Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பம் : தமிழ்ப்புத்தாண்டு 2024- 2025
முதல் பக்கம் » தமிழ்ப்புத்தாண்டு பலன் (14.4.2024 முதல் 13.4.2025 வரை)
மீனம் : தமிழ்ப்புத்தாண்டு 2024- 2025
எழுத்தின் அளவு:
மீனம் : தமிழ்ப்புத்தாண்டு 2024- 2025

பதிவு செய்த நாள்

09 ஏப்
2024
03:04

பூரட்டாதி: நிதானம் அவசியம்

தனக்காரகனான குருவை நட்சத்திர நாதனாகவும், 1,2,3 ம் பாதங்களில் (கும்பம்) பிறந்தவர்களுக்கு ஆயுள் காரகனான சனி ராசிநாதனாகவும், 4ம் பாதத்தில் (மீனம்) பிறந்தவர்களுக்கு உங்கள் நட்சத்திர நாதனே ராசி நாதனாகவும் உள்ளனர்.
குரோதி ஆண்டில் பூரட்டாதி 1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சனி ஜென்ம ராசியிலும், ராகு 2 ம் இடத்திலும், கேது 8ம் இடத்திலும், குரு 3, 4 ம் இடத்திலும் சஞ்சரிக்கின்றனர். இதனால் 1,2,3 பாதங்களில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத நெருக்கடி, தொழிலில் பிரச்னை, குழப்பம், வாழ்க்கைத்துணையுடன் சங்கடம் ஏற்படும். எந்த செயலிலும் நிதானம் அவசியம்.  
4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு சனி 12ம் இடத்திலும், ராகு ஜென்ம ராசியிலும், கேது 7ம் இடத்திலும், குரு தன ஸ்தானத்தில் ஏப்.30 வரையிலும், மே 1 முதல் 4 ம் இடத்திலும் சஞ்சரிக்கின்றனர் என்பதால் எதிர்பாராத செலவு தோன்றும். அவசரப்பட்டு முதலீடு செய்து நஷ்டப்படும் நிலை ஏற்படும். பண ஆசையால் தவறான வழியில் செல்லும் நிலை சிலருக்கு உருவாகும். உங்களால் வளர்ந்தவர்கள் உங்களுக்கெதிராக செயல்படும் நிலை உருவாகும்

சனி சஞ்சாரம்
ஏப்.14 - ஜூன் 19, நவ. 4 - டிச. 31 காலங்களில் தாரா பலன்களாலும், ஜூன் 19 - நவ. 4 காலத்தில் வக்கிர நிலையாலும், 2025, பிப். 27 - மார்ச் 29 காலத்தில் அஸ்தமனம் அடைவதாலும் சங்கடங்களில் இருந்து சனி உங்களை விடுவிப்பார். நீங்கள் எதிர்பார்த்த நன்மையை பெற முடியும். உங்கள் முயற்சிகள் யாவும் வெற்றி பெறும். வருமானத்தில் இருந்த தடைகள் விலகும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். உறவினர்களுடன் அனுசரித்துச் செல்வீர்கள். தொழில், வியாபாரத்தில் ஆதாயம் உண்டாகும்.

ராகு, கேது பெயர்ச்சி
1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு 2ல் ராகு, 8ல் கேது இருப்பதால் குடும்பத்தில் பிரச்னை, தொழிலில் பாதிப்பு, வருமானத்தில் தடை, வீண் அலைச்சல், பொருளாதார நெருக்கடி, உடலில் சங்கடம், எதிர்பாராத விபத்து உண்டாகலாம். 4 ம் பாதத்தினருக்கு தொழிலில் தடுமாற்றம், பணியில் பிரச்னை, வீண் அலைச்சல், செயலில் நெருக்கடி, வீண் பழி, செய்யாத தப்புக்கு அபராதம், பணஇழப்பு, நோய், நண்பர்களால் சங்கடம் ஏற்படலாம்.

குரு சஞ்சாரம்
1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப்.30 வரை தைரிய ஸ்தானத்திலும், மே 1 முதல் சுக ஸ்தானத்திலும் சஞ்சரிக்கும் குரு எதிர்மறை பலன்கள் தருவார். முயற்சிகள் இழுபறியாகும். வருமானத்தில் தடையுண்டாகும் என்றாலும் பார்வைகளின் வழியே வளம் தருவார். நலத்தை உண்டாக்குவார். 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு 2 ம் இட குருவால் ஏப்.30 வரை நன்மை அதிகரிக்கும். வருமானம் உயரும். மே1 முதல் 3ல் சஞ்சரிக்கும் குருவால் நன்மை தர முடியாமல் போகும். நெருக்கடி உண்டாகும் என்றாலும் பார்வைகளால் வாழ்வு வளமாகும்.

சூரிய சஞ்சாரம்
1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப். 14 - மே 13, ஜூலை 17 - ஆக. 16, நவ. 16 - 2025, ஜன.13, காலங்களிலும், 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மே 14 - ஜூன் 14, ஆக. 17 - செப். 16, டிச.16 - 2025, பிப்.12 காலங்களிலும் சூரியன் தன் 3,6,10,11 ம் இட சஞ்சாரத்தால் மற்ற கிரகங்களால் ஏற்படும் சங்கடத்தில் இருந்து காப்பார். செல்வாக்கை உயர்த்துவார். பணவரவில் இருந்த தடை விலகும்.  உடல்நிலை சிறக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் உயரும். பணியில் ஏற்பட்ட பிரச்னையில் இருந்து விடுவிப்பார். வழக்கில் சாதக நிலையை உண்டாக்குவார். லாபம் அதிகரிப்பார்.

பொதுப்பலன்
பிரதான கிரகங்கள் சாதகமாக இல்லை. இக்காலத்தில் நிதானம் அவசியம்.  ஆரோக்கியக செலவு அதிகரிக்கும். குடும்பத்திலும் சின்னச் சின்ன பிரச்சினைகள் ஏற்படும். வரவேண்டிய பணம் வருவதற்கு தாமதமாகும். தொழில் வியாபாரம் போன்றவற்றில் எதிர்பார்த்த வருமானம் இல்லாமல் மனம் குழப்பமடையும். வீண் செலவு அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் பிரச்னை ஏற்படும். இந்த ஆண்டில் 4 மாதம் சூரியனும், 90 நாள் செவ்வாயும் உங்களைப் பாதுகாப்பார்கள். சங்கடத்தில் இருந்து விடுவிப்பார்கள். பணம், புகழ், செல்வாக்கை உயர்த்துவர். வம்பு வழக்குகளில் இருந்து, நோயில் இருந்தும் பாதுகாப்பார்கள்.

தொழில்
தொழிலில் உழைப்பு அதிகரிக்கும். திட்டமிட்டு மேற்கொள்ளும் செயல்கள் லாபமாகும். விற்பனையில் கூடுதல் கவனம் தேவை. ஊழியர்களை நம்பி பொறுப்பை ஒப்படைக்க வேண்டாம். புதிய தொழில் தொடங்கும் முடிவை யோசித்து செயல்படுத்துவது நல்லது.

பணியாளர்கள்
தனியார் நிறுவன பணியாளர்களுக்கு அலைச்சலும் வேலைபளுவும் அதிகரிக்கும். எதிர்பார்த்த வருமானம் இல்லாமல் போகும். அரசு துறையில் பணியாற்றுபவர்கள் மற்றவர்கள்
கூறுவதுபோல் செயல்படாமல் விதிகளின்படி செயல்படுவது நன்மையாகும். இல்லையெனில் சட்ட சிக்கலுக்கு ஆளாகலாம்.

பெண்கள்
வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வதால் குடும்ப நிம்மதி உண்டாகும். சுயதொழில் செய்பவர்கள் புதிய முதலீடுகள் செய்யும் யோசிக்கலாம்/ அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் வேலை பளுவிற்கு ஆளாக நேரும். இருந்தாலும் எதிர்பார்த்த உயர்வு இருக்கும். பொன் பொருள் சேரும். உடல்நிலையில் அவ்வப்போது சிறு சங்கடம் தோன்றும். சிலர் படிப்பு, வேலைக்காக வெளிநாட்டிற்கு செல்வர்.

கல்வி
பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். நுழைவுத் தேர்வுகளிலும் உங்கள் முயற்சி வெற்றியாகும். மேற்படிப்பிற்காக வெளி மாநிலம், வெளிநாடு என்று ஒரு சிலர் செல்வீர்கள்.

உடல்நிலை
திடீர் திடீரென உடலில் சங்கடம் தோன்றும். ஒவ்வாமை, அல்சர், கொலஸ்ட்ரால், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை போன்ற நோய்கள் தலைகாட்டும். சிலர் விபத்தில் சிக்க நேரும் என்பதால் பயணத்தில்  நிதானம் அவசியம்.

குடும்பம்

குடும்பநிலை ஒருநேரம் இருப்பது போல் மறுநேரம் இருக்காது. எதிர்பார்ப்பு தள்ளிப் போகும். அந்நியரால் தம்பதிக்குள் சண்டை  ஏற்படும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வதால் நிம்மதி உண்டாகும். ஆடம்பர செலவு, வீண் பயணத்தை தவிர்ப்பது நல்லது. புதிய நபர்களை வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டாம். உறவினர் உங்களுக்கு எதிராகலாம். புதிய முயற்சியில் யோசித்து ஈடுபடுவது நல்லது.


பரிகாரம்: மாதந்தோறும் குல தெய்வத்தை வழிபட்டால் நன்மை அதிகரிக்கும்.


உத்திரட்டாதி: எச்சரிக்கை அவசியம்

ஆயுள்காரகனான சனி நட்சத்திர நாதனாகவும், தனக்காரகனான குரு ராசி நாதனாகவும் கொண்ட உங்களுக்கு பிறக்கும் குரோதி ஆண்டில், ஜென்ம ராசிக்குள் ராகு, 7ல் கேது, 12ல் சனி, மே 1 முதல் 3ல் குரு சஞ்சரிக்கின்றனர். ஏழரைச் சனியின் கட்டுக்குள் நீங்கள் வந்துள்ளீர்கள் என்பதால் பொருளாதாரத்தில் பிரச்னை, வீண் அலைச்சல், எதிரியால் இடையூறு, வீண்செலவு, உடல்நலமின்மை, உறவுகளிடம் பகை என்ற நிலை ஏற்படலாம். ஜென்ம ராகு சஞ்சலத்தை உருவாக்கலாம். தவறான பாதைக்கு வழிகாட்டலாம். எதிலும் எச்சரிக்கை அவசியம். 7ல் சஞ்சரிக்கும் கேது உறவுகளிடம் பகை, வாழ்க்கைத் துணையிடம் ஒற்றுமை இல்லாத நிலையை உருவாக்கலாம். இந்நிலையில் மே 1 முதல் குருவும் 3 ம் இடத்திற்கு செல்வதால் சங்கடம் அதிகரிக்கும். உங்களால் வாழ்ந்தவர்கள் கூட உங்களை விட்டு விலகிச் செல்வர். வழக்கமான முயற்சிகளில் தடை, தாமதம், நெருக்கடி ஏற்படும்.

சனி சஞ்சாரம்
ஏப்.14  -  ஜூன் 19,  நவ. 4 - டிச. 31 காலங்களில் தாரா பலன்களாலும், ஜூன் 19 - நவ. 4, காலத்தில் வக்கிர நிலையாலும், 2025, பிப். 27 - மார்ச் 29 காலத்தில் அஸ்தமனம் அடைவதாலும் விரயச் சனியின் பாதிப்பில் இருந்து விடுதலை உண்டாகும். வழக்கமான முயற்சிகள் எந்தவித தடைகள் இல்லாமல் நிறைவேறும். திட்டமிட்ட செயல்களில் லாபம் உண்டாகும். பிரச்னை வந்தாலும் அதை சமாளிக்கும் சக்தி ஏற்படும். பணியில் இருந்த நெருக்கடி தீரும். எதிர்பார்க்காத அதிர்ஷ்ட பலன்களால் இக்காலத்தில் உங்களுக்கு நன்மை உண்டாகும்.

ராகு, கேது சஞ்சாரம்
ராகு உங்கள் ராசிக்குள்ளும், கேது 7 ம் இடத்திலும் இருக்கும் நிலையில் செயலில் தடுமாற்றம் உண்டாகும். வீண் அலைச்சல் அதிகரிக்கும். தொழில், வேலையில் நெருக்கடி தோன்றும். சிலருக்கு வீண் பழி, செய்யாத குற்றத்திற்கு பதில் சொல்லும் நிலை  ஏற்படும். குடும்பத்தில் சங்கடம், பிரச்னை, வாழ்க்கைத் துணையுடன் மனக்கசப்பு, உடல்நிலை பாதிப்பு என எதிர்மறை பலன் உண்டாகும். நண்பர்கள் விலகிச் செல்வர். உங்களுக்கும் கீழானவர்களால் சங்கடம், அவமானம் ஏற்படலாம்.

