பதிவு செய்த நாள்
15
ஜூலை
2019
04:07
சுக்கிரன், ராகு தொடர்ந்து வளர்ச்சிக்கு வழிவகுப்பர். உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் இருக்கும் புதன் ஆக. 3ல் மிதுனத்தில் இருந்து கடகத்திற்கு மாறுகிறார். அதன் பிறகு அவரால் பொன், பொருள் சேரும்.
சுக்கிரனால் கணவன், மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை இருக்கும். புதுமணத் தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். அவரால் ஜூலை24க்கு பிறகு மதிப்பு, மரியாதை உயரும். உறவினர்களிடம் சுமுக நிலை ஏற்படும். புதிய உறவினரால் உதவி கிடைக்கும். குறிப்பாக ஜூலை20,21,ஆக.16,17ல் உறவினர் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதே நேரம் ஜூலை31, ஆக.1,2 ல் அவர்கள் வகையில் மனக்கசப்பு வர வாய்ப்பு உண்டு. குருபகவான் மனவேதனையும், நிலையற்ற தன்மையைக் கொடுப்பார். பொருளாதார சரிவை ஏற்படுத்துவார். வீண் விரோதத்தை உருவாக்குவார். இருப்பினும் அவரது 7-ம் இடத்துப் பார்வை சிறப்பாக உள்ளதால் அதை ஈடுகட்டும் வகையில் பணவரவு கூடும். மனதில் துணிச்சல் பிறக்கும். தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவர்கள் சரணடையும் நிலை ஏற்படும்.
பணியாளர்களுக்கு சுக்கிரனால் பதவி உயர்வு கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசு வேலையில் இருப்பவர்கள் வேலையில் அக்கறையுடன் இருக்கவும். ஆக.24க்கு பிறகு சிறப்பான முன்னேற்றத்தைக் காணலாம். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். ஜூலை17,18,19, ஆக.14,15 ஆகியவை உன்னதமான நாளாக அமையும். வியாபாரத்தில் ராகு முயற்சியில் வெற்றி, பொருளாதார வளம், தொழில் வளர்ச்சியை தந்து கொண்டிருக்கிறார். பெண்களிடம் விரோத உணர்வு ஏற்படலாம். சற்று ஒதுங்கிஇருக்கவும். புதனால் போட்டியாளர் வகையில் இருந்த இடையூறு, அரசு வகையில் ஏற்பட்ட அனுகூலமற்ற போக்கு ஆக.2 க்கு பிறகு மறையும். அது வரை வரவு, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். ஆக.5,6ல் எதிர்பாராத வருமானம் கிடைக்கும்.
கலைஞர்கள் தொடர்ந்து ஸ்திர தன்மையில் இருப்பர். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் எதிர்பார்த்த பலன் பெற முடியாது. பிரதிபலன் எதிர்பாராமல் உழைக்க வேண்டியதிருக்கும். மாணவர்களுக்கு புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் சிரத்தை எடுத்தால்தான் வெற்றி கிடைக்கும். ஆக.2க்கு பிறகு சிறப்பான வளர்ச்சி காணலாம். ஆசிரியர்களின் ஆலோசனையால் நன்மை கிடைக்கும். விடாமுயற்சியால் போட்டிகளில் வெற்றி காணலாம்.
விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். கறுப்பு நிற தானியம் மூலம் லாபம் கிடைக்கும். ஆக.2க்கு பிறகு பாசிப்பயறு, நெல், சோளம், பழ வகைகள் மூலம் நல்ல வருவாய் கிடைக்கும். கால்நடை வளர்ப்பின் மூலம் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். சுபநிகழ்ச்சிகளில் அடிக்கடி கலந்து கொள்வர். குடும்பத்தாரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். ஆக.2க்கு பிறகு வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். சுய தொழில் புரியும் பெண்களுக்கு லாபத்துக்கு குறைவிருக்காது. உடல் நலம் சிறப்படையும்.
* நல்ல நாள்: ஜூலை17,18, 19, 20, 21, 25, 26, 29, 30, ஆக.5, 6, 7, 8, 14, 15, 16, 17
* கவன நாள்: ஆக.9, 10 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 4,7
* நிறம்: வெள்ளை, நீலம்
பரிகாரம்:
● காலையில் நீராடி சூரிய தரிசனம்
● செவ்வாயன்று துர்கை, முருகன் வழிபாடு
● வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு தீபம்