பதிவு செய்த நாள்
14
ஜூலை
2020
02:07
விடாமுயற்சி கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே!
குரு மாதம் முழுவதும் நற்பலன் கொடுப்பார். புதன் ஜூலை 26 வரையும், ஆக.12க்கு பிறகும் நற்பலன் அளிப்பார். ஜூலை 30ல் சுக்கிரனும், ஆக.12ல் செவ்வாயும் சாதகமான இடத்துக்கு வந்து நற்பலன் கொடுப்பார்கள். குருவால் மனதில் துணிச்சல் பிறக்கும். பண வரவு அதிகரிக்கும். தேவையான பொருட்களை வாங்கலாம். சுக்கிரனால் ஜூலை 30க்கு பிறகு பொருளாதார வளம் கூடும். வசதி வாய்ப்புகள் பெருகும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். மனதில் மகிழ்ச்சி நிலைக்கும். பெண்கள் ஆதரவுடன் செயல்படுவர். சூரியனால் அவப்பெயர் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே வீண் விவாதங்களை தவிர்க்கவும். பொறுமையுடன் விட்டுக் கொடுத்து போகவும்.
குடும்பத்தில் நிம்மதி நிலவும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஆடை, அணிகலன்கள் வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், பெருமையும் கிடைக்கும். புதனால் ஜூலை 27 முதல் ஆக.12 வரை முயற்சிகளில் தடைகள் குறுக்கிடலாம். அதை வெற்றிகரமாக செய்து முடிக்க பெண்கள் வசம் முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்கலாம். சகோதரிகள் உதவிகரமாக செயல்படுவர். புதிய வீடு, மனை, வாகனம் வாங்க யோகம் கூடி வரும்.
கணவர், மனைவி இடையே அன்பு பெருகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஜூலை30க்கு பிறகு ஆடம்பர பொருட்கள் வாங்கலாம். பிறந்த வீட்டில் இருந்து சீதனப் பொருள் கிடைக்கப் பெறலாம். சகோதரர்களால் பண உதவி கிடைக்கும். ஆக.12க்கு பிறகு அண்டை வீட்டாரின் பிரச்னை மறையும். உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். ஆடை, ஆபரணம் சேரும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும். நீண்ட நாட்களாக தடைபட்ட சம்பள உயர்வு, பதவி உயர்வு தேடி வரும். செவ்வாயால் ஆரோக்கியம் குறையலாம். ஆக.12க்கு பிறகு பிள்ளைகளின் உடல்நிலை மேம்படும்.
சிறப்பான பலன்கள்
* தொழிலதிபர்களுக்கு ஜூலை 30க்கு பிறகு பெண்களை பங்குதாரராக கொண்ட தொழில் வளர்ச்சி அடையும்.
* வியாபாரிகளுக்கு பகைவரை எதிர்த்து வெல்லும் ஆற்றல் உண்டாகும். எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும். தங்கம், வெள்ளி, வைர நகை வியாபாரிகள் நல்ல வருமானத்தை பெறுவர்.
* தனியார் துறை பணியாளர்கள் நன்மை கிடைக்கப் பெறுவர். மேலதிகாரிகளின் ஆதரவு இருக்கும்.
* ஐ.டி., துறையினருக்கு ஜூலை 30க்கு பிறகு அலைச்சல், வேலைப்பளு குறையும். சகபெண் ஊழியர்கள் மிக ஆதரவுடன் இருப்பர்.
* வக்கீல்களுக்கு ஆக.12க்கு பிறகு சிறப்பான காலகட்டமாக அமையும். அவர்கள் நடத்தும் வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்
* ஆசிரியர்களுக்கு அலுவலக ரீதியாக முன்னேற்றமான சம்பவம் நடக்கும். அதிகாரிகளின் கருணை பார்வை கிடைக்கும்.
* போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் ஆக.12க்கு பிறகு எதிலும் வெற்றி காணலாம். பணியிடத்தில் அதிகாரம் கொடிகட்டி பறக்கும்.
* அரசியல்வாதிகளுக்கு ஆக.12-க்கு பிறகு எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும்
* பொதுநல சேவகர்கள் சீரான வளர்ச்சி காண்பர். ஜூலை30க்கு பிறகு புதிய பதவி கிடைக்கும்.
* கலைஞர்களுக்கு பெண்கள் வகையில் இருந்த இடர்ப்பாடுகள் ஜூலை 30க்கு பிறகு மறையும். அதன்பின் அதே பெண்கள் தவறை உணர்ந்து உதவிகரமாக இருப்பர்.
* விவசாயிகளுக்கு பாசிப்பயறு, மஞ்சள், நெல் போன்ற தானியங்களில் நல்ல மகசூல் கிடைக்கும். ஆக.12க்கு பிறகு புதிய சொத்து வாங்குவதற்கான காலம் கனிந்து வரும். வழக்கு, விவகாரங்களில் முடிவு சிறப்பாக இருக்கும். கைவிட்டு போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.
* பால்பண்ணைத் தொழில் மூலம் வருமானம் உயரும். ஆக.12க்கு பிறகு சேமிக்க இடமுண்டு.
* பள்ளி, கல்லுாரி மாணவர்கள் கல்வியில் சிறப்பிடம் பெறுவர். ஆசிரியர்களின் ஆலோசனை வளர்ச்சிக்கு வழிவகுக்கும். ஆக.12 க்கு பிறகு கெட்ட சகவாசத்திற்கு விடை கொடுப்பர்.
சுமாரான பலன்கள்
* தொழிலதிபர்கள் சிலர் அரசின் மூலம் பிரச்னைக்கு ஆளாக நேரிடலாம். எனவே வரவு, செலவு கணக்குகளை சரியாக வைத்துக் கொள்ளவும்.
* வியாபாரிகள் ஜூலை 27 முதல் ஆக. 12 வரை சிலர் தீயோர் சேர்க்கையால் பண இழப்பைச் சந்திக்கலாம். புதியவர்களிடம் எச்சரிக்கையுடன் பழகவும்.
* தரகு,கமிஷன் தொழிலில் பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும். அனாவசியமாக எதிலும் தலையிடாமல் ஒதுங்கி இருக்க வேண்டும்.
* அரசு பணியாளர்களுக்கு வேலைப்பளுவும், அலைச்சலும் அதிகமாக இருக்கும். சிலர் இடமாற்றத்தைக் காணலாம்.
* தனியார் துறை பணியாளர்கள் ஜூலை 27 முதல் ஆக.12 வரை பொல்லாப்பை சந்திக்கலாம். பொறுமையுடன் விட்டுக் கொடுத்து போகவும்.
* மின்சாரம், நெருப்பு தொடர்பான பணியாளர்கள் விழிப்புடன் பணியில் ஈடுபடுவது நல்லது.
* மருத்துவர்கள் பலன் கருதாமல் உழைக்க வேண்டியதிருக்கும். ஆனால் ஜூலை 30க்கு பிறகு வேலையில் நிம்மதி கிடைக்கும்.
நல்ல நாள் ஜூலை 16,17,18,23,24,25,26,29,30 ஆக. 3,4,10,11,12,13,14
கவன நாள் ஜூலை 19,20, ஆக.15,16 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 2,3 நிறம்: மஞ்சள்,வெள்ளை.
பரிகாரம்:
* தினமும் காலையில் சூரிய நமஸ்காரம்
* சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விரதம்
* வெள்ளியன்று மகாலட்சுமிக்கு நெய் தீபம்