கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) அரசு வகையில் அனுகூலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18டிச 2018 11:12
இந்த மாதம் சூரியன் விருச்சிகத்தில் இருந்து தனுசுவிற்கு வந்தாலும் நன்மை தருவார். சுக்கிரன் ஜன.1 வரை நற்பலன் கொடுப்பார். தற்போது சாதகமாக நின்று நன்மை தரும் புதன் டிச.29ல் தனுசுவிற்கு மாறினாலும் அவரால் நன்மை தொடரும். மேலும் சனியும், ராகுவும் மாதம் முழுவதும் ஆதாயம் அளிப்பர். சனிபகவான் 11-ம் இடத்தில் இருக்கிறார். இது சாதகமான இடம் தான்.
குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன், மனைவி இடையே அன்பு கூடும். டிச.20,21,22ல் உறவினர் வகையில் வீண் விரோதம் உருவாக வாய்ப்புண்டு. எனவே சற்று ஒதுங்கியிருப்பது நல்லது. அதே நேரம் ஜன. 5,6ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். புதனால் பெண்களின் ஆதரவு இருக்கும். அவர்களால் நற்சுகம் உண்டாகும். குறிப்பாக ஜன.10,11ல் அவர்கள் உதவிகரமாக செயல்படுவர். செவ்வாயால் சிலரது வீட்டில் பொருள் திருட்டு போகலாம்.
பணியாளர்கள் நல்ல வளர்ச்சி காண்பர். பதவி, சம்பள உயர்வுக்கு தடையேதும் இருக்காது. சிலர் அதிகார அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர். அரசு ஊழியர்கள் எதிர்பார்த்த கோரிக்கைகள் நிறைவேறும். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். அரசு வகையில் கடனுதவி கிடைக்கும். டிச.28 வரை சகஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர். ஜன.2,3,4ல் சிறப்பான பலனை எதிர்நோக்கலாம். பணியிடத்தில் அதிகாரம் கொடிகட்டிப் பறக்கும். செவ்வாயால் நெருப்பு, மின்சாரம் தொடர்பான வேலையில் இருப்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது.
தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கப் பெறுவர். சேமிக்கும் விதத்தில் பொருளாதாரம் மேம்படும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை பலப்படும். வியாபாரம் வளர்முகமாக இருப்பதோடு அரசிடம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வேலை இன்றி இருப்பவர்கள் குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்கலாம். சிலர் வெளிநாட்டு வியாபாரத் தொடர்பால் வளர்ச்சி காண்பர். டிச.28 வரை பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் முன்னேற்றம் பெறும். டிச.16,17, ஜன.7,8,9,12,13ல் சந்திரனால் தடைகள் வரலாம். டிச.25,26ல் எதிர்பாராமல் வருமானம் வரும்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். பெண்கள் உங்களின் முன்னேற்றத்திற்கு உதவிகரமாக இருப்பர். ஜன.1க்கு பிறகு எதிரி தொல்லை அதிகரிக்கும். போட்டிகள் அதிகமாகும். ரசிகர்களின் மத்தியில் அந்தஸ்து கிடைக்கும். அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் சிறப்பான பலன் பெறுவர். மக்கள் மத்தியில் நற்பெயர் உண்டாகும். டிச.23,24ல் சிலர் மனக்குழப்பத்திற்கு ஆளாகலாம்.
மாணவர்கள் தொடர்ந்து முன்னேற்ற பாதையில் செல்வர். தேர்வில் அதிக மதிப்பெண் கிடைக்கும். புதனும் சாதகமாக இருப்பதால் போட்டியில் வெற்றி கிடைக்கும். ஆனால் அவ்வப்போது குருவால் குழப்பம் உருவாகி மறையும்.
விவசாயிகள் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வளம் காண்பர். நெல், கோதுமை, சோளம், பாசிப்பயறு, தக்காளி, பழ வகைகள் நல்ல வருவாயைக் கொடுக்கும். கால்நடை வளர்ப்பில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். வழக்கு, விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம். புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம்.
பெண்களின் பங்களிப்பு குடும்பத்தில் ஓங்கி நிற்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்களின் மேன்மை அறிந்து சரணடையும் நிலை ஏற்படும். தடைபட்ட திருமண பேச்சில் முன்னேற்றம் ஏற்படும். சுயதொழில் புரியும் பெண்களுக்கு வாடிக்கையாளர் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான வளர்ச்சி காண்பர். டிச.27,28ல் விருந்து, விழா என சென்று வருவர். சகோதர வகையில் பணஉதவி கிடைக்கும். டிச.18,19,ஜன.14ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து நற்செய்தி வந்து சேரும். உடல்நிலை திருப்தியளிக்கும். நோய் நீங்கி பூரண குணம் உண்டாகும்.