பதிவு செய்த நாள்
13
பிப்
2021
08:02
அவிட்டம் 3, 4ம் பாதம் : இந்த மாதத்திய கிரக நிலை சற்று சிரமத்தைத் தந்தாலும் சமாளித்து வெற்றி கண்டு வருவீர்கள். நினைப்பது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருப்பதால் மன வருத்தத்திற்கு ஆளாவீர்கள். மன வருத்தத்தை முகத்தில் வெளிக்காட்டாது கம்பீரமாக காட்சியளிப்பீர்கள். வரவு நிலை நன்றாக இருந்தாலும் செலவுகளும் தொடர்ந்து கொண்டிருக்கும். குடும்பத்தினரின் மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது. பொருளாதார ரீதியாக வசதியான நிலை இருந்தாலும் ஏதோ ஒரு மனக்குறை மனதின் மூலையில் இருந்து வரும். முன்பின் தெரியாத நபர்களிடம் எச்சரிக்கையுடன் பழகுவது நல்லது. செல்போன் போன்ற தொலை தொடர்பு சாதனங்களில் தேவையற்ற வீணான அழைப்புகளினால் பொருளிழப்பு உண்டாகும் வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கையுடன் இருப்பது நலம். வண்டி, வாகனங்கள், பிரயாணங்களில் ஆதாயம் காண்பீர்கள். மாணவர்களின் கல்வித்தரம் உயரும். பிள்ளைகளின் மூலமாக எதிர்பாராத செலவுகளுக்கு ஆட்பட நேரிடும். உடல்நிலை சீராக இருந்து வரும். மனதில் நிலவி வரும் விரக்தியான சிந்தனை வாழ்க்கைத்துணையுடன் பேசும்போது வார்த்தைகளில் வெளிப்படும். அவரது கருத்துக்களோடு ஒத்துப்போவது நன்மையைத் தரும். அக்கம் பக்கத்திலுள்ளவர்களிடம் அனுசரணையுடன் பழகுவது நல்லது. முன்கோபத்தினைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். அடுத்தவர்கள் பிரச்னையில் தலையிடாமல் இருப்பது நன்மை தரும். வார்த்தைகளில் தத்துவ சிந்தனைகள் வெளிப்படும். தான தர்மங்களில் ஈடுபடுவதால் மனதிற்கு நிம்மதி உண்டாகும். செலவுகளைக் கட்டுப்படுத்த சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் ஏதேனும் ஒரு வகையில் செலவுகள் காத்திருக்கும். அயல்நாடு செல்லக் காத்திருப்போருக்கு நல்ல தகவல் வந்து சேரும். தொலைதூர ஆன்மிகப் பிரயாணங்களுக்காக திட்டமிடுவீர்கள். தொழில் ரீதியாக கடும் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் மிகுந்த கவனத்துடன் பணிபுரிவது அவசியம். சுமாரான பலன்களைத் தரும் மாதம் இது.
பரிகாரம் : ஸ்ரீ சஞ்சீவிராயன்
சந்திராஷ்டமம் : பிப்ரவரி 28
சதயம் : இந்த மாதத்தின் துவக்கத்தில் லேசான சிரமத்தினைக் காணும் உங்களுக்கு பிப்ரவரி 19ம் தேதியிலிருந்து சாதகமான பலன்கள் கிடைக்கக் காண்பீர்கள். விவேகமான எண்ணங்கள் மனதில் குடிபுகும். எந்த ஒரு காரியத்தையும் எளிதாகச் செய்துமுடிக்கும் செயல்திறனை அறிந்துகொண்டு செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். ராசியில் வந்து அமரும் சுக்ரன் சிறப்பான பொருள் வரவினை உண்டாக்குவார். கடன்பிரச்னைகள் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவி வரும். பேசும் வார்த்தைகளில் நகைச்சுவை உணர்வு அதிகமாக வெளிப்படும். நண்பர்களின் ஆலோசனைகள் தக்க நேரத்தில் பயன் தரும். தகவல் தொடர்பு சாதனங்கள் உங்கள் பணிகளுக்குத் துணை நிற்கும். பெரிய மனிதர்களுடனான சந்திப்பு உங்கள் கவுரவத்தை உயர்த்துவதோடு எதிர்காலத் திட்டங்களுக்குப் பயன் தரும் வகையில் அமையும். வீடு, மனை போன்ற அசையாச் சொத்துக்களில் முதலீடு செய்வதற்குக் காலநேரம் சாதகமாக அமையும். வண்டி, வாகனங்கள், பிரயாணங்கள் ஆகியவற்றால் குறிப்பிடத்தகுந்த ஆதாயம் உண்டாகும். உறவினர்களின் வருகை குடும்பத்தின் கலகலப்பை அதிகரிக்கச் செய்யும். மாணவர்கள் தங்கள் கல்வி நிலையில் மேன்மை காண்பார்கள். விளையாட்டுத் துறையைச் சார்ந்த மாணவர்கள் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் அடைவார்கள். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், கேளிக்கை, கொண்டாட்டங்கள் ஆகியவற்றை மனம் நாடும். தம்பதியருக்குள் மாதத்தின் துவக்கத்தில் உண்டாகும் கருத்து வேறுபாடு பிற்பாதியில் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும். தான தரும காரியங்களுக்காக அதிகம் செலவழிக்க நேரிடலாம். அசாத்தியமான தைரியம் மனதில் குடிபுகும். அடுத்தவர்கள் செய்யத் தயங்கும் காரியத்தையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். எதிர்கால நலன் கருதி புதிய செயல்திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்த முயற்சிக்கும் நேரம் இது. நண்பர்களின் துணையோடு நினைத்த காரியங்களில் வெற்றி காண்பீர்கள். தொழில்முறை சிந்தனை மனதை அதிகம் ஆக்கிரமிக்கும். உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் தங்கள் செயல்திட்டங்களின் மூலம் தனித்துவத்தை வெளிப்படுத்துவார்கள். சாதகமான பலன்களைத் தரும் மாதம் இது.
பரிகாரம் : மாசிமகம் நாளில் அன்னதானம்.
சந்திராஷ்டமம் : மார்ச் 1
பூரட்டாதி 1, 2, 3ம் பாதம் : ராசியில் இந்த மாதம் இடம் பெறும் கிரகங்களின் குணத்தினால் சென்ற மாதம் இருந்த நிலை மாறி புதியதொரு உத்வேகத்தினைப் பெறுவீர்கள். செயல்களில் வேகம் கூடும். சரியான நேரத்திற்காகக் காத்திருந்ததைப் போல நண்பர்களையும் கூட்டு சேர்த்துக்கொண்டு உங்களுடைய திட்டங்களை செயல்படுத்தத் துவங்குவீர்கள். செயல்களில் வேகத்தோடு விவேகமும் வெளிப்படும். சமயோஜித புத்தி சரியான நேரத்தில் வெற்றியைப் பெற்றுத் தரும். தனாதிபதியின் நிலை கூடுதல் செலவினைத் தந்தாலும் சுக்ரனின் இணைவு வரவினையும் தந்து கொண்டிருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் தொடரும். சுவையான உணவுகளை உண்பதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். மற்றவர்கள் செய்யத் தயங்கும் காரியங்களில் அசாத்தியமான தைரியத்துடன் செயல்பட்டு வேகமான வெற்றியைக் காண்பீர்கள். உங்களது வார்த்தைகள் மற்றவர்களின் பிரச்னைகளுக்கு ஆறுதலாக அமையும். புதிய வீடு கட்டும் முயற்சியில் உள்ளோருக்கு அதற்கான வழிவாய்ப்புகள் சாதகமாகும். ஆக்கபூர்வமான சிந்தனைகள் மனதினை அதிகளவில் ஆக்கிரமிக்கும். உடல்நிலை சீராக இருந்து வரும். வாழ்க்கைத்துணையின் உடல்நலனில் அதிக அக்கறை தேவை. செலவுகளைக் கட்டுப்படுத்த நினைத்து சிக்கன நடவடிக்கையில் இறங்கினாலும் திடீரென்று ஒரே நாளில் அதிக அளவில் செலவு செய்து ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். நீங்கள் செய்யும் செயல்கள் மற்றவர்கள் மத்தியில் உங்கள் பெருமையை உயர்த்தும். நினைத்த காரியத்தை தாமதியாது உடனடியாக முடித்துவிட வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்து வெற்றி காண்பீர்கள். தொலைதூர ஆன்மிகப் பிரயாணங்களுக்காக திட்டமிடுவீர்கள். வெளிநாட்டுப் பணிக்காகக் காத்திருப்போருக்கு சாதகமான தகவல் வந்து சேரும். வியாபாரிகள் நல்ல தனலாபத்தினைக் காண்பார்கள். உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் பதவி உயர்விற்கான வாய்ப்பினை தக்க வைத்துக் கொள்வார்கள். சுயதொழில் செய்வோருக்கு மார்ச் மாதத்தின் துவக்கம் சாதகமாக அமையும். நற்பலன்களைத் தரும் மாதம் இது.
பரிகாரம் : ஸ்ரீ உலகளந்த பெருமாள்
சந்திராஷ்டமம் : மார்ச் 1, 2