Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அனுமனின் ராம பக்தி..! வெற்றி தரும் மைலை ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் வெற்றி தரும் மைலை ஸ்ரீ வீர ஆஞ்சநேயர்
முதல் பக்கம் » துளிகள்
செங்காடு யோக ஆஞ்நேயர் கோவில்; நான்கு கரங்களுடன் சங்கு சக்கரம் ஏந்தி அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
செங்காடு யோக ஆஞ்நேயர் கோவில்; நான்கு கரங்களுடன் சங்கு சக்கரம் ஏந்தி அருள்பாலிப்பு

பதிவு செய்த நாள்

19 டிச
2025
12:12

திருப்போரூர் அடுத்த செங்காடு அருகே யோக ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவில், மிகவும் விசேஷமானது, இங்கு மலையேறாமல், தரையிலேயே யோக ஆஞ்சநேயர் மற்றும் யோக நரசிம்மர் இருவரையும் ஒரே இடத்தில் தரிசிக்கலாம்.


இது சோளிங்கர் தலத்தின் அம்சத்தைப் போன்றது. இங்கு ஆஞ்சநேயர் நான்கு கரங்களுடன் சங்கு சக்கரம் ஏந்தி, ஜெபமாலை மற்றும் முத்திரையுடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். இங்கு, ராமர், சீதை, லக்ஷ்மி, நரசிம்மர், ஹயக்ரீவர், தன்வந்திரி, சக்கரத்தாழ்வார் சன்னதிகளும் உள்ளன. கோவில் விமானத்தின் தோற்றம் வடமாநிலத்தில் இருப்பதுபோன்று அழகிய பாங்குடன் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வழிபட்டால் மன நோய்கள் மற்றும் தீய சக்திகளால் ஏற்படும் பிரச்சனைகள் நீங்கும் என நம்பப்படுகிறது. ஆண்டுதோறும் ஆஞ்சநேயர் ஜெயந்தி, ஆங்கில புத்தாண்டு, பொங்கல், ராம நவமி, கிருஷ்ண ஜெயந்தி, தீபாவளி, பங்குனி உத்சவம் போன்ற பண்டிகை விசேஷ நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. ஒவ்வொறு சனிக்கிழமை சிறப்பு வழிபாட்டில், திருப்போரூர் மற்றும் சுற்றியுள்ள பக்தர்கள் வடமாலை, துளசி மாலை, மலர் மாலை சார்த்தி வழிபாடு செய்கின்றனர். இக்கோவிலுக்கு வரும் செங்காடு வனத்துறை சாலை சீரமைக்கப்பட்டு புதிய சாலை அமைத்ததால் பக்தர்கள் வருகையும் அதிகரித்துள்ளது. இன்று ஹனுமன் ஜெயந்தியை ஒட்டி, சிறப்பு திருமஞ்சனம், அபிஷேக, அலங்கார பூஜை நடக்கிறது.


கோவில் நடை காலை 6:45 முதல் 10:30 வரையும், மாலை 5:30 முதல் 8:30 வரையும் திறந்திருக்கும்.

 
மேலும் துளிகள் »
temple news
நார, அயந என்னும் இரு சொற்கள் கூடி நாராயண என்னும் ஒரு சொல்லாயிற்று நாரம் என்பது உயிர்த்தொகுதி, ... மேலும்
 
temple news
ஏகாதசிக்கு விரதத்திற்கு வயது வரம்பு ஏகாதசி விரதத்திற்கு எல்லாரும் இருக்கவேண்டிய விரதம் என்று தர்ம ... மேலும்
 
temple news
வரவேற்போம்: கன்னி மரியாளிடம் உன் வயிற்றில் பிறக்கும் குழந்தை இம்மானுவேல் (தேவன் நம்மோடு இருக்கிறார்) ... மேலும்
 
temple news
ஆசியாவின் மையப்பகுதியிலுள்ள சிறிய நாடான இஸ்ரேலின் ஜெருசலேம் நகரில்,  பெத்லகேம் என்னுமிடத்தில் ... மேலும்
 
temple news
விநாயகப்பெருமான் முழுமுதல் கடவுளாக விளங்குகிறார். விநாயகரை வழிபடுவதற்குரிய முக்கியமான நாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar