பதிவு செய்த நாள்
11
ஜூலை
2018
04:07
மன உறுதியுடன் பணியாற்றும் மகர ராசி அன்பர்களே!
இந்த மாதம் சுக்கிரன் ஆக.2ல் இடம் மாறினாலும் மாதம் முழுவதும் நற்பலன் தருவார். இதனால் ஆடம்பர வசதிகள் பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். பெண்கள்
ஆதரவுடன் செயல்படுவர். பொருளாதார வளம் பெருகும். மற்ற கிரகங்கள் அனைத்தும் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் எந்த ஒரு செயலையும் சற்று முயற்சி எடுத்தே நிறைவேற்ற வேண்டியதிருக்கும். ஆனால் உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்காமல் போகாது.
தற்போது 10-ம் இடத்தில் இருக்கும் குருபகவான் மன சஞ்சலத்தை ஏற்படுத்துவார். அதற்காக கவலைப்பட வேண்டாம். குருபகவான் சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரின் 5-ம் இடத்துப் பார்வை சிறப்பாக உள்ளது. இதனால் உங்களுக்கு வரும் இடையூறு அனைத்தும் முறியடித்து வெற்றிக்கு வழிவகுப்பார். ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவர் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரணடையும் நிலை ஏற்படும். புதனால் குடும்பத்தில் குழப்பம் நிலவும். மனைவி வகையில் பிரிவு ஏற்படலாம்.
கணவன், மனைவி ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும். ஆக.1 க்கு பிறகு பெண்கள் உங்களுக்கு உதவி கரமாக செயல்படுவர். குறிப்பாக ஜூலை 27,28,29 ஆகிய தேதிகளில் அவர்களால் ஆதாயம் கிடைக்கும். பணியாளர்களுக்கு சக பெண் ஊழியர்கள் உதவிகரமாக செயல் படுவர். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். ஆனால் உங்கள் திறமைக்கு ஏற்ற பலன் கிடைக்காமல் போகாது. பதவி உயர்வுக்கு தடை இருக்காது. மேல் அதிகாரிகளின் ஆதரவு ஓரளவு கிடைக்கும். ஜூலை 20,21, ஆக.16 ல் சிறப்பான பலனை எதிர்நோக்கலாம். சிலர் பணி விஷயமாக வெளியூர், வெளிநாடு செல்ல நேரிடும். தொழில், வியாபாரத்தில் அனுபவசாலிகளின் ஆலோசனைகளை ஏற்பது அவசியம். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் முன்னேற்றம் அடையும். சனியால் பண இழப்பு, வெளியூர் பயணம், எதிரிகளின் இடையூறு அவ்வப்போது ஏற்படலாம். ஆக.8,9ல் எதிர்பாராத வகையில் லாபம் கிடைக்க வாய்ப் பிருக்கிறது. ஜூலை 25,26,30,31ல் சந்திரனால் சிறு தடைகள் வரலாம்.
கலைஞர்களுக்கு பெண்கள் வகையில் இருந்த இடர்பாடு மறையும். அதன் பின் அதே பெண்கள் தவறை உணர்ந்து உங்களுக்கு உதவிகரமாக செயல்படுவர். விடாமுயற்சியால் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் உழைப்புக்கு ஏற்ற பலனை எதிர்பார்க்க முடியாது. தொண்டர்களின் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வீர்கள்.
மாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். குருவின் பார்வையால் ஆசிரியர், பெற்றோர் ஆதரவு கிடைக்கும். விரும்பிய நிறுவனத்தில் எதிர்பார்த்த பாடப்பிரிவில் இடம் கிடைக்கும். வரும் கல்வி ஆண்டு சிறப்பாக அமையும். விவசாயிகள் சோளம், கேழ்வரகு ஆகிய பயிர்களில் அதிக வருமானம் அடைவர். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிப் போகும். கால்நடை வளர்ப்பின் மூலம் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வழக்கு, விவகாரத்தில் முடிவு சுமாராக இருக்கும். புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம்.
பெண்கள் சிறப்பான வாழ்வு அமையப் பெறுவர். கணவர் மற்றும் குடும்பத்தாரின் மத்தியில் நன்மதிப்பு பெறுவர். பிள்ளைகளின் விஷயங்களில் பொறுமையுடன் விட்டுக் கொடுத்து போகவும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கலாம். நிதானம் தேவை. ஆனால் வழக்கமான சம்பளம், பதவி உயர்வுக்கு தடை இருக்காது. ஆக.10,11 சிறப்பான நாட்களாக அமையும். விருந்து விழா என சென்று வருவீர்கள். சகோதரர்களால் உதவி கிடைக்கும். ஆக.1,ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து சீதனப்பொருள் வரப் பெறலாம்.
* நல்ல நாள்: ஜூலை 20, 21,23,24,25,27,28,29, ஆக.1,2,8,9,10,11,16
* கவன நாள்: ஜூலை 17, ஆக.12,13 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 4,8
* நிறம்: வெள்ளை, ஊதா
பரிகாரம்:
● வெள்ளியன்று ராகு காலத்தில் துர்க்கை வழிபாடு
● சதுர்த்தியன்று விநாயகருக்கு அருகம்புல் மாலை
● வியாழக்கிழமையில் தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை