Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வேண்டுகோள் நிறைவேற ... லலிதா கவுரி விரதம், சஷ்டி, நவராத்திரி 6ம் நாள்; அன்னை கவுரி, முருகனை வழிபட எதிலும் நன்மையே நடக்கும். லலிதா கவுரி விரதம், சஷ்டி, நவராத்திரி ...
முதல் பக்கம் » துளிகள்
நவராத்திரி 3ம் நாள், புரட்டாசி சனி; கருட வாகனத்தில் பெருமாளை தரிசிக்க நினைத்தது நடக்கும்!
எழுத்தின் அளவு:
நவராத்திரி 3ம் நாள், புரட்டாசி சனி; கருட வாகனத்தில் பெருமாளை தரிசிக்க நினைத்தது நடக்கும்!

பதிவு செய்த நாள்

05 அக்
2024
10:10

நவராத்திரி 3ம் நாளான இன்று வராகியாக அம்பிகையை அலங்கரிக்க வேண்டும். புரட்டாசி சனியில் பெருமாளை வழிபட்டால் கஷ்டங்கள் யாவும் நீங்கும். பெருமாள் கோவிலுக்குச் சென்று வழிபடுவது மிகவும் சிறப்பாகும். பெருமாளை வழிபடும் போது நினைத்தாலே கண்முன்னே கருடன் காட்சி தருவார் என்பது மாதத்தின் சிறப்பாகும். 


நவராத்திரி மூன்றாம் நாளில் அம்பிகையை வராஹியாக அலங்கரிக்க வேண்டும். பன்றிமுகத்துடன் கூடியவளாக விளங்கும் இவளை வழிபட்டால் பகைவர் பயம் நீங்கும். வராகியின் அருளால் விரும்பிய வரம் கிடைக்கும். மதுரை மீனாட்சியம்மன் இன்று ஏகபாத மூர்த்தியாக காட்சி தருகிறாள். இன்று அம்மனை வழிபட்டால் மனம், உடல்பலம் அதிகரிக்கும்.


பாட வேண்டிய பாடல்

குறித்தேன் மனத்தில் நின்கோலம் எல்லாம் நின்குறிப்பறிந்து

மறித்தேன் மறலி வருகின்ற நேர் வழி வண்டு கிண்டி

வெறித்தேன் அவிழ்கொன்றை வேணிப்பிரான் ஒருகூற்றை மெய்யில்

பறித்தே குடிபுகுதும் பஞ்சபாண பயிரவியே


புரட்டாசி மாதத்தில் பெருமாளை தரிசிப்பதற்கு சனிக்கிழமை உகந்த தின மாகும். புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமை நாளில் பெருமாளை வழிபட்டால் வாழ்வில் வரக்கூடிய எல்லாவித கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்க்கை கிடைக்கப் பெறுவோம். அன்றைய தினத்தில் அதிகாலையில் எழுந்து கங்கா ஸ்நானம் செய்ய வேண்டும். ஓம் நமோ என்னும் திருமந்திரத்தை போற்றி வழிபட வேண்டும். நெற்றியில் திருநாமம் தினமும் தரிப்பது புரட்டாதி மாதத்தில் செய்யக்கூடிய முக்கிய வழி முறையாகும். பெருமாள் கோவிலுக்குச் சென்று வழிபடுவது மிகவும் சிறப்பாகும். புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் அனைத்து பழங்கள், வெண்பொங்கல், முந்திரிப்பருப்பு, நெய் அனைத்தும் சேர்ந்த பிரசாதத்தை வாழை இலையில் தனியல் போடுவது என்பது ஐதீகமாக செய்து வரக்கூடிய முறையாகும். பெரு மாளுக்கு மாவிளக்கு போட்டு தீபம் ஏற்றி வைத்து அறுகவை காய்கறிகளோடு பெரு மாளுக்கு படைப்பார்கள். படைக்கும் பொழுது கருட பகவானை காட்சி தரு மாறு வேண்டி தீபாராதனை காட்ட கண்முன்னே கருட பகவான் பறந்து வந்து காட்சி தருவது புரட்டாசி பெருமாளுக்குரிய மாதத்தின் தனிச் சிறப்பாகும். இன்று அம்பிகை, பெருமாளை வணங்க நல்லதே நடக்கும்

 
மேலும் துளிகள் »
temple news
கர்நாடகாவின் வரலாற்று சிறப்புமிக்க நகரமான குடகின் தலக்காட்டில் ஏராளமான கோவில்கள் உள்ளன. இதில் ... மேலும்
 
temple news
மனிதர்களின் வாழ்க்கையில் சந்திக்கும் பல பிரச்னைகளை பட்டியலிட்டால், கடன் பிரச்னை முதல் இடத்தில் ... மேலும்
 
temple news
ஹாசன் மாவட்டம், முகிகெரேவில் ஸ்ரீ கபாலி பசவேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் முக்கிய தெய்வமாக நந்தி ... மேலும்
 
temple news
பாஞ்சராத்திர தீபம் என்பது மகாவிஷ்ணு ஜோதி வடிவமாகத் தோன்றி, உலகைக் காத்த நாளைக் குறிக்கும் ஒரு தீப ... மேலும்
 
temple news
திருக்கார்த்திகை திருவிழா தமிழர்களின் சிறப்பான வழிபாடுகளில் ஒன்று. இன்று வீடுகளில் தீபமேற்றி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar