இங்கிலாந்தில் பணக்காரர் ஒருவரின் மனைவி காலமாகி விட்டார். குழந்தைகளும் அவர்களுக்கு இல்லை. கோடிக்கணக்கான சொத்துக்கள்...ஆனாலும், யாருக்கும் எதையும் கொடுக்க முன்வரவில்லை. ஓரிரு ஆண்டில் பணக்காரரும் இறந்துபோனார். அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் அவரது வீட்டிற்குள் சென்று அகப்பட்டதை சுருட்டிக் கொண்டனர். இதையறிந்த துாரத்து உறவினர்கள் அரசாங்கத்திடம் தகவல் தெரிவித்தனர். உடனடியாக மகாராணியார் உத்தரவுப்படி சேவகர்கள் பணக்காரரின் வீட்டிற்கு சீல் வைத்தனர். இதைப் பார்த்த மக்களுக்கு பயம் உண்டானது. ஒருவேளை அரசாங்கம் விசாரணை செய்தால் தண்டனைக்கு ஆளாவோம் என பயந்து எடுத்துச் சென்ற பொருட்களை இரவோடு இரவாக அந்த வீட்டின் வரண்டாவில் விட்டுச் சென்றனர். இங்கிலாந்தின் ராஜ முத்திரைக்கு அந்தளவுக்கு மக்களிடம் பயமும், பாதுகாப்பும் இருந்தது. சொத்தை எப்படி அரசு கையகப்படுத்தியதோ அது போல நம் பாவங்களை அறிக்கையிட்டு மன்னிப்பு கேட்டால், ‘ஆண்டவருக்கு உரிய இவனைத் தொட யாருக்கும் அதிகாரம் இல்லை’ என்ற பாதுகாப்பான முத்திரை நமக்கும் கிடைக்கும்.