சென்னை மாங்காட்டிலுள்ள வைகுண்டப் பெருமாள் கோயிலில் கையில் கணையாழியுடன் பெருமாள் அருள்பாலிக்கிறார். அது மாங்காட்டுக் காமாட்சியின் திருமணத்திற்குக் கொண்டு வந்த சீராம். மார்கழி 28-ம் நாள் பெருமாளுக்குத் தயிரன்னம் நிவேதித்து, ஆண்டாளுக்கு ரவிக்கைத் துணி, வளையல் காணிக்கையாகத் தந்தால், தடை நீங்கித் திருமணம் நிறைவேறும் என்பது நம்பிக்கை. இவரை கல்யாண வரம் தரும் பெருமாள் எனப் போற்றுகின்றனர்.