Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குசேலர் பகுதி-12 குசேலர் பகுதி-14 குசேலர் பகுதி-14
முதல் பக்கம் » குசேலர்
குசேலர் பகுதி-13
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

28 மார்
2011
05:03

நீண்ட தூரம் சென்று விட்ட சைதன்யர் ஏனோ நின்றார். அப்படியே திரும்பினார். அவருடன் சென்றவர்களுக்கு ஏதும் புரியவில்லை. மீண்டும் ஸ்ரீகூர்மம் கிராமத்தை நோக்கி நடந்தார். ஊர் மக்களுக்கு ஆச்சரியம். சைதன்யர் ஏன் மீண்டும் திரும்பி வந்தார் என்று! அவர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை என்றாலும், மீண்டும் ஒருமுறை அவரது தரிசனம் கிடைத்தது குறித்து ஏக சந்தோஷம்! சைதன்யர் அவர்களிடம் கேட்ட முதல் கேள்வி, கோஷ் எங்கே? என்பது தான். இவர் ஏன் அந்த தொழு நோயாளியைத் தேடுகிறார்! அவரிடம் பக்தர்கள் பணிவுடன் பதில் சொன்னார்கள். அதோ! அந்த இடத்திலே தான் இருப்பார். சைதன்யர் அங்கே சென்றார். கோஷூக்கு என்ன செய்வதென்றே தெரிய வில்லை. காண்பது கனவா! நனவா! சைதன்யமகாபிரபு நீண்ட நெடுந்தூரம் சென்று விட்டார்கள் என்றார்களே! அவர் இங்கே மீண்டும் எப்படி... அவர் பரவசத்தில் நின்றார். எல்லாரும் கூட்டத்தோடு கூட்டமாக நின்று அவரைத் தரிசித்தனர். எனக்கோ அவர் தனித்து காட்சியளிக் கிறார். என்ன இது விந்தை....அந்த விந்தை உணர்ச்சிப்பெருக்காக சற்று நேரத்தில் மாறியது. ஆம்...கோஷ் அருகில் சைதன்யர் சென்றார். அவரை அப்படியே தழுவிக் கொண்டார். ஈயும் புழுக்களும் மொய்த்து  சீழ் வடியும் இந்த பாழ் உடலை  இவர் தழுவினாரே! ஐயோ! மகா பிரபுவுக்கு இந்த கொடிய நோய் தொற்றிக் கொள்ளுமே என்று கோஷ் பரபரத்தார். ஆனால், சைதன்யர் அவரை நீண்ட நேரம் ஆலிங்கனம் செய்து அவருடன் உரையாடினார். இதுதான் நிஜமான பக்திக்கு கிடைத்த மரியாதை! இதே நிலை தான் இப்போது குசேலருக்கு! காசைப் புறக்கணித்த  பகவான் கந்தலை அணைத்துக் கொண்டிருக்கிறார்.

கிருஷ்ணர் அவரை இல்லத்துக்குள் அழைத்துச் சென்றார். குசேலா! நீ வந்ததால் எங்கள் இல்லம் பாக்கியம் செய்ததாக மாறியது. நான் அனுஷ்டித்த தர்மங்களுக்கு பலன் இன்று தான் கிடைத்தது, என்று புகழாரம் சூட்டினார். அவரை ஒரு ஆசனத்தில் இருத்தி அவரது பாதத்தைக் கழுவினார். தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொண்டார். பாமா, ருக்மணி உள்ளிட்ட தேவியர் அவரிடம் ஆசி பெற்றனர். பின்னர் அவரை புனித நீராடச் செய்து, சூரிய ஒளியையும் மிஞ்சும் வகையில் மின்னும் பட்டாடை ஒன்றை  அணிவிக்கக் கொடுத்தனர். பளிச்சென மின்னிய குசேலரின் உடலில் கண்ணபிரான் சந்தனமும் கஸ்தூரியும் கலந்த கலவையை பூசினார். புத்தம் புது மலர்களால் தொடுத்த மாலையை அணிவித்தார். சுகப்பிரம்ம முனிவர் பரீட்சித்து ராஜாவுக்கு இந்த கட்டத்தைச் சொல்லிக் கொண்டிருந்த போது, ராஜா அப்படியே கண் மூடி அமர்ந்திருந்தார்.  அவனது எண்ணம் இப்போது மரணத்தில் இல்லை, இன்னும் இரண்டு மூன்று நாளில் இறந்து போவோமே என்ற பயம் சிறிதும் இல்லை. குசேலருக்கு எப்படி இந்த உபசாரத்தையெல்லாம் கண்ணன் செய்தானோ, அதை நமக்கும் செய்வானா என்று கற்பனை செய்து பார்த்தார். ஆம்...இறை  நினைவில் திளைத்துக் கிடப்பவனுக்கு இறப்பைப் பற்றிய பயம் எப்படி எழும்? சுகப்பிரம்மர் கதையைத் தொடர்ந்தார். கேள் பரீட்சித்து! இன்னும் பல உபசாரங்கள் குசேலருக்கு நடந்தன. குசேலரை இருக்கையில் அமர்த்தி அவருக்கு தூபம் காட்டினார் கிருஷ்ணர். அடுத்து நெய்தீப ஆராதனை செய்தார். பின்னர் ஆரத்தி பாத்திரத்தை  எடுத்துச் சுற்றினார். தேவர்கள் பாற்கடலைக் கடைந்த போது கிடைத்த அமிர்தத்தின் சுவை எப்படி இருந்ததோ அதையும் மிஞ்சும் சுவையுடைய உணவை அளித்தார்.

சாப்பிட்டு முடியும் வரை அருகில் இருந்து உபசரித்தார். அத்தோடு விட்டாரா! சாப்பிட்டு முடித்ததும், அவரது கைகளைக் கழுவி விட்டதோடு, வாயையும் துடைத்து விட்டாராம் அந்த மகானுபாவருக்கு!நினைத்துப் பார்க்க முடியாத கொடுப்பினை குசேலருக்கு! என்ன நடக்கிறது என்றே  அவருக்குப் புரியவில்லை. இந்த உபசாரங்களை மறுக்கவோ, தடுக்கவோ அவரால் முடியவில்லை. என்றோ ஒருநாள் நம்முடன் படித்த ஒரு சிநேகிதன் இப்படியெல்லாமா சேவகம் செய்வான்! அதனால் தானே பாரதி பாடினார்.நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனுமாய், பண்பிலே தெய்வமாய், பார்வையிலே சேவகனாய்... என்று.குசேலர் சித்தப்பிரமை பிடித்தவர் போல அமர்ந்திருந்தார். ஆனால், வாய் மட்டும் கிருஷ்ண நாமத்தை உச்சரித்துக் கொண்டிருந்தது. அவரது மூக்கு கிருஷ்ணர் அணிந்திருந்த துளசிமாலையின் மணத்தை முகர்ந்து கொண்டிருந்தது. அவரது உடல் கண்ணனின் உடலுடன் அவ்வப்போது உராய்ந்தது. கண்கள் கண்ணனின் திருமேனி அழகை குளிரக் குளிரப் பார்த்தன. செவிகள் கண்ணன் பேசிய உபசார மொழிகளைக் கேட்டன. இப்படி ஐம்புலன்களையும் கண்ணனுக்குள்ளேயே ஒடுக்கிக் கிடந்தார் குசேலர். இப்படி தன்னிலை மறந்து அமர்ந்திருந்த நண்பனின் மவுனத்தை கண்ணபிரான் கலைத்தார். வேதங்களைத் தெளிவாக கற்ற நண்பனே! உன்னைப் பார்த்ததால் என் உடல் பூரிக்கிறது. உன்னைச் சந்தித்ததால் தேவர்களாலும் முனிவர்களாலும் மன்னாதி மன்னர்களாலும் இதுவரை காண முடியாத அரிய தரிசனத்தைப் பெற்றது போன்ற உணர்வடைகிறேன். பாக்கியம் செய்திருந்தால் தானே இப்படிப்பட்ட ஒரு சந்திப்பு நிகழும்! என்ற கண்ணன் இப்போது தன் பேச்சில் உச்சத்தைத் தொடுகிறான்.எப்படி தெரியுமா!குசேலா! எனக்கு உன் அருள் வேண்டும். அது எப்போதும் நிலைத்திருக்க வேண்டும்! நீ என்னை மறக்காதது போல நானும் உன்னை மறக்காத தன்மையை அருள வேண்டும்! என்றார்.யார் பகவான் என்றே சந்தேகம் வந்து விட்டதா என்ன!

 
மேலும் குசேலர் »
temple news

குசேலர் பகுதி-1 மார்ச் 28,2011

குழந்தை தன் முன்னால் நின்ற ஒவ்வொருவரையும் விழித்து விழித்துப் பார்த்தது. அதன் பார்வை தீர்க்கமாக ... மேலும்
 
temple news

குசேலர் பகுதி-2 மார்ச் 28,2011

அவந்தி நகரத்தில் இருந்த மலையில் கோயிலில் மட்டுமே நாம் காணும் யாளி என்னும் மிருகம் கூட உண்டு. சிங்கம், ... மேலும்
 
temple news

குசேலர் பகுதி-3 மார்ச் 28,2011

குருகுலத்தில் கல்வி கற்கும் நேரம் தவிர, அவர்கள் இருவரும் பல விஷயங்களைப் பேசுவார் கள். அப்படி பேசும் ... மேலும்
 
temple news

குசேலர் பகுதி-4 மார்ச் 28,2011

சாந்தீப முனிவரின் வாக்கிற்கு ஏற்பவே கண்ணனுக்கு அருமையான வாழ்வு அமைந்தது. அவன் துவாரகாபுரியின் ... மேலும்
 
temple news

குசேலர் பகுதி-5 மார்ச் 28,2011

குசேலர் வீட்டுக் குழந்தைகளுக்கு, அவரது பக்கத்து வீட்டு குழந்தைகள் அணிந்திருப்பது போல் அழகிய தங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar