Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடி அனுஷம் ; காஞ்சி மகா பெரியவரின் ... நமது கோவில்.. நமது பெருமை..; உங்கள் கோவில் சிறப்புகளை சொல்லுங்க! நமது கோவில்.. நமது பெருமை..; உங்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இன்று ஆடி செவ்வாய், ஏகாதசி விரதம்; விளக்கேற்றி அம்மன், பெருமாளை வழிபட வேண்டும் வரம் பெறலாம்.!
எழுத்தின் அளவு:
இன்று ஆடி செவ்வாய், ஏகாதசி விரதம்; விளக்கேற்றி அம்மன், பெருமாளை வழிபட வேண்டும் வரம் பெறலாம்.!

பதிவு செய்த நாள்

05 ஆக
2025
10:08

ஆடி மூன்றாம் செவ்வாய், ஏகாதசி விரதமான இன்று வழிபாட்டிற்கான சிறந்த நாள். ஆடி மாதம் அம்மனுக்குரிய மாதமாகப் போற்றப்படுகிறது. ஆடிச் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சில அம்மன் கோயில்களில்   அம்மனுக்கு வளைகாப்பு வைபவம் நடைபெறும். பக்தர்கள் வழங்கும் ஆயிரக்கணக்கான கண்ணாடி வளையல்களை சரம்சரமாகக்  கோர்த்து  அம்மனுக்கு அலங்காரம் செய்வர். மூன்று நாட்கள் கழித்து அந்தக் கண்ணாடி வளையல்களை சுமங்கலிகளுக்குப் பிரசாதமாக  வழங்குவர். இதனால்  சுமங்கலிகள் குடும்பத்தில் நீடூழி சுகமாக வாழ்வர். வளையல்களைப் பிரசாதமாகப் பெறும் கன்னிப் பெண்களுக்கு  விரைவில் திருமணம் கைகூடும்  மக்கட்செல்வம் இல்லாதவர்களுக்கு நல்ல அழகான குழந்தை செல்வம் கிட்டும்.  ஆடிச் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அம்மன் சந்நிதிமுன்  நெய் விளக்கேற்றி வழிபட்டாலும் எலுமிச்சை விளக்கேற்றி  வழிபட்டாலும் தோஷங்கள் விலகும்; சந்தோஷமான வாழ்வுகிட்டும்.ஆடி மூன்றாம் செவ்வாய்யான இன்று அம்மனை வழிபட அனைத்தும் கிடைக்கும். 


பெருமாளை வழிபடுவதற்கு சிறந்த நாள் ஏகாதசி விரதம். ஏகாதசி விரதம் இருப்போர் அளவில்லா செல்வம், உயரிய நிலையை பெறலாம். விஷ்ணுவின் அம்சமாகத் தோன்றிய சக்தியே ஏகாதசி. ஏகாதசி என்று சொன்னாலே பாவம் தீரும் என்றால், பெருமாளை வழிபட எவ்வளவு புண்ணியம் சேரும்..! பெருமாள் மந்திரம், விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பது நல்ல பலன் தரும். கோயிலுக்குச் செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே விளக்கேற்றி வழிபடலாம். ஒவ்வொரு மாதமும் வரும் திருவோணம் பெருமாள் வழிபாட்டிற்கான நாள். பெருமாளின் வாமன அவதாரத்தை போற்றும் நாள் இது. இன்று சிவன், பெருமாளை வழிபட்டு அவர்களின் திருவடியை போற்றுவோம். வீட்டில் விளக்கேற்றி அம்மன், பெருமாளை வழிபட வேண்டும் வரம் பெறலாம்.!

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வாசகர்களே! உங்கள் பகுதியில் உள்ள ஹிந்து கோவில்கள் பற்றிய சிறப்புகளை சேர்க்க இங்கே பதிவு செய்யுங்கள். ... மேலும்
 
temple news
கோவை; ஆடி மாத சுக்ல பக்ஷ ஏகாதசி முன்னிட்டு கோவை மாவட்டம் காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்தபன ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று திங்கட்கிழமை இரவு ஸ்ரீவாரி கோயிலில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோவிலில் 14 நாடுகளில் இருந்து அயலக தமிழர்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோர் ... மேலும்
 
temple news
கோவை; மதுக்கரை மலை மேல் அமர்ந்திருக்கும் தர்மலிங்கேஸ்வரர் கோவில் கடந்த மாதம் கும்பாபிஷேகம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar