Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வருணன் விட்ட கடலை வற்றச் செய்த கதை எல்லாம் வல்ல சித்தர் எல்லாம் வல்ல சித்தர்
முதல் பக்கம் » ஸ்ரீ ராஜ மாதங்கி » 8. திருவிளையாடற்புராணம் சுருக்கம்
நான்மாடக் கூடலான வரலாறு
எழுத்தின் அளவு:
நான்மாடக் கூடலான வரலாறு

பதிவு செய்த நாள்

02 ஆக
2018
04:08

மதுரையை அழிக்கத்தான் மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்ததால் வருணன் கோபம் கொண்டான். இது சோமசுந்தரக் கடவுளின் திருவிளையாடல் என்பதை அவன் உணரவில்லை. ஏழு மேகங்களையும் அழைத்தான். உலகில் உள்ள எல்லாக்கடல் நீர்களையும் குடித்து, மதுரையில் பேய் மழையாய்ப் பொழிந்து அந்நகரையே அழித்து வருமாறு கட்டளையிட்டான்.வருணனின் கட்டளையை மேகங்கள் நிறைவேற்றின. கடல்கள் அனைத்தும் வற்றுமாறு நீர் பருகி, உடல் கருத்து மதுரை நகரை மேகங்கள் முற்றுகை இட்டன. இடி முழக்கமிட்டன.

அபிஷேகப் பாண்டியனும் நகர மக்களும் பயந்து நடுங்கினர். சோமசுந்தரக் கடவுளிடம் ஓடினர். திருவடிதொழுது முறையிட்டனர். இறைவனும் தம் முடி மீதுள்ள நான்கு மேகங்களையும் அழைத்தார். "நீங்கள் நால்வரும் நான்கு திசைகளிலும் நான்கு மாடங்களாய் நின்று ஏழு மேகங்களையும் விலக்குவீர்! என ஆணையிட்டார். இறைவனின் ஆணை வழி நான்கு மேகங்களும் மதுரையைச் சூழ்ந்து, வளைத்துக் காத்து நின்றன. அவற்றின் மீது விழுந்த மழைத்துளிகள் உடைந்து சிதறின.

வருண தேவன் வெட்கமுற்றான். இதனை சிவனாரின் திருவிளையாடல் என்பது உணர்ந்தான். பெற்றாமரைக் குளத்திற்கு வந்தான். குளத்தை நெருங்கியதுமே நெடுநாட்கள் அவனை வாட்டிக்கொண்டிருந்த வயிற்றுவலி நீங்கியது. குளத்தில் நீராடி சோமசுந்தரக் கடவுளைத் தொழுது தன் அறியாமையாற் செய்த பிழையை மன்னிக்குமாறு வேண்டினான். வருணனின் மேகங்களைத் தடுப்பதற்காகச் சிவனார் அனுப்பிய நான்கு மேகங்களும் நான்கு மாடங்களாய்க் கூடி நின்றமையால் மதுரை நகர் நான்மாடக்கூடல் என்னும் பெயரையும் பெற்றது.

 
மேலும் ஸ்ரீ ராஜ மாதங்கி 8. திருவிளையாடற்புராணம் சுருக்கம் »
temple news
பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற்புராணம்அறுபத்து நான்கு திருவிளையாடல்கள் சுருக்கம்வேதியா வேதா கீதா ... மேலும்
 
temple news
தேவர்களின் அரசன் தேவேந்திரன். இவன் "விருத்திகாசுரன் என்ற கொடிய அரக்கனைக் கொன்றான் எனவே "பிரம்மஹத்தி ... மேலும்
 
temple news

வெள்ளை யானை ஜூலை 26,2018

காசி நகரில் கங்கைக் கரையில் சிவலிங்கத்திற்குப் பூஜை செய்து வந்தார் துருவாச முனிவர். அவரது பக்திக்கு ... மேலும்
 
temple news

கடம்பவனம் ஜூலை 26,2018

மதுரை தோன்றுவதற்கு முன், பாண்டிய மன்னன் "மணவூர் என்னும் ஊரைத் தலைநகரமாக் கொண்டு ஆட்சிபுரிந்து வந்தான். ... மேலும்
 
temple news
பாண்டிய அரசன் மலயத்துவசன். இவன் சோழ மன்னனான சூரசேனின் மகள் காஞ்சனமாலையை மணந்து கொண்டான். ஆண்டுகள் பல ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar