Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news சபரிமலையில் 14-ம் தேதி மாலை 3.08 மணிக்கு ... சபரிமலை மகரஜோதி நாளில் 2500 போலீஸ் பாதுகாப்பு: பூ அலங்காரத்தில் கட்டுப்பாடு சபரிமலை மகரஜோதி நாளில் 2500 போலீஸ் ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
1.60 லட்சம் டின் அரவணை வீண்; 16 ஆயிரம் பாக்கெட் நெய் மாயம்; சபரிமலையில் தொடரும் சர்ச்சைகள்
எழுத்தின் அளவு:
1.60 லட்சம் டின் அரவணை வீண்; 16 ஆயிரம் பாக்கெட் நெய் மாயம்; சபரிமலையில் தொடரும் சர்ச்சைகள்

பதிவு செய்த நாள்

08 ஜன
2026
12:01

சபரிமலை: சபரிமலை மண்டல மகர விளக்கு சீசனில் அரவணை பிரசாதம் தொடர்ந்து தட்டுப்பாடாகவே உள்ளது. தொடக்கத்தில் பக்தர்களின் தேவைக்கு ஏற்ப வழங்கப்பட்ட அரவணை தட்டுப்பாடால் 20 டின்களாகவும் அதன்பின் 10 டின்களாகவும் குறைக்கப்பட்டது. தற்போதும் இந்த கட்டுப்பாடு தொடர்கிறது.


இந்நிலையில் மகரவிளக்கு சீசனில் தயாரிக்கப்பட்ட ஒரு லட்சத்து 60 ஆயிரம் டின் அரவணை கெட்டுப்போய் கெட்டியாகி விட்டது. சர்க்கரை அளவு கூடியதால் தண்ணீரின் அளவு குறைந்து கெட்டியாகி இருக்கலாம் என்று இதனை தயாரிக்கும் ஊழியர்கள் கூறுகின்றனர். இதை விற்பனை செய்யாமல் ஒதுக்கி வைக்கும்படி திருவிதாங்கூர் தேவசம்போர்டு உத்தரவிட்டுள்ளது. இதன் மதிப்பு 1.60 கோடி ரூபாய் ஆகும். தயாரிப்பில் ஏற்பட்ட மெத்தனத்திற்கான காரணம் குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சன்னிதானத்தின் கீழ் இடது பக்கத்தில் தேவசம்போர்டு கவுண்டரில் பக்தர்களுக்கு அபிஷேக நெய் விற்கப்படுகிறது. இங்கு பக்தர்கள் தாங்கள் கொண்டுவரும் நெய்யை கொடுத்துவிட்டு அபிஷேக நெய் பிரசாதமாக வாங்கி செல்லும் வசதியும் உள்ளது. இதற்காக இங்கு வைக்கப்பட்டிருந்த 100 கிராம் நெய் அடங்கிய 16 ஆயிரம் பாக்கெட் மாயமாகியுள்ளது. இதன் மதிப்பு 16 லட்சம் ரூபாய் ஆகும். இது தொடர்பாக சபரிமலை செயல் அலுவலர் பிஜு கொடுத்த அறிக்கையின் பேரில் விஜிலன்ஸ் அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். ஒரு பூஜாரி மற்றும் சில ஊழியர்களுக்கு இதில் தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது. சபரிமலையில் தங்கத் தகடுகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து இந்த சீசனில் பல்வேறு புகார்கள் எழுந்து வருகிறது. தற்போது அரவணை பிரச்னை, நெய் காணாமல் போன விவகாரம் போன்றவையும் விஸ்வரூபம் எடுத்துள்ளன.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை; எருமேலியில் பிரசித்தி பெற்ற அம்பலப்புழா, ஆலங்காடு பக்தர் குழுவின் பேட்டை துள்ளல் நாளை ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதி நாளில் சபரிமலை சன்னிதானத்தில் மட்டும் 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் பக்தர்கள் வருகை தாறுமாறானதால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் மகரஜோதி நாளில் நடைபெறும் பிரசித்தி பெற்ற மகர சங்கரம பூஜை 14 - ம் தேதி மாலை 3.08 மணிக்கு ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் பக்தர் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், 18 படிகளில் ஏற, பக்தர்கள் 10 மணி நேரம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar