கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
முருகன் -அழகன்.பிள்ளையார் -சிவனுக்குப் பிள்ளை. தற்போது கணபதிக்குரிய இப்பெயர் முற்காலத்தில் முருகனுக்கும் இருந்தது என்கிறார் நச்சினார்க்கினியர்.சித்தன் -அன்பர்களுக்கு ஸித்தியை வழங்குபவன்.சேயோன் -செந்நிறம் உடையவன்.வேள் -எல்லாரலும் விரும்பப்படுபவன், நீண்ட புகழ் உடையவன்.வேலன் -வெற்றி தரும் வேலை உடையவன்.அரன் மகன் -சிவனின் புத்திரன்.அறுமீன் காதலன் -கார்த்திகை மாதர்களால் வளர்க்கப்பட்டவன்.அறுமுகன் -ஆறு முகங்களை உடையவன்.குரு -சிவனுக்கு பிரணவமாகிய ஓம் என்பதன் பொருள் உரைத்தவன்.கோழிக்கொடியோன்-சேவலைக் கொடியாக உடையவன்.கங்கை மைந்தன் -தீப்பொறிகளைச் சுமந்த கங்கையின் மகன்.கடம்பன் -கடம்ப மலர் மாலை உடையவன், நித்ய சுத்தமானவன்.கந்தன் -வலிமையான தோள்களை உடையவன், பார்வதியால் ஒன்று சேர்க்கப்பட்டவன். காங்கேயன் -கங்கை மைந்தன்கார்த்திகேயன் -கார்த்திகைபெண்களால் வளர்க்கப்பட்டவன்.குகன் -மலைக்குகைகளில் குடி கொண்டிருப்பவன், பக்தர்களின் மனக்குகையில் இருப்பவன்.குமரன் -சிவனின் மைந்தன், அருவருப்பை அழிப்பவன், ஆணவத்தைப் போக்குபவன்.குழகன் -அழகன், இளமையானவன்.குறிஞ்சி வேந்தன் -மலைகளில் ஆட்சி புரிபவன், மலை போல் உயர்ந்த மனங்களில் இருப்பவன்.குன்றெறிந்தோன் -கிரவுஞ்ச மலையைத் தகர்த்தவன்.கவுரி நந்தனன் -உமாதேவியின் மைந்தன்.சண்முகன் -ஆறு முகம் கொண்டவன்.சரவணபவன் -நாணற்புல் நிறைந்த பொய்கையில் தோன்றியவன்.சிலம்பன் -காலில் சிலம்பணிந்தவன், மலைகளில் இருப்பவன்.சுரேசன் -துன்பம் நீக்குபவன்.சூர்ப்பகைவன் -எதிரிகளுக்கு அச்சமூட்டுபவன்.செட்டி - உப்பூரிகுடி கிழார் மகனாய் செட்டி மரபில் தோன்றியவன்.சேந்தன் -சிவப்பு நிறமுடையவன்சேவற்கொடியோன்-சேவலைக் கொடியில் தாங்கியவன்.தெய்வானை காந்தன்-தெய்வானையின் கணவன்.தேவசேனாபதி -சேனைக்குத் தலைவன்.பாவகி, பாவகாத்மஜன் -பரிசுத்தம் உடையவன்.மஞ்ஞையூர்தி -மயிலை வாகனமாகக் கொண்டவன்.மாயோன் மருகன்-திருமாலின் மருமகன்.வள்ளி மணாளன் -வள்ளியின் கணவன்.பாகுலேயன் -கார்த்திகேயன்.விசாகன் -வைகாசி விசாக நட்சத்திரத்தில் பிறந்தவன், மயலில் சஞ்சரிப்பவன்.சங்கத்தலைவன் -கலைகளை உணர்ந்த புலவன்.சாமி -செல்வன்.முத்தையன் -முத்துப்போல் சிறந்தவன், மாபெரும் குரு.சுப்பிரமணியன் -வேதங்களின் தலைவன், ஆனந்தமயமான சிவனிடமிருந்து பிறந்தவன்.