Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெண்ணாடம் மார்கழி முதல் நாள் ... அன்னூர் மார்கழி முதல் நாள் வழிபாடு: திரளான பக்தர்கள் தரிசனம் அன்னூர் மார்கழி முதல் நாள் வழிபாடு: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பூர் மார்கழி மாத வழிபாடு துவக்கம்
எழுத்தின் அளவு:
திருப்பூர் மார்கழி மாத வழிபாடு துவக்கம்

பதிவு செய்த நாள்

17 டிச
2018
01:12

திருப்பூர்:மார்கழி மாதம் பிறந்ததையடுத்து, நேற்று (டிசம்., 16ல்) முதல், திருப்பூரில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு துவங்கியது.

குலாலர் விநாயகர் கோவிலில், திருப்பள்ளி யெழுச்சி, விஸ்வேஸ்வரர் சுவாமி கோவிலில் திருவெம்பாவை, கன்னிகா பரமேஸ்வரி அம்மன், வீரராகவ பெருமாள் கோவில்களில், திருப்பாவை வழிபாடுகள் நடத்தப்பட்டன.

சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடத்தப்பட்டன; திரளான பக்தர்கள், வழிபாடு நடத்தினர்; அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.மார்கழி, 30ம் தேதி வரை, தினசரி, சிறப்பு வழிபாடு நடத்தப்படும். அருள்நெறி வார வழிபாட்டு திருக்கூட்டம், மார்கழி பாராயண வழிபாடு நிகழ்ச்சியை நடத்துகிறது.

நாளை (டிசம்., 18ல்), வீரராகவப்பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா, 23ம் தேதி காலை, 6:00 மணிக்கு, விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருப்பூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள் கோவிலுக்கு வரும் பக்தர் களுக்கு பிரசாதம் வழங்க, லட்டு தயாரிக்கப்பட்டது.பிரசித்த பெற்ற, திருப்பூர் ஸ்ரீ வீரராகவப்பெருமாள் கோவில் வைகுண்ட ஏகாதசி விழா நாளை (டிசம்., 18ல்), நடக்கிறது. முக்கிய நிகழ்வான சொர்க்க வாசல், அதிகாலை, 4:30 மணிக்கு திறக்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் சொர்க்க வாசல் வழியாக வரும் பக்தர்களுக்கு, திருப்பூர் ஸ்ரீ வாரி டிரஸ்ட் சார்பில் பிரசாதமாக லட்டு வழங்கப்படும். நாளை, ஏகாதசி துவங்கவுள்ள நிலையில், பக்தர்களுக்கு லட்டு தயாரிக்கும் பணி, நேற்று (டிசம்., 16ல்) நடந்தது.இதில், 75 சமையலர், 500க்கும் அதிகமான சேவகர்கள், மாவட்ட பெருமாள் பக்தர் குழு, திருமலை திருப்பதிக்கு ஸ்ரீ வாரி சேவைக்கு செல்லும் பக்தர் குழு மற்றும் பெண்கள் இணைந்து, லட்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். பக்தர்களுக்கு வழங்க, ஒரு லட்சத்துக்கு எட்டாயிரம் லட்டு தயாரிக்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பவனம்: திருப்புவனத்தில் பாலகிருஷ்ண பெருமாள் கோயிலின் 128வது சித்திரை பெருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கிய ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் ஸ்ரீ பத்மாவதி சீனிவாச பரிணய உற்சவங்கள் (திருமணத் திருவிழா) மிகச் சிறப்பான ... மேலும்
 
temple news
 உத்திரமேரூர்: உத்திரமேரூர், சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோத்சவ விழாவையொட்டி, கருட ... மேலும்
 
temple news
பழநி: பழநி முருகன் கோயிலில் விடுமுறை தினத்தை முன்னிட்டு பக்தர்களின் வருகை அதிகம் இருந்தது.பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar