடைக்கும். விரும்பிய கல்வி நிறுவனத்தில் சேரும் வாய்ப்பு கிடைக்கும். புதன் சாதகமாக இருப்பதால் படிப்பில் நல்ல முன்னேற்றம் காண்பர். விவசாயிகளுக்கு வருமானத்திற்கு குறைவிருக்காது. பயறுவகைகள், மஞ்சள், நெல், கேழ்வரகு, கரும்பு, பனைத்
தொழில், பழவகைகள் போன்றவற்றில் நல்ல மகசூல் கிடைக்கும். புதிய சொத்து வாங்குவதற்கான அனுகூலம் இல்லை. வழக்கு விவகாரத்தில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
பெண்கள் சிறப்பான வளர்ச்சி காண்பர். புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் கூட உங்களின் மேன்மை அறிந்து சரணடையும் நிலை வரலாம். தடைபட்ட சுப விஷயபேச்சு நடந்தேறும்.
வேலைக்கு செல்லும் பெண்கள் சீரான வளர்ச்சி காண்பர். சுய தொழில் செய்து வரும் பெண்கள் வளர்ச்சி பெறுவர். வங்கியில் விண்ணப்பித்த கடன் கிடைக்கும். ஆக. 3,4,5ல் ஆடை, அணிகலன்கள் வாங்கும் வாய்ப்புண்டு. பெற்றோர் வீட்டில் இருந்து சீதனம் வரலாம். ஜூலை 17, ஆக. 12,13ல் விருந்து, விழா செல்வர்.
* நல்ல நாள்: ஜூலை 17, 22, 23,24,25,26,30,31, ஆக.3,4,5,10,11,12,13
* கவன நாள்: ஜூலை 18,19, ஆக. 14,15 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 1,3,9
* நிறம்: மஞ்சள், பச்சை
பரிகாரம்:
● செவ்வாயன்று முருகனுக்கு பால் அபிஷேகம்
● வெள்ளிக்கிழமை லட்சுமி சன்னதியில் நெய்தீபம்
● தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் வழிபாடு.