Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நெய் வெண்ணெயாக மாறும் அதிசயம் சஷ்டி விரதம்; சரவணபவ சொல்லி ஆறுமுகனை ஆராதிப்போம்..! சஷ்டி விரதம்; சரவணபவ சொல்லி ...
முதல் பக்கம் » துளிகள்
இடதுபுறத்தில் சயன கோலத்தில் ரங்கநாத சுவாமி
எழுத்தின் அளவு:
இடதுபுறத்தில் சயன கோலத்தில் ரங்கநாத சுவாமி

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2025
02:07

துமகூரு மாவட்டம், குனிலில் உள்ளது பெட்டத ரங்கநாத சுவாமி கோவில் எனும் உடமுடி ரங்கநாத சுவாமி கோவில். பல நுாறு ஆண்டுகளுக்கு முன்னர், ஸ்ரீரங்கபட்டணாவை சேர்ந்த ரங்கப்பா என்பவர் இங்கு வந்தார். இங்கு தியானத்தில் மூழ்கியிருந்தார். இங்குள்ள மக்களுக்கு நல்ல, கெட்டதை கூறி வந்தார். அவரும் இங்கேயே ஜீவசமாதி அடைந்தார். இங்கு அவரது பிருந்தாவனம் அமைக்கப்பட்டு உள்ளது. அதன் மீது 5 அடி கல் வைக்கப்பட்டிருந்தது. சில நாட்களில் கல்லில் விஷ்ணு தோன்றியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இங்கு கோவில் கட்டி பக்தர்கள் வழிபட துவங்கினர்.



உதவிய பாம்பு


மலை அடிவாரத்தில் இருந்து இந்த கல்லை மேலே கொண்டுவர மிகவும் சிரமமாக இருந்தது. அப்போது எங்கிருந்தோ வந்த பாம்பும், உடும்பும் இந்த கல்லை மலை உச்சிக்கு கொண்டு செல்ல உதவியதாக கூறப்படுகிறது. அதனாலேயே, ‘உடமுடி ரங்கநாதசுவாமி’ என்றும் அழைக்கின்றனர். இங்கு விசேஷம் என்னவென்றால், வழக்கமாக நாகத்தின் மீது வலதுபுறம் கைவைத்தபடி சயன கோலத்தில் விஷ்ணு அருள்பாலிப்பார். ஆனால், இக்கோவிலில் மட்டும் இந்த கல்லின் கீழ் பகுதியில் நாகத்தின் மீது இடதுபுறம் சயன கோலத்தில் அருள்பாலிக்கிறார்.



உதைக்கப்பட்ட கதவு


வழக்கமாக கோவில்களில் சுவாமி தரிசனம் முடிந்த பின், கோடை நடை சாத்தப்படும். ஆனால் இங்கு கதவுகளே இல்லை என்பது சிறப்பது. சுவாமியை தரிசிக்க தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். ஒரு நாள் வெகு தொலைவில் இருந்து பக்தர்கள் வந்தபோது, நடை சாத்தப்பட்டிருந்தது. இதனால் அவர்கள் வேதனை அடைந்துள்ளனர். இதை பார்த்த விஷ்ணு, கதவை, தனது காலால் எட்டி உதைத்ததாகவும், அந்த கதவு, குனிகல்லில் உள்ள ஏரியில் விழுந்ததாகவும் நம்பப்படுகிறது. பக்தர்கள் எப்போது இங்கு வந்தாலும், எந்த தடையும் இல்லாமல், சுவாமியை தரிசிக்கும் வகையில் கதவுகள் அமைக்கப்படவில்லை.


பக்தர்கள் எண்ணிய காரியங்கள் ஈடேற அருள்பாலிக்கிறார். தினமும் காலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை கோவில் திறந்திருக்கும். இரு சக்கர வாகனம், காரில் வருவோர், மலை உச்சி வரை செல்லலாம். அதற்கான தார்சாலை போடப்பட்டு உள்ளது. அதுபோன்று படிக்கட்டுகள் வழியாகவும் செல்லலாம். அடிவாரத்தில் ஆஞ்சநேயர் கோவில் அமைந்து உள்ளது. படிக்கட்டு வழியாக மலையேறும் பக்தர்கள், ஆஞ்சநேயரை தரிசித்து விட்டு ஏறலாம்.


பக்தர்கள் வசதிக்காக, மலை அடிவாரத்தில் இருந்து உச்சி வரையிலும் மேலே தடுப்புகள் போட்டுள்ளனர். இதனால் வெயிலிலும், மழையினாலும் எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆங்காங்கே அமர்ந்து ஓய்வெடுக்க சிமென்ட் நாற்காலிகள் போடப்பட்டு உள்ளன.

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
திருக்கோவில் வரலாறு: இத்திருக்கோவில் செங்கல்பட்டு என்னும் செங்கழுநீர்பட்டு என்றும் வழங்கப்படும் ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு; செங்கல்பட்டு வ.உ.சி., தெருவில், புகழ்பெற்ற காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பரேஸ்வரர் கோவில், ... மேலும்
 
temple news
ஓம் நல்லரவமே போற்றிஓம் நாக தேவனே போற்றிஓம் அரசடி அருள்பவரே போற்றிஓம் அபயம் அளிப்பவரே போற்றிஓம் ... மேலும்
 
temple news
* அதிகம் பேசாதே. செயலில் ஈடுபடு. இதுவே வெற்றிக்கான ரகசியம்.  * பிறரது கண்ணோட்டத்தில் பிரச்னையை அணுகு. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar