பதிவு செய்த நாள்
14
ஜூலை
2020
02:07
அமைதியின் இருப்பிடமான மீன ராசி அன்பர்களே!
சுக்கிரன் மாதம் முழுவதும் யோகபலன் தருவார். புதன் ஜூலை 26 வரையும், ஆக.12க்கு பிறகும் நன்மை தருவார். மற்ற கிரகங்கள் அனைத்தும் சாதகமற்ற நிலையில் இடத்தில் இருப்பதால் எந்த ஒரு காரியத்தையும் சற்று முயற்சி எடுத்தே நிறைவேற்ற வேண்டியதிருக்கும். ஆனால் முயற்சிக்கு தகுந்த பலன்கள் கிடைக்காமல் போகாது. சனி, ராகு குடும்பத்தில் பகை, பிரிவையும், பெண்கள் வகையில் பிரச்னைகளையும் ஏற்படுத்துவர். புதன், சுக்கிரன் பிரச்னைகளைத் தடுத்து பெரிய பாதிப்பு வராமல் காப்பாற்றுவர். பெண்களால் ஏற்பட்ட களங்கம், வீண்பகை மறையும். புதனால் பொன், பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். ஆக.12 க்கு பிறகு எடுத்த செயலில் வெற்றி கிடைக்கும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளில் நல்ல முடிவு அமையம். சிலரது வீட்டில் பொருள் திருட்டு போகலாம். சற்று கவனமாக இருக்கவும்.
குருவின் 5ம் இடத்துப் பார்வையால் மனதில் துணிச்சல் பிறக்கும். வருமானம் கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம். அக்கம் பக்கத்தினரின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரணடையும் நிலை ஏற்படும். தம்பதியிடையே அன்பு, பாசம் மேலோங்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஜூலை 30க்குப் பிறகு சமூகத்தில் மதிப்பு மரியாதை உயரும். உறவினர்களிடம் சுமூக நிலை ஏற்படும். புதிய உறவினரால் நன்மையை எதிர்பார்க்கலாம். பெண்கள் மனம் போல ஆடை, ஆபரணங்கள் வாங்கலாம். வியாபாரம் செய்யும் பெண்கள் வழக்கத்தை விட கூடுதல் வருமானம் காண்பர். ஆக.12க்கு பிறகு சுபநிகழ்ச்சிகள் கைகூடும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும். புதிய பதவி தேடி வரும். உடல் நிலை அதிருப்தியளிக்கும். சிலருக்கு மருத்துவச் செலவு கூடும். பயணத்தின் போது கவனம் தேவை.
சிறப்பான பலன்கள்
* தனியார் துறை பணியாளர்களுக்கு பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். சிலர் பதவி உயர்வு கிடைக்கப் பெறுவர். சக ஊழியர்கள் ஒத்துழைப்புடன் இருப்பர்.
* ஐ.டி., துறையினர் முன்னேற்றம் காண்பர். எதிர்பார்த்த கோரிக்கைகள் நிறைவேறும்.
* வக்கீல்களுக்கு முயற்சிக்கேற்ப முன்னேற்றம் ஏற்படும். ஆக.12க்கு பிறகு சிறப்பான வளர்ச்சி காணலாம். தாங்கள் நடத்தும் வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
* ஆசிரியர்கள் குருவின் பார்வையால் நன்மை காண்பர். முக்கிய கோரிக்கைகள் ஜூலை 26க்குள் நிறைவேறும்.
* பொதுநல சேவகர்களுக்கு எதிர்பார்த்த பதவி கிடைக்கும். மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும்.
* கலைஞர்கள் முன்னேற்றம் காண்பர். உங்கள் வாழ்வில் வசந்தம் பிறக்கும். சக கலைஞர்கள் உதவிகரமாக இருப்பர்.
* விவசாயிகளுக்கு விளைச்சல் சிறப்பாக இருக்கும். பாசிப்பயறு, நெல், சோளம், தக்காளி, பழ வகைகள் மூலம் அதிக வருமானம் கிடைக்கும். ஆக.12க்கு பிறகு கால்நடை வளர்ப்பில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
* பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பின்தங்கிய நிலை இருக்காது. ஆசிரியர்களின் ஆலோசனை வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
சுமாரான பலன்கள்
* தொழிலதிபர்களுக்கு ஜூலை 26க்கு பிறகு தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படலாம். ஆக.12க்கு பிறகு செவ்வாயால் பகைவரால் தொல்லை வரலாம். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும்.
* வியாபாரிகள் நமக்கு ஏது எதிரி என்று அசட்டையாக இருந்து விடாதீர்கள். மறைமுகப் போட்டி, பகைவர் தொல்லை ஏற்படலாம். எனவே அவர்களின் மீது ஒரு கண் இருப்பது நல்லது.
* தரகு,கமிஷன் தொழிலில் அவ்வப்பபோது தடைகளைச் சந்திக்க நேரிடும்.
* தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் ஜூலை 27ல் இருந்து ஆக.12 வரை பொறுமையுடன் விட்டுக் கொடுத்து செயல்படுவது நல்லது. சிலருக்கு இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
* ஐ.டி., துறையினர் ஜூலை 27 முதல் ஆக.12 வரை வேலை விஷயமாக குடும்பத்தை விட்டு பிரிய நேரிடலாம்.
* மருத்துவர்கள் அதிக உழைப்பை சிந்த வேண்டியதிருக்கும். ஆனால் அதற்குரிய மதிப்பு, மரியாதை கிடைக்கும்.
* அரசு பணியாளர்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். முக்கிய பொறுப்புகளை யாரிடமும் ஒப்படைக்க வேண்டாம். வழக்கமான சம்பள உயர்வு, பதவி உயர்வுக்கு தடை இருக்காது.
* போலீஸ், ராணுவத்தினருக்கு வேலைப்பளு இருக்கும். மேலதிகாரிகளிடம் அனுசரித்து போகவும்.
* அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைக்காது. ஆனால் பணப்புழக்கத்தில் குறை இருக்காது.
நல்ல நாள்: ஜூலை 16,17,18,23,24,25,26,31 ஆக.1,2,3,4,7,8,9,12,13,14
கவன நாள்: ஜூலை 27,28 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 4,7 நிறம்: பச்சை,வெள்ளை
பரிகாரம்:
* செவ்வாயன்று முருகனுக்கு நெய் விளக்கு
* சனிக்கிழமையில் காகத்திற்கு எள் கலந்த சோறு
* வெள்ளிக்கிழமையில் நாக தேவதை வழிபாடு