Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குசேலர் பகுதி-8 குசேலர் பகுதி-10 குசேலர் பகுதி-10
முதல் பக்கம் » குசேலர்
குசேலர் பகுதி-9
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

28 மார்
2011
05:03

கண்ணபிரான் கொலுவிருக்கும் அறை வாசல் அருகேயே அவர் வந்துவிட்டார். அங்கே காவலர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் நெற்றியில் திருநாமம் இட்டு, கைகளில் சங்கு, சக்கர முத்திரை பதித்திருந்தனர். தாமரை மணிமாலை, துளசிமணி மாலை அணிந்திருந்தனர். ஆஜானுபாகுவாக நின்ற அவர்களைக் கண்டதும், இவர்கள் வைகுண்டத்தில் எம்பெருமானுக்கு பாதுகாவல் அளிக்கும் ஜெயவிஜயர்கள் என்றே குசேலர் கருதினார். சில மன்னர்கள் அவர்களிடம் தங்களைப் பற்றி அறிமுகப்படுத்தி கண்ணனைக் காண வந்திருக்கும் விஷயத்தைக் கூறிக்கொண்டிருந்தனர். குசேலரும் தன் முறைக்காகக் காத்திருந்தார். அவர் க்ஷவரம் செய்து பல நாட்கள் ஆகியிருந்தது. முகத்தில் குறுந்தாடி. நீண்டநாள் நடந்து வந்ததில் ஆடைகள் மேலும் நைந்து போனதால், இதை விட கிழிசலாக உலகில் ஒரு துணி இல்லை என்ற அளவிலேயே அவரது ஆடை அமைந்திருந்தது.அவர் காவலர்களின் அருகே சென்றார்.அன்புள்ளம் கொண்டவர்களே! இவ்வுலகில் பிறந்த மக்களிலேயே புண்ணியம் பெற்றவர்களே! பிரம்மாவும் பெரும் தவம் செய்த முனிவர்களும் கூட அடைய முடியாத பாக்கியத்தைப் பெற்றவர்களே! சகலகலா வல்லவர்களே! உங்களுக்கு  என் ஆசிர்வாதம், என்று ஆரம்பித்தார். ஒரு பெரிய இடத்துக்குச் செல்கிறீர்கள். வாசலில் யாரெல்லாமோ முக்கியஸ்தர்கள் நிற்பார்கள். ஆனால், அலுவலகப் பையன் உள்ளே போவதும் வருவதுமாக இருப்பான். வெளி உலகுக்கு அவன் சாதாரண வேலைக்காரன். ஆனால் முக்கியஸ்தரைப் பார்க்க, அவனை மீறி யாராலும் நுழைய முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இடத்தில் முக்கியத்துவம்.

சாதாரண அலுவலகங்களுக்கே இப்படியென்றால், தெய்வத்தின் வீட்டில் வாயில் காவலனாக இருப்பவர்களுக்கு எவ்வளவு அதிகாரம் இருக்கும்? பிரம்மாவும், முனிவர்களும் வந்தால் கூட அவர்களிடம் தான் அனுமதி கேட்டாக வேண்டும். அவர்களை அனுமதிக்கும் உத்தரவு பெற இவர்கள் கண்ணனைக் காண ஓட வேண்டும்! முக்கியஸ்தர் ஒருமுறை மட்டும் தான் தெய்வ தரிசனம் பெற முடியும். ஆனால், இறைவனுக்கு தொண்டு செய்பவர்களோ தினமும் அவரைப் பலமுறை பார்க்கலாம். பல்லக்கில் வீதியுலா வரும் சுவாமியை தெருவில் நிற்கும் பக்தன் எம்பிக்குதித்து தான் பார்க்க வேண்டும். பல்லக்கை சுமப்பவன், ஒவ்வொரு முறையும் அதை கீழே இறக்கி வைக்கும்போதும் பார்க்க முடியுமல்லவா!குசேலர் தொடர்ந்தார்.உங்களைப் பார்த்தவுடன் அந்த பரந்தாமனையே பார்த்த மகிழ்ச்சி ஏற்படுகிறது. திருமகளின் நாயகனுக்கு சேவை செய்யும் நீங்கள் மிகவும் உயர்ந்தவர்கள், மாசு மருவற்றவர்கள். என் பெயர் குசேலன். இளமையில் கண்ணபிரானுடன் குருகுலத்தில் ஒன்றாகப் படித்தவன். நான் வந்த நோக்கத்தைச் சொல்கிறேன். ஆற்றைக் கடக்க விரும்புபவன் படகில் ஏறி, படகோட்டியின் உதவியால் கரை சேர்கிறான். அதுபோல், பிறவிக்கடலைக் கடந்து முக்தி பெற விரும்புபவன் இறைவனின் திருவடியை நாடுகிறான். நான் எம்பெருமானைத் தரிசித்து முக்திபெறும் நோக்கத்தில் வந்திருக்கிறேன். அவன் கருணைக்கடல். கோகுலத்து ஆயர்களை இந்திரன் கல்மழை பெய்வித்து துன்பம் செய்தான். பகவான் கோவர்த்தனகிரியை உயர்த்திப் பிடித்து அவர்களைக் காப்பாற்றினார். அத்தகைய கருணைக்கடலிடம், தாங்கள் என் வருகையை தெரிவித்து, அவரை சந்திக்க அனுமதி பெற்றுத் தர வேண்டும், என்று கேட்டுக் கொண்டார். சுகப்பிரம்ம முனிவர், பரீட்சித்து மன்னனிடம் இந்தக் கட்டத்தைச் சொல்லும் போது அவரது நா தழுதழுத்தது. பரீட்சித்துவும் உருக்கத்துடன் கேட்டான்.மாமுனிவரே! தாங்கள் நா தழுதழுப்பதைப் பார்த்தால் குசேலருக்கு ஏதோ அவமானம் இழைக்கப்பட்டதாகத் தெரிய வருகிறதே! என்னாயிற்று! துவாரபாலகர்கள் அவரை அனுமதித்தார்களா இல்லையா என அவசரப்படுத்தினார்.

