பதிவு செய்த நாள்
18
டிச
2018
10:12
இந்த மாதம் முக்கிய கிரகங்களில் 3-ல் இருக்கும் ராகு, 7-ல் இருக்கும் குரு சாதகமாக நின்று தொடர்ந்து நன்மை தருவார்கள். இது தவிர செவ்வாய் டிச.17 க்கு பிறகும், புதன் டிச.28க்கு பிறகும் நற்பலன் கொடுப்பார்கள். சனிபகவான் 8-ம் இடத்தில் இருந்து முயற்சிகளில் பல்வேறு தடைகளை உருவாக்குவார். உறவினர்கள் வகையில் மனக்கசப்பும், கருத்து வேறுபாடும் ஏற்படும். சிலர் ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும். இருப்பினும் ராகுவால் எதையும் வெற்றிகரமாக செய்து முடிக்கும் வல்லமை பெறுவீர்கள். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். செவ்வாயால் வளம் சிறக்கும். உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும்.
குடும்பத்தில் செவ்வாயால் புதிய வீடு, மனை வாகனம் வாங்க யோகம் கூடி வரும். ஆடை, ஆபரணங்கள் வாங்கலாம். குரு சாதகமாக இருப்பதால் வீட்டுக்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுபநிகழ்ச்சி குறித்த பேச்சு நடந்தேறும். மக்கள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். சகோதரிகள் உதவிகரமாக இருப்பர்.
குறிப்பாக டிசம்பர் 20,21,22ல் அவர்களால் கூடுதல் நன்மை கிடைக்கும். டிச.16,17, ஜன.12,13ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதே நேரம் டிச.27,28ல் அவர்கள் வகையில் கருத்துவேறுபாடு வர வாய்ப்புண்டு. எனவே சற்று ஒதுங்கி இருக்கவும். டிச.28க்கு பிறகு பிள்ளைகளால் மகிழ்ச்சியும், பெருமையும் கிடைக்கும். கணவன், மனைவி இடையே அன்பும் பாசமும் மேலோங்கும்.
பணியாளர்கள் சீரான வளர்ச்சி காண்பர். போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் முன்னேற்ற பலன் காணலாம். விண்ணப்பித்த கோரிக்கைகள் நிறைவேறும். ஆனால் சூரியன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் அரசு ஊழியர்கள் வேலையில் கவனமாக இருக்கவும். அலைச்சல், வேலைப்பளு அதிகரிக்கும். சிலருக்கு விரும்பாத இடமாற்றம் கிடைக்கும் அல்லது வெளியூர் பயணம் மேற்கொள்ளலாம். ஜன. 10,11 சிறப்பான நாட்களாக அமையும்.
வியாபாரிகள் வாடிக்கையாளர் மத்தியில் நற்பெயர் காண்பர். ராகு அனுகூலம், பொருளாதார வளம், தொழில் விருத்தியை தந்து கொண்டிருக்கிறார். ஆனால் அரசு வகையில் சாதகமாக நிலை காணப்படவில்லை. எனவே வரவு, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். டிச.31, ஜன.1ல் எதிர்பாராத நன்மை கிடைக்கும்.
கலைஞர்களுக்கு சுக்கிரன் சாதகமற்ற நிலையில் காணப்படுவதால் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். முயற்சிகளில் இருந்த தடையும், மனதில் ஏற்பட்ட சோர்வும் ஜன.1க்கு பிறகு மறையும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் முன்னேற்றம் காண்பர். டிச.29,30ல் சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள்.
மாணவர்கள் நல்ல வளர்ச்சி காண்பர். ஆசிரியரின் அறிவுரைகளைப் பின்பற்றுவது பயனுள்ளதாக இருக்கும். டிச.28க்கு பிறகு புதன் சிறப்பாக இருப்பதால் போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.
விவசாயிகள் எதிர்பார்த்ததை விட அதிக மகசூலைப் பெறுவர். மஞ்சள் எள்,கரும்பு, கீரை, பழ வகைகள் மூலம் அதிக ஆதாயம் கிடைக்கும். பக்கத்து நிலத்தின் வகையில் இருந்த தொல்லை மறையும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும்.
பெண்களுக்கு குருவால் பணப்புழக்கம் அதிகரிக்கும். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர வசதி பெருகும். உங்கள் மீதான அவப்பெயர் டிச.28க்கு பிறகு மறையும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு சக ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
சுய தொழில் செய்து வரும் பெண்கள் சிறப்பான பலன்
பெறுவர். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஜன.2,3,4ல் எதிர்பாராத நன்மை உண்டாகும். விருந்து விழா என சென்று வருவீர்கள். சகோதரர்களால் பண உதவி கிடைக்கும். டிச.25,26ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பிறந்த வீட்டில் இருந்து பொருட்கள் வரப் பெறலாம். உடல்நிலை திருப்தியளிக்கும்.
* நல்ல நாள்: டிச.16, 17, 20, 21, 22, 25, 26, 31, ஜன.1, 2, 3, 10, 11, 12, 13
* கவன நாள்: ஜன.5, 6 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 7, 9
* நிறம்:சிவப்பு, மஞ்சள்
பரிகாரம்:
● ஞாயிறன்று நீராடியதும் சூரிய நமஸ்காரம்
● சனிக்கிழமையில் சனிபகவானுக்கு எள் தீபம்
● வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு அர்ச்சனை