Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) ... கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) சுப நிகழ்ச்சி கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) மகிழ்ச்சி
எழுத்தின் அளவு:
மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) மகிழ்ச்சி

பதிவு செய்த நாள்

16 ஆக
2018
05:08

மனதாலும் பிறருக்கு தீங்கு எண்ணாத மகர ராசி அன்பர்களே!

இந்த மாதம் புதன் ஆக.28 முதல் செப்.14 வரை நற்பலனைக் கொடுப்பார். அதோடு சுக்கிரன் ஆக.31 வரை சாதகமான நிலையில் இருந்து பலன் தர காத்திருக்கிறார்.  மற்ற கிரகங்கள் அனைத்தும் சாதகமற்ற நிலையில் இருப்பதால் எந்த ஒரு செயலையும் சற்று முயற்சி எடுத்தே நிறைவேற்ற வேண்டியதிருக்கும். ஆனால் உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்காமல் போகாது. குருபகவான் 10-ம் இடத்தில் இருக்கிறார். இது சிறப்பான நிலை என்று சொல்ல முடியாது. குரு பொருள் நஷ்டத்தையும், மன சஞ்சலத்தையும் ஏற்படுத்துவார். குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 5-ம் இடத்துப் பார்வை சிறப்பாக இருக்கிறது. அதன் மூலம் எந்த இடையூறையும் உடைத்தெறிந்து முன்னேற்றம் காணலாம். இதனால் உங்களது ஆற்றல் மேம்படும். மந்த நிலை மாறும். துணிச்சல் பிறக்கும். பண வரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவர்கள் சரணடையும் நிலை ஏற்படும்.

குடும்பத்தில் சுக்கிரனால் மகிழ்ச்சி நிலவும். பெண்களால் நன்மை கிடைக்கும். பொருளாதார வளம் பெருகும். புதனால் ஏற்பட்ட  அலைச்சல், மனவேதனை,  மனைவி பிரச்னை, அண்டை வீட்டார் தொல்லை முதலியன ஆக.28க்கு பிறகு மறையும். அதன் பிறகு நிலைமை சீராகும். புதுமணத் தம்பதியர் குழந்தை பாக்கியம் பெறுவர். பிள்ளைகள் நற்செயலில் ஈடுபட்டு குடும்பத்திற்கு பெருமை சேர்ப்பர். ஆடை, அணிகலன்கள் வாங்க யோகமுண்டு. ஆக.19,20, செப்.15,16ல் உறவினர் வருகை இருக்கும். அவர்களால் நன்மை ஏற்படும். ஆக.31, செப்.1ல் உறவினருடன் சற்று ஒதுக்கி இருக்கவும். செப்.3,4ல் விருந்து விழா என செல்வீர்கள்.

பெண்களால் பொருளாதார வளம் மேம்படும். செப்.14க்கு பிறகு குடும்பத்தில் பொறுமையுடன் விட்டுக் கொடுத்து போகவும். பணியாளர்கள் திருப்திகரமான நிலையில் இருப்பர். அரசு வேலையில் இருப்பவர்கள் சீரான வளர்ச்சி காண்பர். ஆக.28 க்கு பிறகு தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு புதிய பதவி தேடி வரும். சக ஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர். மேல் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வேலைப்பளு குறையும்.

ஆக.17,18, செப்.13,14ல் சிறப்பான பலனைக் காணலாம். உங்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்கும். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம். செப்.14க்கு பிறகு சிலர் அவப்பெயரைச் சந்திக்க நேரலாம் கவனம். வியாபாரிகள் சற்று அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். பகைவர் வகையில் அவ்வப்போது தொல்லை குறுக்கிடலாம். அரசு வகையில் அனுகூலம் இல்லை. எனவே வரவு, செலவு கணக்கை சரியாக வைக்கவும். குருவின்  பார்வையால் வியாபாரம் வளர்ச்சி முகமாக இருக்கும். முன்னேற்ற பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள்.  உங்களை எதிர்த்தவர்கள் தவிடுபொடி ஆவார்கள். ஆக. 21,22,23,26,27ல் சந்திரனால் தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். செப்.4,5ல் எதிர்பாராத பணவரவு இருக்கும்.  

கலைஞர்களுக்கு ரசிகர்களின் மத்தியில் புகழ், பாராட்டு கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஆக.31க்கு பிறகு எதிரிகளால் தொல்லை அதிகரிக்கும். தொழில் ரீதியான போட்டி குறுக்கிடும். சிலருக்கு அவப்பெயர் உருவாகலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். அரசியல்வாதிகள் பலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டிய திருக்கும். மாணவர்களுக்கு ஆக.28 முதல் செப். 14 வரை புதன் சாதகமாக இருப்பதால் நல்ல முன்னேற்றம் உண்டாகும். போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர். செப். 14 க்கு பிறகு சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். நண்பர்களின் விஷயத்தில் எச்சரிக்கை தேவை கவனம்.

விவசாயிகள் கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும்.  மானாவாரி பயிர்கள் நல்ல மகசூலைக் கொடுக்கும். கால்நடை வளர்ப்பின் மூலம் வருவாய் பெறலாம். புதிய சொத்து வாங்க சில காலம் பொறுத்திருக்க வேண்டும். வழக்கு, விவகாரத்தில் சுமாரான முடிவு கிடைக்கும். புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம்.

பெண்களுக்கு அக்கம்பக்கத்தினர் அனுசரணையாக நடந்து கொள்வர். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். ஆக.28க்கு பிறகு வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். புதிய பதவியும் தேடி வரும். ஆக.28,29,30ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்குவர். செப். 6,7ல் சகோதரவழியில் உதவி கிடைக்கும். செப்.14க்கு பிறகு வேலைக்கு செல்லும் பெண்கள் பணியிடத்தில் பொறுமையுடன் விட்டுக் கொடுத்து போகவும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து நடப்பது நல்லது.

* நல்ல நாள்: ஆக.17,18,19,20,24,25, 28, 29,30, செப்.4,5,6,7,13,14,15,16
* கவன நாள்: செப்.8,9,10 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 4,6   
* நிறம்: மஞ்சள், வெள்ளை

பரிகாரம்:
●  செவ்வாயன்று முருகன் கோயில் வழிபாடு
●  வெள்ளிக்கிழமை சுக்கிரனுக்கு அர்ச்சனை
●  பவுர்ணமியன்று அம்மனுக்கு நெய் விளக்கு

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar