Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவி.,யில் ராஜகோபுரம் வழியாக ... முப்பிடாதி அம்மன் கோயிலில் பூக்குழி முப்பிடாதி அம்மன் கோயிலில் பூக்குழி
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நெல்லையில் களைகட்டுது தாமிரபரணி புஷ்கரம் புனித நீராடிய பக்தர்கள்
எழுத்தின் அளவு:
நெல்லையில் களைகட்டுது தாமிரபரணி புஷ்கரம் புனித நீராடிய பக்தர்கள்

பதிவு செய்த நாள்

14 அக்
2018
01:10

திருநெல்வேலி:நெல்லையில் தாமிரபரணி புஷ்கரத்தை யொட்டி பக்தர்கள் கூட்டம் அதிகளவில் உள்ளது. அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி ஆகியோர் தங்களது கட்சியினருடன் வந்து புனித நீராடினர். குருபெயர்ச்சியால் தாமிரபரணியில் அக். 11 முதல் 23  வரையிலும் மகாபுஷ்கர விழா நடக்கிறது. திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி பாயும் 130 கி.மீ.,துாரம் உள்ள பல்வேறு படித்துறைகள், தீர்த்தக்கட்டங்களில் மக்கள் நீராடுகின்றனர்.

தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து மும்பை போன்ற இடங்களில் இருந்தும் பக்தர்கள் வரத்துவங்கியுள்ளனர். நேற்று விடுமுறை தினம் என்பதால் நேற்று காலையில் இருந்தே கூட்டம் அலைமோதியது.குறிப்பாக நெல்லை தைப்பூச  மண்டபம், குறுக்குத்துறை, பாபநாசம், கல்லிடைகுறிச்சி, முக்கூடல், முறப்பநாடு என பல்வேறு படித்துறைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. நெல்லையில் புஷ்கர விழாவிற்கு வந்தவர்களுக்கு உணவு பற்றாக்குறை வரக்கூடாது என்பதற்காக பல்வேறு அமைப்பினர்  13 தினங்களும் மூன்று நேரமும் அன்னதானம் வழங்குகின்றனர்.

நிரம்பி வழியும் ஓட்டல்கள்: இதை தவிர நெல்லை, துாத்துக்குடி மாவட்டங்களில் ஓட்டல்களிலும் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக நெல்லையின் பிரசித்தி பெற்ற அல்வா கடைகளில் போலீஸ் பாதுகாப்போடு வியாபாரம் நடக்கிறது. நெல்லையில் சிறிய  தங்கும்விடுதிகள் முதற்கொண்டு பெரிய ஓட்டல்கள் வரையிலும் ரூம்கள் புக்காகி விட்டன. இதனால் குழுவாக வருபவர்கள் மண்டபங்கள், மடங்களில் தங்குகின்றனர். சிறிய வணிக நிறுவனங்களில் விற்பனை சூடு பிடித்துள்ளது. ஆட்டோக்கள், வாடகை கார்கள், டெம்போ  வாகனங்களில் டிரைவர்களும் பிசியாக உள்ளனர்.

புனித நீராடிய அமைச்சர்கள்: நெல்லை பாபநாசத்தில் நடந்த புஷ்கர விழாவை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் துவக்கிவைத்தார்.தமிழக அமைச்சர்கள் யாரும் வரவில்லை.மாவட்ட நிர்வாகமோ, கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளோ ஆரம்பத்தில் இருந்தே  புஷ்கர விழாவிற்கு ஆதரவான எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அறநிலையத்துறையினரும் கண்டுகொள்ளவில்லை. இருப்பினும் பல்வேறு இந்து அமைப்புகள், துறவியர் சங்கங்களின் முயற்சியால் புஷ்கர விழாவிற்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள்  வந்துசெல்கின்றனர். நேற்று துாத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு தாமிரபரணி ஆற்றில் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நீராடினார்.நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தமது கட்சியினருடன் வந்து நீராடினார்.

தாமிரபரணி ஆரத்தி ஜீயர்கள் பங்கேற்பு: தாமிரபரணி மகாபுஷ்கர விழாவை முன்னிட்டு திருநெல்வேலி அருகன்குளம் எட்டெழுத்துப் பெருமாள் ஜடாயு படித்துறையில் நேற்று இரவு நடந்த ஆரத்தியில் ஜீயர்கள் பங்கேற்றனர். திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களில் அக்.,11ல் துவங்கி 23ம்  தேதி வரை மகாபுஷ்கர விழா நடக்கிறது. திருநெல்வேலி அருகே அருகன்குளம் எட்டெழுத்துப் பெருமாள் கோயில் அருகே தாமிரபரணி, ஜடாயுப் படித்துறை தீர்த்தக் கட்டத்தில் ஆரத்தி நடந்தது. நேற்று புரட்டாசி கடைசி சனிக்கிழமை என்பதால் எட்டெழுத்துப் பெருமாள்,  காட்டுராமர் உற்ஸவத்தில் எழுந்தருளினார். எட்டெழுத்து பெருமாள், காட்டுராமர் ஜடாயு படித்துறை தீர்த்தக் கட்டம் வந்ததும் தீபாராதனை நடந்தது. ஸ்ரீவானமாமலை ராமானுஜ ஜீயர், மன்னார்குடி செண்டலங்கார ஜீயர், கொங்கு மண்டல நாராயண ஜீயர் தலைமையில்  நதியில் தீர்த்தம் சமர்ப்பிக்கப்பட்டது. காசி வேத விற்பன்னர்கள் ஆரத்தி எடுத்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மானாமதுரை; சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மழை வேண்டி எல்லை தெய்வத்திற்கு கறிச்சோறு மற்றும் அசைவ ... மேலும்
 
temple news
கர்நாடக மாநிலம், தார்வாட்டில் சிருங்கேரி ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதி ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயில் பழமையும் பிரதான சிறப்பும் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா அக்.,22ல் துவங்கி அக்.,27 சூரசம்ஹாரம், அக்.,28ல் திருக்கல்யாண ... மேலும்
 
temple news
அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை ரயில்வே ஸ்டேஷன் செல்வ விநாயகர் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி, சீனிவாச ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar