கும்பகோணம் சாரங்கபாணியைக் கண்ட திருமழிசை ஆழ்வார், தன்னை லட்சுமி தாயார் போல் உருவகப்படுத்திக் கொண்டார். கணவனிடம் மனைவி எப்படி அன்பு மொழி கூறுவாளோ அதுபோல, பெருமாளே! காட்டில் நடந்து உன் (ராமன்) கால்கள் நொந்து விட்டதா? அதனால், காவிரிக்கரையான கும்பகோணத்தில் பள்ளி கொண்டு விட்டாயா! எழுந்து பேசமாட்டாயா?, என்று பரிவுடன் பாடினார். இதைக் கேட்ட பெருமாள் எழ முயற்சித்தார். அவ்வாறு எழ முயன்ற கோலத்தில் இங்கு காட்சியளிக்கிறார். இதனை உத்தான சயனம் என்பர். பெருமாள் மீது அன்பு கொண்ட திருமழிசையாழ்வாருக்கு பிரான் என்ற சொல்லைச் சேர்த்து திருமழிசை பிரான் என்ற சிறப்பு பெயர் உண்டானது.