பதிவு செய்த நாள்
12
நவ
2018
12:11
புதன் வக்கிரம் அடைந்து துலாமில் இருக்கிறார். அவரால் பொன், பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அவர் டிச. 8ல் வக்கிர நிவர்த்தி அடைந்து 5-ம் இடமான விருச்சிக ராசிக்கு செல்கிறார். அப்போது அவரால் நற்பலனை கொடுக்க முடியாது. குடும்பத்தை விட்டு பிரிந்து செல்லும் நிலை உருவாகலாம். வீண் அலைச்சல் அதிகரிக்கும்.
சூரியன் உங்கள் ராசிக்கு 5-ம் இடமான விருச்சிகத்தில் இருக்கும் காலம் தான் கார்த்திகை மாதம். அக்கம் பக்கத்தினரால் தொல்லை ஏற்படும். குரு, சனி இருவரும் நற்பலனை கொடுப்பர். மேலும் சுக்கிரனாலும் நன்மை தொடரும். எந்த ஒரு செயலையும் வெற்றிகரமாக செய்து முடிக்கும் ஆற்றல் பிறக்கும். பகைவர் சதியை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். ஆற்றல் மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். மக்கள் மத்தியில் மதிப்பு உயரும். குடும்ப வாழ்வு சிறக்கும். உறவினர்களிடம் சுமுகநிலை ஏற்படும். வீடு, வாகனம் வாங்க யோகமுண்டு. மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வசதி வாய்ப்பு பெருகும். நவ. 23,24ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதே நேரம் டிச.4,5ல் அவர்கள் வகையில் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்புண்டு. சற்று ஒதுங்கி இருக்கவும்.
நவ.27,28ல் பெண்களால் நன்மை உண்டாகும். பணியாளர்கள் குருவின் பலத்தால் சிறப்பான நிலையில் இருப்பர். வேலையில் உங்கள் திறமை பளிச்சிடும். மேல் அதிகாரிகளின் ஆதரவும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.
நவ.21,22ல் நன்மையை எதிர்பார்க்கலாம். தனியார் துறையில் பணிபுரிபவர்கள் முன்னேற்றம் காண்பர். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை டிச.8க்குள் கேட்டு பெற்று கொள்ளவும். அதன் பிறகு அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். அதிகாரிகளிடம் அனுசரித்துப் போகவும். சிலருக்கு திடீர் இடமாற்றம் ஏற்படலாம். வேலை நிமித்தமாக சிலர் குடும்பத்தை விட்டு பிரியும் நிலை ஏற்படலாம். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம். ராகுவால் வெளியூரில் தங்கும் சூழல் ஏற்படலாம். நெருப்பு, மின்சாரம் தொடர்பான வேலையில் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
வியாபாரிகள் சீரான வளர்ச்சி காண்பர். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். டிச. 7க்கு பிறகு புதனால் அலைச்சல் அதிகரிக்கும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படலாம். டிச. 8,9,10ல் எதிர்பாராத நன்மை கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். அரசு வகையில் விருது, பாராட்டு கிடைக்க வாய்ப்புண்டு. அரசியல்வாதிகள் , சமூகநல சேவகர்கள் மதிப்பு மரியாதையுடன் இருப்பர். எதிர்பார்த்த பதவி கிடைப்பது அரிது.
மாணவர்களுக்கு புதன் சாதகமாக இருப்பதால் போட்டிகளில் வெற்றி கிடைக்கும். ஆசிரியர்கள், ஆன்றோர்களின் ஆதரவு கிடைக்கும். டிச.7 க்கு பிறகு சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். ஆனால் குருவால் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். போட்டிகளில் வெற்றி காணலாம்.
விவசாயிகள் எதிர்பார்த்த மகசூல் கிடைக்கப் பெறுவர். மஞ்சள், எள், கரும்பு, கீரை வகைகள், பழவகைகள் மூலம் அதிக மகசூல் கிடைக்கும். கால்நடைச்செல்வம் பெருகும். வழக்கு, விவகாரத்தில் சாதகமான முடிவு கிடைக்கும். புதிய சொத்து வாங்க நினைப்பவர்கள் டிச.7க்குள் பயன்படுத்திக் கொள்ளவும்.
பெண்கள் குருவால் குடும்ப வாழ்வில் குதூகலம் காண்பர். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார். சகோதரிகளால் நன்மை கிடைக்கும். கணவரின் அன்பும், ஆதரவும் உண்டாகும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். புதிய பதவியும் தேடி வரும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அதிகாரிகளின் ஆதரவும், அனுசரணையும் வந்து சேரும். டிச.2,3ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம்.
* நல்ல நாள்: நவ.21, 22, 23, 24, 27, 28, டிச.2, 3, 8, 9, 10, 11, 12
* கவன நாள்: நவ.17, டிச.13,14,15 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 4,8
* நிறம்: மஞ்சள், பச்சை
* பரிகாரம்:
● வெள்ளிக்கிழமை துர்க்கைக்கு அர்ச்சனை
● அஷ்டமியன்று பைரவருக்கு வடைமாலை
● புதனன்று குலதெய்வ வழிபாடு.