சுகப்பிரம்மர் கவலை பொங்கும் முகத்துடன் கதையைத் தொடர்ந்தார்.பரீட்சித்து! நீ நினைப்பது சரியே! குசேலர் சொன்னது கேட்டு, அருகில் நின்ற மன்னர்கள் சிலர் ஏளனம் செய்தனர்.ஏ பிராமணனே! இவ்வுலகம் மட்டுமின்றி, எவ்வுலகுக்கும் தலைவனான கிருஷ்ண பரமாத்மா எங்கே! நீ எங்கே? துவாரங்கள் கொண்ட ஆடையை அணிந்த நீ, துவார பாலகர்களிடம் கண்ணனைச் சந்திக்க அனுமதி கேட்கிறாயே! உனக்கு வெட்கமாக இல்லை. கண்ணனைச் சந்திக்க ஒரு தகுதி வேண்டாமா! உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கிறதா? இப்படி வீணான சிந்தனைகளை செய்தே நீ விரைவில் கிழவனாகி விட்டாய் போலும்! என்று ஒருமையில் பேசி இகழ்ந்தனர். அதோடு விட்டார்களா! இன்னும் இழிவான சொற்கள் அவர்களது வாயில் இருந்து வெளிப்பட்டன.ஏய் பிராமணா! நீயும் கண்ணனும் ஒன்றாகப் படித்ததாகச் சொல்கிறாயே! அவர் பலமிக்கவர். அவரது யானைகள் மன்னர்கள் அணிந்துள்ள ஒளிமிக்க கிரீடங்களைப் பந்தாடி மகிழும். அவருடைய யானைகளுக்கே பொன்னாலான கிரீடங்கள் பந்து என்றால், அவரது செல்வத்தின் அளவு எத்தகையதாக இருக்கும். அவருடன் படித்தவர்கள் இப்படி கந்தையுடன் திரிவார்கள் என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. அப்படியே நீ படித்திருந்தாலும் அவரது இன்றைய நிலைக்கு நீ கொசுவுக்கு சமமானவன். அவர் கடல், நீ குழிக்குள் கிடக்கும் நீர். அவர் சூரியன், நீ மின்மினிப்பூச்சி. அவர் மரம், நீர் பயன்படாத புல். அவர் ஆதிசேஷன். நீ பூச்சி என்று கடுமையான வார்த்தைகளால் நிந்தித்தனர். இன்று நேற்றல்ல! எளியவனை வலியவன் எந்த யுகத்திலும் இப்படித்தான் பார்த்திருக்கிறான்.இத்தோடு விட்டார்களா அந்தக் கயவர்கள்! குசேலரைப் பயமுறுத்தும் வகையில், கண்ணனைப் பார்க்க என்னென்ன தகுதிகள் வேண்டும் என்று பட்டியலிட ஆரம்பித்தார்கள். அதைக்கேட்டு, குசேலருக்கு தலை சுற்ற ஆரம்பித்து விட்டது. இந்த தகுதிக்கு நான் எங்கே போவேன்? கண்ணா! மணிவண்ணா! உன்னைக் காண முடியுமா! அவரது கண்களில் நீர் முட்டியது.

 
மேலும் குசேலர் »
temple news

குசேலர் பகுதி-1 மார்ச் 28,2011

குழந்தை தன் முன்னால் நின்ற ஒவ்வொருவரையும் விழித்து விழித்துப் பார்த்தது. அதன் பார்வை தீர்க்கமாக ... மேலும்
 
temple news

குசேலர் பகுதி-2 மார்ச் 28,2011

அவந்தி நகரத்தில் இருந்த மலையில் கோயிலில் மட்டுமே நாம் காணும் யாளி என்னும் மிருகம் கூட உண்டு. சிங்கம், ... மேலும்
 
temple news

குசேலர் பகுதி-3 மார்ச் 28,2011

குருகுலத்தில் கல்வி கற்கும் நேரம் தவிர, அவர்கள் இருவரும் பல விஷயங்களைப் பேசுவார் கள். அப்படி பேசும் ... மேலும்
 
temple news

குசேலர் பகுதி-4 மார்ச் 28,2011

சாந்தீப முனிவரின் வாக்கிற்கு ஏற்பவே கண்ணனுக்கு அருமையான வாழ்வு அமைந்தது. அவன் துவாரகாபுரியின் ... மேலும்
 
temple news

குசேலர் பகுதி-5 மார்ச் 28,2011

குசேலர் வீட்டுக் குழந்தைகளுக்கு, அவரது பக்கத்து வீட்டு குழந்தைகள் அணிந்திருப்பது போல் அழகிய தங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar