கும்பகோணம் மகாமக குளத்திற்கு அரசலாறு தண்ணீர் திறப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22பிப் 2016 07:02
கும்பகோணம்: கும்பகோணம் மகாமகத்தின் முக்கிய நிகழ்ச்சியான தீர்த்தவாரி இன்று நடைபெற உள்ள நிலையில், குளத்தின் தென் மேற்கு திசை வழியாக அரசலாறு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஏற்கெனவே குளத்தின் வடமேற்கு திசையில் கடந்த பத்து நாட்களாக நகராட்சி சார்பில் தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில், இன்று அரசலாறு தண்ணீர் திறந்து விடப்பட்டது பக்தர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.