குரு சஞ்சாரம்
ஏப்.30 வரை 2ல் சஞ்சரிக்கும் குரு உங்கள் வாழ்வில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வார். மே 1 முதல் 3 ல் சஞ்சரிக்கும் குரு நெருக்கடியை ஏற்படுத்துவார். செல்வாக்கு குறையும். ஆரோக்கியத்தில் குறைபாடு ஏற்படும். உங்களைச் சுற்றி இருந்தவர்கள் எதிராக செயல்படுவர். தனித்து விடப்பட்டது போல் இருப்பீர்கள்.

சூரிய சஞ்சாரம்
மே 14 - ஜூன் 14, ஆக. 17 - செப்.16, டிச.16 - 2025, பிப்.12 காலங்களில் சூரியனின் 3,6,10,11 இட சஞ்சாரத்தால் சங்கடங்கள் விலகும். வேலையில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும் உடல்நிலை சீராகும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். எதிர்பார்த்த வரவு வரும். பொருளாதாரம் உயரும். வம்பு, வழக்கில் இருந்து விடுபடுவீர்கள். தொழில் தொடங்குவதற்கு அனுமதி கிடைக்கும். பணியில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். சிலருக்கு பதவி உயர்வு உண்டாகும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு அதிகரிக்கும். வெளிநாட்டிற்கு செல்ல அரசின் அனுமதி கிடைக்கும்.

பொதுப்பலன்
எதிர்பாராத செலவுகள் ஏற்படும். அலைச்சல் அதிகரிக்கும். வேலையில் டென்ஷன் உண்டாகும். சிலர் மேற்படிப்பு, வேலைக்காக வெளிநாட்டிற்கு செல்வர். புதிய நட்புகளால் வீண் பிரச்னை தோன்றும். வீண்பழிகளும், குடும்பத்தில் குழப்பமும் தோன்றும். வியாபாரம், தொழிலில் முதலீடுகள் செய்யும் முன்பாக பலமுறை யோசிப்பது நல்லது. புதியவர்களை நம்பி எந்தவித முயற்சியிலும் ஈடுபடக் கூடாது. உங்களுக்கு சரி எனத் தோன்றும் விஷயத்தில்
மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.  சனி, ராகு, கேது, குரு ஆகியவை உங்களுக்கு எதிர்மறையாக சஞ்சரித்தாலும் 120 நாட்கள் சூரியனும், 90 நாட்கள் செவ்வாயும் எல்லாவித சங்கடங்களில் இருந்தும் விடுவித்து நன்மையை உண்டாக்குவர்.

தொழில்
தொழிலில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. தொழில் தொடங்கும்முன் யோசித்து செயல்படுவது நன்மை தரும். பங்கு வர்த்தகம், பைனான்ஸ், ஹார்டுவேர்ஸ், நகை வியாபாரம், ரியல் எஸ்டேட், பதிப்பகம், கல்விக்கூடங்கள் ஆகியவை முன்னேற்றம் அடையும்.

பணியாளர்கள்
பணிபுரியும் இடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். பணி நிமித்தமாக வெளியூர் செல்ல நேரிடும். சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். எதிர்பார்த்த ஊதிய உயர்வு உண்டாகும். அரசு பணியாளர்கள் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவர். விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும்.

பெண்கள்
குடும்பத்தில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். நீண்டகால நண்பர்களும் உங்களை விட்டு விலகுவர். வாழ்க்கைத் துணையுடன் மனக்கசப்பு தோன்றும். பணம் பலவழியிலும் வரும். பொன், பொருள் சேரும். சங்கடம், அவப்பெயர் ஏற்படலாம் என்பதால் இக்காலத்தில் எதிர்பாலினரைத் தள்ளி வைத்து பழகுவது நல்லது. பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும்.  உறவு, நட்பு வட்டம் இக்காலத்தில் சுருங்கும்.

கல்வி
பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். விரும்பிய கல்லுாரியில் விருப்பப்பட்ட பாடப்பிரிவில் சேர்வீர்கள்.

உடல்நிலை
பரம்பரை நோய், தொற்று நோய்களால் சங்கடம் தோன்றும். சிலர் பருவ நோய்களால் பாதிப்பிற்கு ஆளாவர். உடல் அடிக்கடி சோர்வடையும். மருத்துவச் செலவு அதிகரிக்கும்.

குடும்பம்
ஜென்ம ராகு, 7ல் கேது, விரயச் சனியால் குடும்பத்தில் சங்கடம் ஏற்படும். நட்புகளால் குடும்பத்திற்குள் பிரச்னை உண்டாகும். மனதில் இனம் புரியாத பயம் தோன்றும். புதிய முயற்சிகள் இழுபறியாகும். அதே நேரம் செலவிற்கேற்ற வருவாய் வந்து சேரும். வெளிநாட்டு தொடர்பு ஆதாயம் தரும். வெளிநாட்டிற்கு செல்லும் முயற்சி வெற்றி பெறும். குலதெய்வம், இஷ்டதெய்வ வழிபாடு சங்கடத்தை போக்கும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமையன்று பிரத்தியங்கிராவை வழிபட வாழ்வு மேம்படும்.


ரேவதி: முயற்சியில் இழுபறி

கல்விக்காரகன் புதனை நட்சத்திர நாதனாகவும், ஞானக்காரகனான குருவை ராசி நாதனாகவும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் குரோதி ஆண்டில் ராசிக்கு 2ல் சஞ்சரிக்கும் குருவால் எத்தனை சங்கடம் வந்தாலும் அவற்றை எதிர்கொள்ளும் சக்தி உண்டாகும். ஆனாலும் மே 1 முதல் குரு 3ல் சஞ்சரிப்பதால் முயற்சிகள் இழுபறியாகும்.
விரய ஸ்தானம் என்னும் 12 ல் சஞ்சரிக்கும் சனியால் தேக்கமும், வருமானத்தில் குறைபாடும் உண்டாகும். பொருள் விரயமாகும். வீண் அலைச்சல், மன உளைச்சல் ஏற்படும். மதிப்பிற்கும் கவுரவத்திற்கும் பங்கம் ஏற்படும். ஜென்ம ராசியில் ராகுவும் ஏழாம் இட கேதுவும் நெருக்கடிகளை அதிகரிப்பர்.

சனி சஞ்சாரம்
12ல் விரய சனியாக சஞ்சரித்தாலும், ஜூன் 19 - நவ. 4 வரையிலான காலத்தில் சனி வக்கிரம் பெறுவதாலும், 2025, பிப். 27 - மார்ச் 29 வரையிலான காலத்தில் அஸ்தமனம் அடைவதாலும் அதன் பாதிப்பில் இருந்து விடுபடுவீர்கள். உங்கள் முயற்சிகள் யாவும் இக்காலங்களில் லாபமாக அமையும். எதிர்பார்ப்பு நிறைவேறும். தடைப்பட்ட முயற்சிகள் நிறைவேறும். பணவரவு அதிகரிக்கும். சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை ஏற்படும். பணியின் காரணமாக சிலர் வெளியூர் செல்லும் நிலை, புதிய பொறுப்பு, பதவி வந்து சேரும்.

ராகு, கேது சஞ்சாரம்
ஜென்ம ராகுவும், சப்தம கேதுவும் அலைச்சலை அதிகரிப்பர். பிரச்னைகளில் உங்களை சிக்க வைப்பர், அதே நேரத்தில் யோகப் பலன்கள் வழங்குவர். சட்டரீதியான பிரச்னை, தீயவர் சேர்க்கை, வாழ்க்கைத் துணையுடன் பிரச்னை, நண்பர்களுடன் கருத்து வேறுபாடு, கூட்டுத்தொழிலில் சங்கடம், மனதில் குழப்பம், பயத்தை உண்டாக்குவர்.  

குரு சஞ்சாரம்
ஏப். 30 வரை 2 ல் சஞ்சரிக்கும் குரு, குடும்பத்தில் இருந்த சங்கடங்களை விலக்கி வைப்பார்.
மே 1 முதல் 3 ல் சஞ்சரிக்கப் போவதால் எதிர்பார்ப்பு இழுபறியாகும். முயற்சிகளில் சங்கடம் தோன்றும். நண்பர்கள் விலகிச் செல்வர்.  உடல், மனதில் பாதிப்பு உண்டாகும். உறவுகளிடம் பிரச்னைகள் தோன்றும். எதிரி தொல்லை அதிகரிக்கும்.

சூரிய சஞ்சாரம்
மே 14 - ஜூன். 14, ஆக. 17 - செப். 16, டிச. 16 - 2025, பிப். 12 காலங்களில் சூரியனின் சஞ்சார நிலை சாதகமாக இருப்பதால் நினைத்த செயல் நடந்தேறும். முயற்சி யாவும் வெற்றி பெறும். துணிச்சலுடன் செயல்படுவீர்கள். ஆரோக்கியம் சீராகும். எதிரி விலகிச் செல்வர். வழக்குகள்  சாதகமாகும். அலுவலகத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு கிடைக்கும்.

பொதுப்பலன்
விரயச் சனி, ஜென்ம ராகு, ஏழில் கேது என்றாலும், ஏப். 30 வரை 2 ம் இட குருவும், 120 நாட்கள் சூரியனும், 90 நாட்கள் செவ்வாயும் இந்த ஆண்டில் உங்களுக்கு நன்மையளிப்பர். விரய சனியின் தாக்கத்திலிருந்து விடுபடுவீர்கள். முயற்சிகள் வெற்றியாகும். நெருக்கடி தீரும். பண வரவில் இருந்த தடை விலகும். குடும்பத்தில் குழப்பம் தீரும். வழக்கில் சாதகம் ஏற்படும். வெளிநாட்டு முயற்சி ஆதாயம் தரும். தொலைந்த பொருட்கள் கிடைக்கும். மதிப்பு உயரும்.

தொழில்
தொழிலில் கவனம் அதிகரிக்கும். கடந்த கால அனுபவத்தால் தொழிலில் வெற்றியடைவீர்கள். முதலீட்டில் லாபம் காண்பீர்கள். வெளிநாட்டு தொடர்பால் சிலர் வர்த்தகத்தில் ஈடுபடுவர்.

பணியாளர்கள்
பணிபுரியும் இடத்தில் மதிப்பு உயரும். எதிர்பார்ப்பு நிறைவேறும். முதலாளி உங்கள் திறமைக்கு மதிப்பளிப்பார். அரசுப் பணியாளர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு உண்டாகும். சிலருக்கு விரும்பிய இட மாற்றம், பதவி உயர்வு கிடைக்கும்.

பெண்கள்
சாதுரியமாக செயல்பட்டு சாதிக்கும் உங்களுக்கு இக்காலத்தில் நன்மை அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் கருத்தறிந்து செயல்படுவீர்கள். புதிய நண்பர்களை அங்கீகரிப்பீர்கள். வேலையில் கவனம் செலுத்தி அதிகாரியின் ஆதரவைப் பெறுவீர்கள். தனியார் நிறுவன பணியாளர்களின் கோரிக்கை நிறைவேறும். சுயதொழில் செய்பவர்கள் தொழிலை விரிவுபடுத்தி லாபம் அடைவர். பொன், பொருள் சேரும். எதையும் சமாளித்து வெற்றி பெறும் சக்தி ஏற்படும்.

கல்வி
தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் பெறுவீர்கள். மேற்கல்வியில் சேர்வதற்குமுன் உங்கள் சுய ஜாதகத்தை ஆராய்ந்து அதற்கேற்ற பாடப்பிரிவை தேர்வு செய்வது நல்லது.

உடல்நிலை
பரம்பரை நோய், பருவ நோய்களால் பாதிப்பு உண்டாகும். ஏழரைச் சனியின் காலம் என்பதால் ஏதாவது உடல் கோளாறு இருக்கும். மருத்துவச் செலவு அதிகரிக்கும்.

குடும்பம்
தம்பதியர் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வதும், பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்வதும், நேர்மையாக நடப்பதும் நன்மையை அதிகரிக்கும். தொழிலில் கூடுதல் அக்கறை செலுத்துவதும், பணியில் நேர்மையை பின்பற்றுவதும் சங்கடங்களில் இருந்து விடுவிக்கும். எதிர்பாலினரிடம் விலகி இருந்தால் அந்தஸ்து பாதுகாக்கப்படும். ஆசைக்கு இடம் கொடுக்காமல் இருந்தால் நெருக்கடி குறையும்.

பரிகாரம்: திருவெண்காடு புதனை ஒருமுறை தரிசித்தால் நன்மை சேரும்.

 
மேலும் தமிழ்ப்புத்தாண்டு பலன் (14.4.2024 முதல் 13.4.2025 வரை) »
temple news
அசுவினி; முயற்சியில் வெற்றிரத்தக்காரகன் செவ்வாய், மோட்சக்காரகன் கேது அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, ... மேலும்
 
temple news
கார்த்திகை: யோகமான காலம்ஆற்றல் காரகனான சூரியனின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்தாலும் 1ம் பாதத்தில் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம்: உழைப்பால் உயர்வீர்கள்சகோதர, தைரிய காரகனான செவ்வாயின் நட்சத்திரத்தில் நீங்கள் ... மேலும்
 
temple news
புனர்பூசம்: நல்லகாலம் வந்தாச்சுதனக்காரகனான குருவின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் ... மேலும்
 
temple news
மகம்: நிதானம் அவசியம்ஞான மோட்சக்காரகனான கேது, ஆன்ம காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar