பதிவு செய்த நாள்
16
ஆக
2018
04:08
எதையும் தாங்கும் இதயம் கொண்ட மேஷ ராசி அன்பர்களே!
புதன் 4-ம் இடத்தில் இருந்து நன்மைகள் தந்து கொண்டிருக்கிறார். அவர் ஆக.28ல் சிம்ம ராசிக்கு செல்வதால் அவரால் நற்பலனை கொடுக்க முடியாது. ஆனால் அவர் செப்.15ல் கன்னி ராசிக்கு செல்வதால் நற்பலன் கொடுப்பார். அதே போல் குருபகவான் தற்போது 7-ம் இடத்தில் இருந்து பல்வேறு நன்மை தந்து கொண்டிருக்கிறார். மற்ற கிரகங்கள் அனைத்தும் சாதகமற்ற நிலையில் இருப்பதால் எந்த ஒரு செயலையும் முயற்சி எடுத்தே நிறைவேற்ற வேண்டியதிருக்கும். ஆனால் உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்காமல் போகாது.
குருபகவானால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுபநிகழ்ச்சி நடந்தேறும். செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் குறைவின்றி பூர்த்தியாகும். ஆடம்பர வசதி பெருகும். பணியாளர்களுக்கு உயர்வு தருவார். குடும்பத்தில் பொன், பொருள் சேரும். ஆக. 28க்கு பிறகு அலைச்சல் அதிகரிக்கும். சிலர் குடும்பத்தை விட்டு பிரிந்து செல்லும் நிலை உருவாகலாம். தம்பதியிடையே மனக்கசப்பு வர வாய்ப்புண்டு. பொறுமையுடனும் விட்டுக் கொடுத்தும் போவது நல்லது. பிள்ளைகளிடம் எதிர்பார்த்த அனுகூலம் கிடைக்காது. செப்.14க்கு பிறகு புதிய முயற்சியில் வெற்றி கிடைக்கும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் திட்டமிட்டபடி நடந்தேறும். ஆக.26,27ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதே நேரம் செப்.6,7ல் அவர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்க வேண்டும்.
பணியாளர்களுக்கு வளர்ச்சியான காலகட்டம். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பதவி உயர்வு காண்பர். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். ஆனால் ஆக.28 க்கு பிறகு அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். மற்றவரிடம் அனுசரித்து போகவும். வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்து செல்ல நேரிடலாம். ஆக. 24,25ல் சந்திரனால் சிறப்பான பலனை எதிர் நோக்கலாம். உங்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்கும். செப்.14க்கு பிறகு புதிய பதவி தேடி வரும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர்.
தொழிலதிபர், வியாபாரிகளுக்கு பொருளாதார வளம் சீராக இருக்கும். லாபத்திற்கு குறைவிருக்காது. எதிரிகளால் தொல்லை ஏற்பட வாய்ப்புண்டு. புதிய தொழில் முயற்சியில் சுமாரான லாபம் கிடைக்கும். அதிக முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. செப்.11,12ல் அதிர்ஷ்டவசமாக வருமானம் வர வாய்ப்புண்டு.
ஆக.28,29,30, செப்.2,3ல் சந்திரனால் சிறு தடைகள் குறுக்கிடலாம். செப்.14க்கு பிறகு கூடுதல் வளர்ச்சியும், பணவரவும் இருக்கும். கலைஞர்களுக்கு ஆக.31 வரை சுக்கிரன் 6-ல் இருப்பதால் முயற்சியில் தடையும், மனதில் சோர்வும் ஏற்படலாம். அதன் பிறகு பெண்கள் வகையில் தொல்லைகள் குறுக்கிடலாம். சக கலைஞர்களின் உதவி ஓரளவு கிடைக்கும். விடாமுயற்சியால் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் உழைப்பிற்கு ஏற்ற பலனை பெற முடியாமல் போகலாம். மாணவர்கள் புதனால் நன்மைகள் கிடைக்கப் பெறுவர். ஆக.28 முதல் செப். 14 வரை முயற்சி எடுக்க வேண்டியதிருக்கும். போட்டி, பந்தயங்களில் எதிர்பார்த்த பலன் கிடைப்பது அரிது. ஆனால் குருவால் ஆசிரியர்களின் நல்ஆதரவு கிடைக்கும்.
விவசாயிகளுக்கு சுமாரான வருமானம் கிடைக்கும். பயறு வகைகள், பச்சை காய்கறிகள் போன்றவற்றில் நல்ல மகசூல் கிடைக்கும். குறைந்த முதலீட்டில் பயிர் செய்வது நன்மை தரும். பெண்களிடம் அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். கணவர் மற்றும் குடும்பத்தாரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். செவ்வாய், கேதுவால் உஷ்ண தொடர்பான நோய் வரலாம். பயணத்தின் போது கவனம் தேவை.
* நல்ல நாள்: ஆக. 17, 18, 24, 25, 26, 27, 31
* செப். 1, 4, 5, 11, 12, 13, 14
* கவன நாள்: ஆக.19, 20 செப்.15, 16 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 3, 7
* நிறம்: பச்சை, மஞ்சள்
பரிகாரம்:
● செவ்வாயன்று முருகன் கோயிலில் வழிபாடு
● தினமும் காலையில் நீராடி சூரிய நமஸ்காரம்
● வெள்ளிக்கிழமையன்று சுக்கிரனுக்கு அர்ச்சனை