பெருமாள் கோயில்களில் துளசி இலைகளை பிரசாதமாக கொடுப்பார்கள். இதை சனிக்கிழமை, ஏகாதசி, நாட்கள், திருவோண நட்சத்திரம் வரும் நாட்களில் பெறுவது மிகவும் நல்லதாகும். இப்படிப்பட்ட துளசியை எப்போதெல்லாம் செடியில் இருந்து பறிக்க கூடாது. என்பதற்கு விதிமுறைகள் உள்ளன. பவுர்ணமி, ஞாயிற்றுக்கிழமை, சங்கராந்தி தினம், நடுப்பகல், இரவு, சூரியோதயத்திற்கு பிறகு மற்றும் எண்ணெய் தேய்த்த உடம்புடனும், குளிக்காமலும் துளசி இலையை பறிக்கக் கூடாது.