பதிவு செய்த நாள்
22
பிப்
2016
11:02
கும்பகோணம்: மகாமக தீர்த்தவாரி நிகழ்ச்சிக்கு போக முடியாத பக்தர்கள் சென்னையில் பிரசாதம் பெற்றுக் கொள்ள, அறநிலையத்துறை ஏற்பாடு செய்து உள்ளது.
மகாமக தீர்த்தவாரி பிரசாதம் அடங்கிய சிறிய பெட்டி, சென்னையில் உள்ள அறநிலையத்துறை தலைமை அலுவலகத்திலும், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலிலும் கிடைக்கும்; இதற்கு, 150 ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
பிரசாத பெட்டியில், கும்பகோணம் சாரங்கபாணி, ஆதிகும்பேஸ்வரர் கோவில் பிரசாதம், மகாமக தீர்த்தம், கும்பகோணத்தில் உள்ள, 17 கோவில்களின் கையடக்க ஸ்தல வரலாற்று புத்தகமும் உள்ளன. இதற்கு, www.mahamaham 2016.in/holywater என்ற இணையதளத்திலும் முன்பதிவு செய்யலாம்.
சென்னையில் இருந்து 600 பஸ்கள் இயக்கம்: கும்பகோணம் மகாமகம் விழாவுக்கு செல்வோர் வசதி கருதி, சென்னை, கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து, பிப்., 19 முதல், நேற்று வரை போதிய சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பில், 150 பஸ்கள்; பிற கழகங்களில் இருந்து, 50 பஸ்கள் என, தினமும், 200 பஸ்கள் இயக்கப்பட்டன. மூன்று நாட்களில், 600 பஸ்கள் இயக்கப்பட்டன என்றார்.