குடும்ப முன்னேற்றத்திற்கு பாடுபடும் கும்ப ராசி நேயர்களே!
சுக்கிரன் பிப்.25 வரை யோகபலன் தருவார். செவ்வாய்,சனி, கேது மாதம் முழுவதும் நற்பலன் தருவர். புதிய முயற்சி வெற்றி பெறும். பொருளாதார வளம் சிறக்கும். மனதில் பக்தி உயர்வு மேம்படும்.
ராகு 5-ம் இடமான மிதுன ராசிக்கு வருவது சிறப்பானதல்ல. குடும்பத்தில் பிரச்னை உருவாகலாம். மனதில் இனம் புரியாத வேதனை ஆட்டிப் படைக்கலாம். அதே நேரம் கேது நன்மை தரும் இடத்துக்கு மாறுகிறார். 11ம் இடமான தனுசு ராசிக்கு சென்று செல்வ வளம், ஆரோக்கியம் கொடுப்பார். குடும்பத்தில் மேன்மை கொடுப்பார்.
குருவால் ஏற்பட்ட நஷ்டம், சஞ்சலம் மார்ச்13க்கு பிறகு மறையும். அதன் பிறகு பணப்புழக்கம் அதிகரிக்கும். குருவின் 7 மற்றும் 9ம் பார்வைகள் சிறப்பாக உள்ளன. இதனால் தேவை பூர்த்தியாகும். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்களின் மேன்மை அறிந்து சரணடையும் நிலை வரலாம். தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு. சூரியன், புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் அலைச்சலும், சோர்வும் ஏற்படலாம்.
கடவுளின் கருணை உங்களுக்கு கிடைக்கும். பொன்,பொருள் சேரும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் வரும். மனதில் மகிழ்ச்சி நிலைக்கும். பெண்கள் உறுதுணையாக இருப்பர். பிப்.13,14,மார்ச் 12,13,14ல் உறவினர் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும். ஆனால் பிப்.28,மார்ச்1,2ல் உறவினர்கள் வருகையால் நன்மை ஏற்படும். மார்ச் 5,6,7ல் சகோதரிகள் உதவிகரமாக இருப்பர். விருந்து, விழா என சென்று வருவீர்கள்.
பணியாளர்களுக்கு அதிகாரிகளின் மத்தியில் நற்பெயர் உண்டாகும். விண்ணப்பித்த கோரிக்கைகள் நிறைவேறும். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் சிலருக்கு வேலைப்பளு அதிகம் இருந்தாலும் அதற்கேற்ப பலன் கிடைக்கும். சிலர் திடீர் இடமாற்றத்திற்கு ஆளாகலாம். பிப்.26,27ல் எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும். மார்ச் 13க்கு பிறகு குருவால் ஆடம்பர வசதிகள் கிடைக்கும். அரசு வகையில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.
வியாபாரிகளுக்கு சூரியனால் பணவிரயம் ஏற்பட்டாலும் அதற்கேற்ப வருமானமும் அதிகரித்துக் கொண்டே இருக்கும். பகைவர் தொல்லை அவ்வப்போது தலைதுாக்கலாம். ஆனால் சனி,கேதுவால் பகைவர் சதியை முறியடிக்கும் வல்லமை காண்பீர்கள். பிப்.17,18ல் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும்.
கலைஞர்களுக்கு சுக்கிரனால் யோகம் உண்டாகும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உங்களுக்கு வர வேண்டிய பாராட்டு, புகழ் கிடைக்கும். பிப்.25க்கு பிறகு விடாமுயற்சி தேவைப்படும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் வளர்ச்சி காண்பர். பிப்ரவரி 17,18ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.
மாணவர்கள் புதன் சாதகமான இடத்தில் இல்லாததால் சிரத்தை எடுத்து படிப்பது அவசியம். ஆனால். குருவால் ஆசிரியர்களின் வழிகாட்டுதல் கைகொடுக்கும்.
விவசாயிகள் நல்ல வருமானத்தைப் பெறுவர். குறிப்பாக நெல், கோதுமை, பழவகைகள், கிழங்கு வகைகள் மூலம் அதிக லாபம் கிடைக்கும். புதிய சொத்து வாங்க யோகமான காலகட்டம். வழக்கு, விவகாரங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். கைவிட்டுப் போன பொருள் கிடைக்கும். பக்கத்து நிலத்துக்காரர்கள் தொல்லை மறையும்பெண்கள் குடும்பத்தோடு புனித தலங்களுக்கு செல்வர். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேலைப்பளு இருக்கும். மார்ச் 13க்கு பிறகு குருவின் பார்வையால் நன்மை உண்டாகும். மார்ச்10,11ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம்.
* நல்ல நாள்: பிப்.17,18,19,20,21,26,27,28 மார்ச் 1,2,5,6,7,10,11 * கவன நாள்: பிப்.22,23 சந்திராஷ்டமம் * அதிர்ஷ்ட எண்: 3,7 * நிறம்: சிவப்பு, கருப்பு
* பரிகாரம்: * வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி வழிபாடு * வெள்ளியன்று ராகு கால துர்கை தரிசனம் * ஞாயிறன்று காலை சூரிய நமஸ்காரம்
மேலும்
சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »