ராசிக்கு 6- ல் இருக்கும் ராகு தொடர்ந்து நன்மை தருவார். சுக்கிரன் ஜூலை 2ல் கடகத்தித்தில் இருந்து சிம்மத்திற்கு மாறினாலும் மாதம் முழுவதும் நன்மை தருவார். சூரியன்,செவ்வாய் மிதுனத்தில் இருந்து முன்னேற்றத்தை தருவர். தற்போது ரிஷபத்தில் இருக்கும் புதன் ஜூன் 28ல் மிதுனத்திற்கு மாறினாலும் நன்மை தர மாட்டார். ஆனால் அவரே ஜூலை 15ல் கடகத்திற்கு மாறி நன்மை தர தொடங்குவார். குரு பகவான் ஜூலை 5ல் ராசிக்கு 5-ம் இடத்துக்கு செல்கிறார். இது சிறப்பான நிலை. குடும்பத்தில் மகிழ்ச்சியைத் தருவார். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சி நல்ல முறையில் நடந்தேறும். பொருளாதார வளம் மேம்படும். குடும்பத்தில் பக்தி உயர்வு மேம்படும். புதிய முயற்சியில் வெற்றி உண்டாகும். வீடு மனை வாங்கும் யோகம் உண்டு.
தொழில், வியாபாரத்தில் ஆதாய நோக்குடன் செயல்பட்டு அமோக லாபம் காண்பீர்கள். ஜூன் 28க்குப் பிறகு அரசு வகையில் பிரச்னை வரலாம்.
பணியாளர்கள் சிறப்பான பலன் காண்பர். சிலர் வேலை விஷயமாக வெளியூர் செல்ல நேரிடும்.
கலைஞர்கள் சுக்கிரனின் பலத்தால் முன்னேற்றம் காண்பர்.
அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவால் வளர்ச்சி அடைவர்.
மாணவர்கள் அக்கறையுடன் படித்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும். ஜூன் 28க்கு பிறகு முன்னேற்றம் உண்டாகும்.
விவசாயிகள் நன்மை கிடைக்கப் பெறுவர். குறிப்பாக நெல். கோதுமை சோளம் மற்றும் மானாவாரி பயிர்கள் நல்ல மகசூலை கொடுக்கும்.
பெண்கள் முன்னேற்றத்துடன் காணப்படுவீர். கணவனின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். பெற்றோர் வீட்டில் இருந்து உதவி கிடைக்கும். சுபவிஷயம் குறித்த பேச்சு அடிக்கடி நடந்தேறும். புண்ணியதலங்களுக்கு சென்று மகிழ்வீர்கள்.
நல்ல நாள்: ஜூன் 17, 18, 26, 27, 28, ஜூலை 3, 4, 5, 6, 7, 10, 11, 14, 15
கவன நாள்: ஜூன் 29, 30 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 3, 9 நிறம்: வெண்மை செந்துõரம்
வழிபாடு: சனி, புதனுக்கு சிறப்பு அர்ச்சனை செய்யலாம். பைரவருக்கு ராகுகாலத்தில் பூஜை செய்யுங்கள். முருகனை வழிபடுங்கள்.
மேலும்
வைகாசி ராசி பலன் (14.5.2024 முதல் 14.6.2024 வரை) »