பொள்ளாச்சியில் இருந்து 18 கி.மீ., தூரத்தில் உள்ளது முதலமடா என்கிற கேரள கிராமம். இங்கு சுனில்தாஸ் சுவாமி தலைமையில் சினேகம் அறக்கட்டளை கல்வி, மருத்துவம், மதியஉணவு மற்றும் ஆன்மிக சேவையாற்றி வருகிறது. ஹெச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலம் தரப்பட்டுள்ளது. இளம் வயதிலேயே ஆன்மிக நாட்டம்கொண்ட இவருக்கு சாய்பாபா தான் குரு. இங்கு துவாரகாமாயி வடிவிலான பிளாட்டின பாபா சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இங்கிருந்த பாபா சிலை 8 கி. மீ. தூரத்திலுள்ள புதிய ஆஸ்ரமத்தில் வைக்கப்பட்டுள்ளது. இயற்கைச் சூழல் நிறைந்த இந்த ஆஸ்ரமத்திற்கு அடிக்கல் நாட்டியவர் சுப்ரீம்கோர்ட் முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன். சினேகம் டிரஸ்ட் மருத்துவமனையை திறந்து வைத்தவர் முன்னாள் தேர்தல் கமிஷனர் டி.என்.சேஷன். இல்லை என்று சொல்லாமல் அனைவருக்கும் அன்னதானம் செய்ய வேண்டும். அது தான் மகத்தான சேவை. இங்கே அன்பைத் தவிர வேறெதுவும் இல்லை. விரைவில் ஏழைகளுக்குப் பயன்படும் வகையில் பெரிய மருத்துவமனை கட்ட உள்ளோம், என்கிறார் சுனில்தாஸ்.