Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கிராமத்தின் நன்மைக்காக ... ஆண்டுகளுக்கு முந்தைய துர்கை அம்மன் ஆண்டுகளுக்கு முந்தைய துர்கை அம்மன்
முதல் பக்கம் » துளிகள்
மூங்கில் கூடை போன்று அமைக்கப்பட்ட சன்னிதியில் சயன நிலையில் ரங்கநாதர்
எழுத்தின் அளவு:
மூங்கில் கூடை போன்று அமைக்கப்பட்ட சன்னிதியில் சயன நிலையில் ரங்கநாதர்

பதிவு செய்த நாள்

13 ஜன
2026
01:01

சிக்கபல்லாபூரில் இருந்து நான்கு கி.மீ., துாரத்தில் உள்ளது திப்பேனஹள்ளி கிராமம். இந்த கிராமத்தில், ரங்கநாத சுவாமி கோவில் உள்ளது. இந்தக் கோவிலை பக்தர்கள் ரங்கஸ்தலா என்றே அழைக்கின்றனர். ராவணனை வீழ்த்தி அயோத்திக்கு திரும்பிய பின், ராமருக்கு மன்னராக பட்டாபிஷேகம் நடந்தது. அதில், ராவணனின் சகோதரரான விபீஷணன் பங்கேற்றார்.


சீதையை இலங்கையில் இருந்து மீட்டு வர, விபீஷணன் செய்த உதவிக்காக ரங்கநாதரின் சிலையை, ஒரு மூங்கில் கூடையில் வைத்து இலங்கைக்கு எடுத்துச் செல்லும்படி பரிசளித்தார் ராமர். ராமரின் உன்னதமான செயலை நினைவு கூறும் வகையில், ஏழு முனிவர்கள், ரங்கநாதரின் சிலையை திப்பேனஹள்ளி கிராமத்தில் நிறுவி வழிபட துவங்கினர். பிற்காலத்தில் ஹொய்சாளா ஆட்சியாளர்கள் காலத்தில் அங்கு கோவில் கட்டப்பட்டது.


ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதர் கோவிலுக்கு சென்று விட்டு, இந்தக் கோவிலுக்கு சென்றால் மோட்சம் அடைவர் என்பது ஐதீகம். அதனால், இந்த கோவிலை மோட்ச ரங்கநாதர் கோவில் என்றும் பக்தர்கள் அழைக்கின்றனர். கோவிலில் மூங்கில் கூடை போன்ற வடிவில் அமைக்கப்பட்டுள்ள சன்னதியில், நான்கரை அடி நீளத்தில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட நிலையில், சயன நிலையில் ரங்கநாதர், தனது துணைவியர்களான ஸ்ரீதேவி, பூதேவியுடன் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.


ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் மகர சங்கராந்தி அன்று இந்த கோவிலில், ரங்கநாதர் பாதங்களில் சூரிய ஒளிபடும் நிகழ்வை காணலாம். இக்கோவிலில் ராமானுஜர், சக்கரத்தாழ்வார், வேதாந்த தேசிகன் போன்ற வைணவ துறவிகளின் சன்னதியும் உள்ளது. மகிஷாசுரமர்த்தினி, சதுர் புஜவிஷ்ணு, கிருஷ்ணர், ஹனுமன், கருடர் ஆகியோரின் சிற்பங்களும் பக்தர்களை வெகுவாக கவர்கின்றன. கோவிலில் புனித நீரை தாங்கும் சங்க தீர்த்தம், சக்கர தீர்த்தம் உள்ளன.


இந்த கோவிலின் நடை திங்கள் முதல் வெள்ளி வரை காலை, 8:00 முதல் மதியம் 12:00 மணி வரையும்; மாலை, 4:00 முதல் இரவு 7:00 மணி வரையும் திறந்திருக்கும். சனி, ஞாயிற்றுகிழமைகளில் காலை 7:00 முதல் மதியம் 12:00 மணி வரையும்; மாலை 4:00 முதல் இரவு 8:00 பணி வரையும் திறந்திருக்கும்.


பெங்களூரில் இருந்து சிக்கபல்லாபூர், 66 கி.மீ., துாரத்தில் உள்ளது. மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ் சேவையும் உள்ளது. ரயிலில் சென்றால் சிக்கபல்லாபூர் ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து கோவிலை சென்றடையலாம்.

 
மேலும் துளிகள் »
temple news
தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடியின் பூஞ்சா கிராமத்தில் உள்ளது ஸ்ரீ பஞ்ச துர்கா பரமேஸ்வரி கோவில். ... மேலும்
 
temple news
ஹிந்து மதத்தில், கடவுள்களுக்கு பல்வேறு விதமான வழிபாடுகள் நடைமுறையில் உள்ளன. அவற்றில் சில விசித்திரமான ... மேலும்
 
temple news
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வருவதாலும், எங்கு பார்த்தாலும் இயற்கை எழில் கொஞ்சுவதாலும் ... மேலும்
 
temple news
பெங்களூரை ஐ.டி., நிறுவனங்களின் தலைநகர் என்று கூறுவதுண்டு. இங்கு கப்பன் பூங்கா, லால்பாக் பூங்கா உட்பட, ... மேலும்
 
temple news
‌அமாவாசை, பௌர்ணமியை அடுத்து வரும் ஐந்தாம் திதி பஞ்சமி ஆகும். இது வாராகி அம்மனை வழிபட மிகவும் உகந்த நாள். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar